வெள்ளி, 17 டிசம்பர், 2010

ராசாவுக்கு முன் அமைச்சராக இருந்தவர்கள் யாரும் புனிதமான துறவிகள் இல்லை!

ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’’2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்த மத்திய புலனாய்வுத் துறையின் விசாரணையை உச்ச நீதிமன்றம் கண்காணிக்கும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறேன்.  2001-ஆம் ஆண்டு முதலான தொலைத் தொடர்புத் துறையின் நடவடிக்கைகளை உள்ளடக்கியதாக விசாரணை அமைய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் வலியுறுத்தி உள்ளதையும் வரவேற்கிறேன்.

ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் ஒப்படைக்கப்பட்ட இந்த வழக்கு விசாரணையில் மத்திய புலனாய்வு அமைப்பு வேண்டுமென்றே மெத்தனப் போக்கினை கடைப்பிடித்ததன் காரணமாகத் தான் இது போன்றதொரு உத்தரவினை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டியதாயிற்று. 

இந்த ஊழலின் நாயகரான முன்னாள் மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சர் ஆ. ராசாவை ஏன் விசாரிக்கவில்லை? என்ற கேள்விகளை உச்ச நீதிமன்றம் கேட்டபிறகு தான் தன்னுடைய நடவடிக்கைகளை மத்திய புலனாய்வுத் துறை அண்மைக் காலமாக தீவிரப்படுத்தி இருக்கிறது.




2ஜி ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலில் மத்திய அமைச்சர் பதவியை ராசா ராஜினாமா செய்ததோடு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் பிரச்சனை முடிந்துவிடவில்லை என்று தொடர்ந்து நான் கூறி வந்துள்ளேன்.  இது ஓர் ஆரம்பம் தான் என்றும் கூறியிருந்தேன். இதற்குப் பிறகு தான் இந்த ஊழலில் தொடர்புடையவர்களின் பெயர்கள் எல்லாம் வெளி வர ஆரம்பித்தன. 

ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழல் ராசா மத்திய அமைச்சராக இருந்த போது உச்சத்திற்கு சென்றாலும், முதல்வர் கருணாநிதியின் பேரன் தயாநிதி மாறன் உட்பட, ராசாவுக்கு முன் அமைச்சராக இருந்தவர்கள் யாரும் புனிதமான துறவிகள் இல்லை என்பது தெளிவாகிவிட்டது. எனவே, ஸ்பெக்ட்ரம் ஊழலை 2001-ஆம் ஆண்டிலிருந்து விசாரிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு உண்மையிலேயே வரவேற்கத்தக்கது.

இருப்பினும், ஸ்பெக்ட்ரம் இமாலய ஊழலின் விசாரணையை உச்ச நீதிமன்றம் கண்காணிக்கும் என்பதை காரணம் காட்டி, நாடாளுமன்றக் கூட்டுக் குழு அமைக்கப்பட வேண்டும் என்ற ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிறைவேற்றாமல் மத்திய அரசு தவிர்க்கக் கூடாது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மத்திய புலனாய்வு அமைப்பின் விசாரணை வரம்பு என்பது நிச்சயமாக சில வரையறைகளுக்கு உட்பட்டது.  மத்தியிலும், மாநிலத்திலும் அரசியல் பலம் வாய்ந்த பெரும்பாலானோர் இந்த ஊழலின் பின்னணியிலும், இந்த ஊழலுக்குத் துணையாகவும் செயல்பட்டு இருக்கிறார்கள்.  அவர்களை எல்லாம் மத்திய புலனாய்வு அமைப்பால் விசாரிக்க முடியாது. 

இந்த ஊழலில் உள்ள முழு உண்மையும் வெளிவர வேண்டும்.  அதற்கு ஒரே தீர்வு நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைப்பது தான்.  எனவே, மத்திய புலனாய்வு அமைப்பின் விசாரணையை உச்ச நீதிமன்றம் கூர்ந்து கண்காணிக்கும் என்ற தீர்ப்பை வரவேற்கும் அதே சமயத்தில்,  2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்தும்’’ என்று  குறிப்பிட்டுள்ளார்.

ஸ்பெக்ட்ரம் விவகாரம்: நீரா ராடியாவிடம் மீண்டும் விசாரணை முக்கிய ஆதாரங்கள் சிக்கியது

ஸ்பெக்ட்ரம் விவகாரம்: நீரா ராடியாவிடம் மீண்டும் விசாரணை முக்கிய ஆதாரங்கள் சிக்கியது
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக் கீட்டில் ரூ.1.76 லட்சம் கோடிக்கு இழப்பும், முறைகேடுகளும் நடந்துள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த ஊழல் தொடர்பான விசாரணையை தீவிரப்படுத்த சி.பி.ஐ.க்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தர விட்டது.
 
சுப்ரீம் கோர்ட்டின் நேரடி கண்காணிப்பில் சி.பி.ஐ. மற்றும் அமலாக்கப்பிரிவினர் விசாரணை நடத்த வேண்டும். பிப்ரவரி மாதம் 10-ந் தேதிக்குள் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தர விட்டுள்ளது. இந்த கால அவகாசத்துக்கு இன்னும் 55 நாட்களே உள்ளன.
 
இந்த 55 நாட்களுக்குள் சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் தங்கள் விசாரணையை முடிக்க வேண்டும். ஏற்கனவே சி.பி.ஐ. அதிகாரிகள் டெல்லி, சென்னை, பெரம்பலூரில் 2 தடவை அதிரடி சோதனை நடத்தினார்கள். கடந்த புதன் கிழமை டெல்லியிலும், தமிழ் நாட்டிலும் ஒரே நேரத்தில் 34 இடங்களில் சோதனை நடந்தது குறிப்பிடத்தக்கது.
 
2 தடவை நடந்த சோதனைகளில் ஏராளமான கம்ப்யூட்டர்கள், லேப்-டாப்கள், பென் டிரைவ்கள், டைரிகள், பேப்பர் ஆவணங்கள் சி.பி.ஐ. அதிகாரிகளிடம் சிக்கின. குறிப்பாக தரகர் நீரா ராடியா, டிராய் முன்னாள் தலைவர் பிரதீப் பைஜால் ஆகிய இருவரின் வீடுகள், அலுவலகங்களில் இருந்து சுமார் 15 கம்ப்யூட்டர்கள், நூற்றுக்கணக்கான பென் டிரைவ்கள் கிடைத்தன.
 
அவற்றை சி.பி.ஐ. அதிகாரிகள் ஆய்வு செய்த போது ஏராளமான தகவல்கள் அழிக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. அந்த தகவல்கள் அனைத்தும் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான தகவல்களாக இருக்கலாம் என்று சி.பி.ஐ. அதிகாரிகள் சந்தேகப்படுகின்றனர்.
 
நீரா ராடியாவின் கம்ப்யூட்டர்கள், பென் டிரைவ்களில் அழிக்கப்பட்ட தகவல்கள் என்னென்ன என்பதை கண்டு பிடிக்க அவை அனைத்தும் தடயவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. கம்ப்யூட்டர் ஹார்டு டிஸ்குகளை சோதனையிட்டு, அதன் மூலம் ஏற்கனவே அழிக்கப்பட்ட தகவல்களை பெற முடியும். எனவே தடய வியல் சோதனைக்குப் பிறகு 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான பல புதிய தகவல்கள் சி.பி.ஐ. வசம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக் கீட்டில் உண்மையில் நடந் தது என்ன? ஹவாலா மோசடி நடந்ததா? யார்-யாருக்கெல்லாம் இதில் தொடர்பு உள்ளது? எவ்வளவு பணம் முறை கேடு நடந்துள்ளது? ஆகிய கேள்விகளுக்கு நீரா ராடியாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட கம்ப்யூட்டர்கள் மூலம் பதில் கிடைக்க உள்ளது.
 
நீரா ராடியா வீட்டில் கிடைத்த கம்ப்யூட்டர்கள் பென் டிரைவ்கள் மற்றும் ஹவாலா பண பரிமாற்றம் செய்து கொடுக்கும் தரகர்கள் மகேஷ்ஜெயின், அசோக் ஜெயின் ஆகியோர் வீடுகளில் சிக்கிய கம்ப்யூட்டர்கள் 2 ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் முக்கிய ஆதாரங்களாக கருதப் படுகின்றன. இந்த ஆதாரங்களின் அடிப்படையில் அடுத்தக் கட்ட விசாரணை நடைபெற உள்ளது.
 
நீரா ராடியாவிடம் அதிரடி விசாரணை நடத்த சி.பி.ஐ. அதிகாரிகள் திட்ட மிட்டுள்ளனர். ஏற்கனவே ஒரு தடவை நீரா ராடியாவிடம் விசாரணை நடத்தப்பட்டது. தற்போது புதிய ஆதாரங்கள் கிடைத்துள்ளதால் அதன் அடிப்படையில் நீரா ராடி யாவிடம் பதில் பெற தீர்மானிக்கப்பட்டுள்ளது.
 
அடுத்த வார தொடக்கத்தில் நீரா ராடியாவிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்த வாய்ப்புள்ளதாக தெரிய வந்துள்ளது. நீரா ராடியாவிடம் தீவிர விசாரணையை தொடங்குவதற்கு முன்பு டிராய் அதிகாரிகள், ஹவாலா தரகர்களிடம் விசாரணையை நடத்தி முடித்து விட சி.பி.ஐ. அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
 
அதன்படி முன்னாள் மத்திய மந்திரி ஆ.ராசாவிடம் தனிச் செயலாளராக இருந்த சந்தோலியா, தொலை தொடர்புத்துறை அதிகாரி ஸ்ரீவத்சவா ஆகிய இருவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினார்கள். அதில் பல புதிய தகவல்கள் கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதற்கிடையே ஹவாலா தரகர்கள் மகேஷ் ஜெயின், அசோக் ஜெயினிடமும் சி.பி.ஐ., அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு பணத்தை இவர்கள் இரு வரும் ஹவாலா மூலம் உரியவர்களுக்கு சேர்த்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஜெயின் சகோதரர்களின் வீடுகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கம்ப்யூட்டர்கள், ஆவணங்களில் இருந்து இது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
 
அசோக் ஜெயின் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை நடத்திய போது சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் தான் ஸ்பெக்ட்ரம் முறைகேடு பணத்தை பல கோடிகளாக பிரித்து பல்வேறு வங்கி கணக்குகளில் முதலீடு செய்தவர் என்று தெரிய வந்துள்ளது. அவரை தனி இடத்தில் வைத்து சி.பி.ஐ. அதிகாரிகளும் அமலாக்கப் பிரிவு அதிகாரிகளும் ஒருங்கிணைந்து விசாரணை செய்து வருகிறார்கள்.
 
இந்த விசாரணை தகவல்கள் அடிப்படையில் அடுத்த வாரத் தொடக்கத்தில் நீரா ராடியாவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது. அப்போது ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் புதிய திருப்பங்கள் ஏற்படும் என்று தெரிகிறது.
 
இந்த நிலையில் சில ஆவணங்கள் தமிழ்மொழியில் உள்ளன. எனவே தமிழ் தெரிந்த அதிகாரிகள் உதவியுடன் அந்த ஆவணங்களை ஆய்வு செய்யும் பணி தொடங்கி உள்ளது. இந்த ஆய்விலும் பல புதிய தகவல்கள் கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.
 
இதன் தொடர்ச்சியாக சி.பி.ஐ., அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் அது இது வரை இல்லாத அளவுக்கு பர பரப்பை ஏற்படுத்தி விடக் கூடும் என்று கூறப்படுகிறது.

விக்கிலீக் வெளியிட்ட தகவல் : பாக். தீவிரவாதிகளை விட இந்து அமைப்புகளால் ஆபத்து; ராகுல்காந்தி கருத்து!

விக்கிலீக் வெளியிட்ட தகவல் :
 
 பாக். தீவிரவாதிகளை விட 
 
 இந்து அமைப்புகளால் ஆபத்து;
 
 ராகுல்காந்தி கருத்து
சமீபத்தில் வெளிநாடுகளில் இருக்கும் அமெரிக்க தூதரகங்கள் அமெரிக்காவுக்கு அனுப்பிய 2 1/2 லட்சம் ரகசியங்களை “விக்கி லீக்” வெளியிட்டது. இதில் 5087 ரகசியங்கள் இந்திய தொடர்பானவை. அவற் றில் 3,038 ரகசியங்கள் டெல்லி தூதரகத்தில் இருந்து அனுப்பப்பட்டு இருந்தன.
 
இந்த ரகசியங்கள் ஒவ் வொன்றாக இப்போது வெளிவந்து கொண்டிருக் கின்றன. அதில் ராகுல்காந்தி பற்றி அமெரிக்க தூதர் திமோதி ரோமர் அமெரிக்காவுக்கு அனுப்பியுள்ள ரகசியம் வெளிவந்துள்ளது. அதில் ராகுல்காந்தி தன்னிடம் பேசிய சில விவரங்களை திமோதி ரோமர் குறிப்பிட்டு உள்ளார்.
 
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 20-ந் தேதி அமெரிக்க வெளியுறவு மந்திரி ஹிலாரி இந்தியா வந்தி ருந்தார். அவருக்கு பிரதமர் மன்மோகன்சிங் தனது வீட்டில் மதிய விருந்து அளித்தார். இதில் ராகுல்காந்தி கலந்து கொண்டார். அமெரிக்க தூதர் திமோதி ரோமரும் வந்திருந்தார். அப்போது இருவரும் தனியாக பேசி இருக்கின்றனர்.
 
அதில் ராகுல்காந்தி சொல்லிய விஷயங்களை திமோதி ரோமர் அமெரிக்காவுக்கு அனுப்பி உள்ளார். ராகுல் காந்தியிடம் திமோதி ரோமர் இந்தியா வில் பாகிஸ்தானின் லஷ்கர்- இ-தொய்பா தீவிரவாதிகள் நடவடிக்கைகள் குறித்து கேட்டு இருக்கிறார். அதற்கு பதிலளித்த ராகுல்காந்தி “லஷ்கர்-இ- தொய்பா தீவிரவாதிகளுக்கு சில அடிப்படை வாத முஸ்லிம் சமுதாயத்தினர் ஆதரவாக செயல்படுகின்றனர்.

ஆனால் இப்போது இந்திய பாது காப்புக்கு பாகிஸ்தான் தீவிரவாதிகளை விட சில அடிப்படைவாத இந்து அமைப்புகளால் தான் அச்சுறுத்தல் அதிகமாக உள்ளது. அவர்கள் மத கலவரங்களை ஏற்படுத்தி முஸ்லிம்களிடம் அரசியல் ரீதியான மோதல் போக்கை உருவாக்குகின்றனர்” என்று கூறி இருக்கிறார்.
 
குஜராத் முதல்- மந்திரி நரேந்திர மோடி போன்ற பாரதீய ஜனதா தலைவர் களாலும் இது போன்ற மோதல் போக்கு ஏற்படுத்தப்படுகிறது என்றும் ராகுல்காந்தி கூறி இருக்கிறார். பாகிஸ்தானில் இருந்தும், இஸ்லாமிய அமைப்புகளிடம் இருந்தும் வரும் தீவிரவாத தாக்குதல்கள் கவலைத் தரக் தக்க வகையில் உள்ளது. இதை கடுமையாக ஒடுக்க வேண் டியது உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
 
ராகுல்காந்தி, சிவசேனா பற்றியும் திமோதி ரோமரிடம் கருத்து கூறியுள்ளார். சிவசேனா ஒரு வெறி பிடித்த அமைப்பு. மூடநம்பிக் கையிலும், குறுகிய மனப்பான்மையிலும் செயல் படுகிறது என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
 
சிவசேனா மிரட்டலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் ராகுல்காந்தி மும் பையில் சுற்றுப் பயணம் செய்ததையும் தைரியமாக செயல் பட்டதையும் திமோதி ரோமர் தனது தகவலில் குறிப்பிட்டு உள்ளார். திமோதி ரோமரிடம் ராகுல்காந்தி இந்திய அரசியல் நிலவரங்கள் பற்றியும் பேசி யுள்ளார். மத்திய அரசு பல் வேறு சவால்களை எதிர் கொண்டு வருவதாகவும், பாராளுமன்றத்தில் இளை ஞர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் தெரிவித்து உள்ளார். சமீபத் தில் நடந்த பாராளு மன்ற தேர்தலில் தேர்ந்தெடுக் கப்பட்ட 60 புதிய உறுப்பி னர்களில் 45 பேர் இளைஞர்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
 
ராகுல்காந்தி இந்து அமைப்புகளை விமர்சித்து இருப்பது பற்றிய ரகசியம் வெளியானதை அடுத்து பாரதீய ஜனதா கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது. பாரதீய ஜனதா செய்தி தொடர்பாளர் தருண் விஜய் இது பற்றி கூறும் போது, “காங்கிரஸ் மதமோதல்களை உருவாக்கி வருகிறது தேர்தலில் ஒட்டு அறு வடை செய்ய முயற்சிக்கிறது. ஊழலிலும், விலைவாசி உயர்வு பிரச்சினையிலும் சிக்கியுள்ள காங்கிரஸ் தேர்தல் தோல்விக்கு பயந்து இந்த மாதிரி கருத்துக்களை கூறியுள்ளது என்றார்.
 
பாரதீய ஜனதா செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் கூறும் போது ராகுல் காந்தி கருத்து பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவாக வும், அவர்களுடைய பிரசாரங்களுக்கு ஆதரவாக வும் இருப்பது போல உள்ளது. அவர் பொறுப்பற்ற தனமாக நடந்துள்ளார். தீவிரவாதிகளுக்கு எதிராக இந்தியா போராடுவதையே கொச்சை படுத்தி இருக்கிறார் என்றார்.
 
காங்கிரஸ் செய்தி தொடர் பாளர் ஜனார்த்தன் திவேதி கூறும் போது “இந்த தகவல் வெளியாகி இருப்பதில் ஏதோ சதி உள்நோக்கம் இருக்கிறது. இதில் உள்ள உண்மை நிலையை தெரிந்து கொண்ட பின்னர் தான் வேறு விவரங் களை கூற முடியும்” என்றார்.