வெள்ளி, 22 அக்டோபர், 2010

எம்.எல்.ஏ.வுக்கு ரூ. 25 கோடி விலை பேசிய பாஜக!

கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையிலான அரசுக்கு ஆதரவளித்தால் ரூ. 25 கோடி வரை தரத் தயாராக இருப்பதாக பாரதீய ஜனதா கட்சித் தலைவர் ஒருவர் பேசிய வீடியோ ஒன்றை மதச்சார்பற்ற ஜனதா தளம் வெளியிட்டுள்ளது.




குப்பி தொகுதியின் மதச்சார்பற்ற ஜனதா தளத உறுப்பினரா ஸ்ரீநிவாஸை பாஜக சட்டமன்ற உறுப்பினர் சுரேஷ் கவுடா தொடர்பு கொண்டு குதிரைப்பேரம் நடத்து போன்று அந்த வீடியோ காட்சியில் இடம்பெற்றுள்ளது.



சுரேஷ் கவுடா ஸ்ரீநிவாசுக்குத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது, நீங்கள் எனக்கு எவ்வளவு தர முடியும்? 100 கோடி ரூபாய் தர முடியமா? என்று ஸ்நீவாஸ் கேட்கிறார்.



மறுமுனையில் - நாங்கள் உங்களுக்கு ஒரு பதவியும் 15 கோடி ரூபாயும் தரலாம் என்கிறது ஒரு குரல். இது சுரேஷ் கவுடாவின் குரல் என்கிறனர் ஜனதா தளத்தினர்.



நீங்கள் எனக்கு 20 கோடி ரூபாய் தருவீர்களானால் நான் உங்கள் கோரிக்கையை பரிசீலனை செய்வேன் என்று ஸ்ரீநிவாஸ் கூற, சரி, நான் (உள்துறை அமைச்சர்) அஷோக்கிடம் பேசிவிட்டு உங்களதை் தொடர்பு கொள்கிறேன் என்று அதற்குப் பதில் அளிக்கப்படுகிறது.



பின்னர், இது தொடர்பாக முடிவு எட்டுவதற்கு டும்கூரில் ஸ்ரீநிவாசும் கவுடாவும் சந்தித்துக் கொள்வதையும் அந்த வீடியோ காண்பிக்கிறது.



தனக்கு 15 கோடி ரூபாய் உடனடியாகத் தருவதாகவும் மீதம் உள்ள தொகையை மாலை தருவதாகவும் மொத்தம் 25 கோடி ரூபாய் என்றும் ஸ்ரீநாவஸ் கூறுகிறார்.



அனைத்து நடவடிக்கைகளையும் வீடியோ பதிவு செய்த ஸ்ரீநிவாஸ் தன்னுடைய கட்சித் தலைவர் குமாராசாமியிடம் இந்த வீடியோவை ஒப்படைத்துள்ளார். வீடியோவை வெளியிட்டுப் பேசிய குமாரசாமி, கர்நாடக உள்துறை அமைச்சர் அஷோக்கும் ஸ்ரீநிவாஸோடு பேசியதாகக் குற்றம் சாட்டினார். ஆனால், அமைச்சர் இதனை மறுத்துள்ளார்.



அண்மையில் பாஜக எம்.எல்.ஏ. ரஞ்சனுக்குப் பணம் தருவதாகவும் அரசுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்று ஜனதாதளம் பேரம் பேசியது போன்ற சிடியை பாஜக வெளியிட்டது. அதற்குப் பதில் சொல்ல இயலாமல் மதச்சார்பற்ற ஜனதா தளம் இத்தகைய குற்றச்சாட்டை சுமத்துகிறது என்று கூறியுள்ளார்.



மதச்சார்பற்ற ஜனதா தளம் வெளியிட்டுள்ள இந்த வீடியோவைத் தொடர்ந்து குதிரை பேரத்தில் ஈடுபட்ட பாரதீய ஜனதா கட்சி அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

கருத்துகள் இல்லை: