சனி, 23 அக்டோபர், 2010

அமைச்சரவை மாற்றம் - எவ்வாறு இருக்கும்?

மத்திய அமைச்சரவை மாற்றத்திற்கான அறிவிப்பு இன்று இருக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. அமைச்சரவை மாற்றத்திற்கான அறிவிப்பு இன்று (22-10-2010) வெளியாகாவிட்டால் அக்டோபர் 29ஆம் தேதி அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

அமைச்சரவை மாற்றம் உறுதி செய்யப்பட்டால், மாற்றம் கீழ்க்கண்டவாறு இருக்கும் என்று இந்நேரம்.காமுக்குக் கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.

ஜெய்பால் ரெட்டி: தற்போது மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சராக உள்ள ஜெய்பால் ரெட்டி ஆந்திரப் பிரதேச முதல்வராக நியமிக்கப்படுவார்.

ரோசைய்யா : ஆந்திரப் பிரதேச முதல்வராக இருந்து வரும் ரோசைய்யாவுக்கு எதிராக ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜகன் மோகன் ரெட்டி எதிர்ப்பு தெரிவித்து வருவதை அடுத்து, அவர் முதல்வர் பதவியில் நீக்கப்பட்டு மத்திய அமைச்சராகப்படுவார்.

அம்பிகாசோனி: மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சராக இருந்து வரும் அம்பிகா சோனி டில்லி முதல்வராக நியமிக்கப்படக் கூடும்.

ஆ.ராசா : மத்திய தகவல் தொழில் நுட்ப அமைச்சர் அ.ராசா மீது கூறப்படும் ஏராளமான புகார்களை அடுத்து, அவருக்கு புதிய இலாகா ஒதுக்கப்படும்.

கபிலா வாத்சயன் : மாநிலங்களவை உறுப்பினராக கபிலா வாத்சயன் புதிதாக அமைச்சரவையில் சேர்த்துக் கொள்ளப்படுவார். கலாச்சாரத்துறை அவருக்கு ஒதுக்கப்படும்.

கருத்துகள் இல்லை: