சனி, 23 அக்டோபர், 2010

“பூத்” ஏஜெண்டுகள் கூட இல்லாத கட்சி: தமிழக காங்கிரசுக்கு திருமாவளவன் கண்டனம்!

கால் முளைச்ச நெருப்பு என்ற குறுந்தகடு வெளியிட்டு விழா சென்னை தியாகராய நகரில் நேற்று நடந்தது.
 
விழாவில் கவிஞர் அறிவுமதி பேசும்போது, திருமாவளவனை பார்த்து பதவி விலக சொல்கிறார்கள். தலித்துகள் பாராளுமன்றம் போக காங்கிரஸ் மறுக்கிறது, தடுக்கிறது.

இதை நாங்கள் வன்மை யாக கண்டிக்கிறோம். விடுதலை சிறுத்தைகளின் செல்வாக்கை வரும் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு புரிய வைப்போம் என்றார்.
 
இதைத்தொடர்ந்து விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவள வன் எம்.பி. பேசியதாவது:-
 
காங்கிரஸ் கட்சியினை விமர்சிக்க எனக்கு உரிமை உண்டு. நான் அதன் கொள்கை களை ஏற்பவன் அல்ல. ஏன் என்றால் நான் அம்பேத்கரின் வழி நடப்பவன். ஆனால் காங்கிரஸ் கட்சியினை வளர்த்தவர்கள் என் பாட்டன் முப்பாட்டன்கள். என் பாட்டன் கக்கனும் அவர் தலைவர் காமராஜரும் வளர்த்த கட்சி அது.
 
என்னை பதவி விலகச் சொல்கிறார்கள் சிலர். விடுதலை சிறுத்தை கட்சி கடந்த பாராளுமன்ற தேர்தலில் இரண்டு இடங்கள் தான் போட்டியிட்டது. 2 இடங்களில் எங்களுக்கு காங்கிரசார் தேர்தல் பணி யாற்றினார்கள். ஆனால் காங்கிரஸ் கட்சிக்கு 15 இடங்களில் நாங்கள் பணி யாற்றினோம். எங்கள் தொண் டர்கள் காங்கிரசுக்கு பூத் ஏஜெண்டாக செயல்பட்டார்கள். பூத் ஏஜெண்டுகள் கூட காங்கிரசில் இல்லை.
 
ஒரு தொகுதியில் வெற்றி பெற்ற என்னை பதவி விலக சொல்கிறார்களே... காங்கிரஸ் வெற்றி பெற்ற 9 தொகுதியில் பதவி விலகுவார் களா?
 
காங்கிரசை பற்றி பேச எனக்கு அருகதை இல்லை என்று சொல்கிறார்கள்? என்னுடைய மூதாதையர்கள் காங்கிரஸ் கட்சியில் இருக்கிறார்கள். தாத்தா கக்கனுடைய பேரனாக இருந்து கேட்கிறேன். கக்கன் மருத்துவமனையில் கேட்பா ரற்று கிடந்தார். அவரை காங்கிரசார் கண்டுகொள்ள வில்லை.
 
கக்கனுடைய தம்பி வடிவேலு வறுமையில் வாழ்ந்தார் அவரையும் கண்டு கொள்ளவில்லை. மரகதம் சந்திரசேகர், நிலக்கோட்டை பொன்னம்மாள், தென்காசி அருணாசலம் போன்ற தலித்துக்கள் போர்வையில் வளர்ந்த கட்சி தான் காங்கிரஸ். அந்த உரிமையில் தான் கேட்கிறேன். ஏதோ திடீரென காங்கிரசாரை கேள்வி கேட்கவில்லை.
 
1967-க்கு பிறகு நடந்த அரசியல் மாற்றத்தில் காங்கிரஸ் கட்சியால் ஆட்சி அமைக்க முடியவில்லை. அதன்பிறகு காங்கிரஸ் கட்சி தமிழர்களின் உரிமையை புறக்கணித்து வருகிறது. தமிழர்களுக்கு பெரும் துரோகம் செய்து வருகிறது.
 
இவ்வாறு அவர் பேசினார்.

கருத்துகள் இல்லை: