வியாழன், 16 டிசம்பர், 2010

எனது பயணம் மூலம் இந்தியா-சீனா நட்பு பலப்படும்; சீன பிரதமர் வென்ஜியாபோ பேட்டி

எனது பயணம் மூலம்
 
 இந்தியா-சீனா
 
 நட்பு பலப்படும்;
 
 சீன பிரதமர் வென்ஜியாபோ பேட்டி
சீனா பிரதமர் வென்ஜியாபோ 3 நாட்கள் பயணமாக நேற்று இந்தியா வந்தார்.  

ஜனாதிபதி மாளிகையில் சீன பிரதமருக்கு இன்று சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜனாதிபதி மாளிகைக்கு வந்த வென்ஜியாபோவை ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன்சிங் வரவேற்றனர்.

பின்னர் அவர் பாதுகாப்பு படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

பின்னர் சீன பிரதமர் வெண்ஜியாபோ நிருபர்களிடம் கூறியதாவது:-

எனது இந்திய பயணம் மூலம் இந்தியா-சீனா இடையேயான நடப்புறவு எதிர் காலத்தில் பலப்படுத்துவதாகவும், ஆழப்படுத்துவதாகவும் அமையும் முக்கிய பிரச்சினைகளில் இருநாடுகள் இடையே ஒருமித்த கருத்து ஏற்படும்.

பொதுவான பிரச்சினைகளில் பிரதமர் மன்மோகன்சிங்கும் நானும் இணைந்து ஒரு மித்த முடிவை எடுப்போம் என்று நம்பிக்கை இருக்கிறது. பல்வேறு பிரச்சினைகளில் இருநாடுகளும் இணைந்து செயல்படும்.

எங்கள் அருகாமையில் உள்ள சிறந்த நாடு இந்தியாவாகும். இரு நாடுகள் இடையே பராம்பரிய நட்புணர்வு இருக்கிறது. புதிய நூற்றாண்டில் நாம் நுழைந்துள்ளோம். இதில் இரு நாடுகள் இடையே நட்பு முறையிலான அமைதி, பரஸ்பர ஒத்துழைப்பு இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பின்னர் சீன பிரதமர் வென்ஜியாபோவை வெளியுறவு துறை மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா சந்தித்து பேசினார்.

இருநாடு வெளியுறவு துறை மந்திரிகள் இடையே தாமதமான அனைத்து பிரச்சினைகளும் தீர்க்கப்படும் என்று எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் வென்ஜி யாபோ கூறினார்.
 

6வது தடவையாக பெட்ரோல் விலை உயர்வு!

















கடந்த ஜூ‌ன் மாதம் பெட்ரோலுக்கு விலை நிர்ணயிக்கும் அதிகாரம், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்து பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டது. அதிலிருந்து, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப, பெட்ரோல் விலையை எண்ணெய் நிறுவனங்களே நிர்ணயித்து வருகின்றன. அப்படி நிர்ணயிக்கத் தொடங்கியதில் இருந்து இதுவரை 5 தடவை பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டு விட்டது. இந்நிலையில், நே‌ற்‌றிரவு 6வது தடவையாக பெட்ரோல் விலை உயர்த்தப்ப‌ட்டு ‌வி‌‌ட்டது.
பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களில் ஒன்றான பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், பெட்ரோல் விலையை லிட்டருக்கு 2 ரூபாய் 96 காசுகள் உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு, தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் நேற்று நள்ளிரவு அமலுக்கு வந்தது.
மற்ற பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ஆகியவையும் இதே அளவுக்கு பெட்ரோல் விலையை உயர்த்துகின்றன. இவற்றின் விலை உயர்வு அறிவிப்பு இன்று நள்ளிரவு அமலுக்கு வருகிறது. இத்துடன், இந்த ஆண்டில் மட்டும் 8வது தடவையாக பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று ஒரு ல‌ி‌ட்ட‌‌ர் பெ‌ட்ரோ‌ல் ‌விலை ரூ.61.05 ஆக ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்படு‌கிறது.
ப‌த்‌தி‌ரிகை, தொலை‌க்கா‌ட்‌சி செ‌‌ய்‌திகளை படி‌க்காத, பா‌ர்‌க்காத வாகன‌ஓ‌ட்டிக‌ளு‌க்கு இ‌ன்று காலை‌யி‌ல் பெரு‌ம் அ‌தி‌ர்‌ச்‌சி கா‌த்‌திரு‌ந்தது. மு‌ன்பு 100 ரூபா‌ய் கொடு‌த்து பெ‌ட்ரோ‌ல் போட சொ‌ன்னா‌ல் 1.74 லிட்டர் அளவு இரு‌க்கு‌ம். இ‌ன்று 100 ரூபா‌ய் கொடு‌‌த்து பெ‌ட்ரோ‌ல் போ‌ட்டா‌ல் 1.64 லிட்டர் அளவே இரு‌ந்து‌ள்ளது. அ‌தி‌ர்‌ச்‌சி கல‌ந்த ஆ‌த்‌திர‌த்துட‌ன் பெ‌ட்ரோ‌ல் போடுபவ‌ரிட‌ம் ச‌ண்டைபோடு‌‌ம் வாகன ஓ‌ட்டி‌யிட‌ம், நே‌ற்று ‌‌ந‌ள்‌ளிரவு முத‌ல் ‌விலை உய‌ர்‌ந்து ‌வி‌ட்டதாக கூ‌றியது‌ம் ஆ‌ட்‌சியா‌ள‌ர்களை ச‌பி‌த்து‌க் கொ‌ண்டு செ‌‌ன்று‌வி‌‌‌ட்டா‌ர்.
ஆசை‌ப்ப‌ட்டு வாகன‌ம் வா‌ங்குபவ‌ர்க‌ளு‌க்கு த‌ற்போது பெ‌ட்ரோ‌‌ல் போடுவது பெரு‌ம் தலைவ‌‌லியாக ஆகி‌வி‌ட்டது. கா‌‌‌ங்‌கிர‌ஸ் தலைமை‌யிலான ஐ‌க்‌கிய மு‌ற்போ‌க்கு கூ‌ட்ட‌ணி‌‌‌அரசுக்கு வெ‌ளி‌யி‌‌ல் இரு‌ந்து இடதுச‌ா‌ரிக‌ள் ஆதரவு அ‌ளி‌த்தன‌ர். அ‌ப்போது இடதுசா‌ரிக‌ள் உ‌‌ள்‌ளி‌ட்ட க‌ட்‌சிகளா‌ல் பெ‌ட்ரோ‌ல்- டீச‌ல் ‌விலை க‌ட்டு‌க்கு‌ள் இரு‌ந்தது. அமெ‌ரி‌க்காவுடனான அணுச‌‌க்‌தி ஒ‌ப்ப‌ந்த‌ம் தொட‌ர்பாக இடதுசா‌ரிக‌ள் ‌ஆதரவை விளக்கிய‌தை‌த் தொட‌‌ர்‌ந்து ம‌த்‌திய அரசு‌க்கு பெ‌ட்ரோ‌ல் ‌விலையை உய‌ர்‌‌த்த ந‌ல்ல வா‌ய்‌ப்பாக அம‌ை‌ந்து ‌வி‌ட்டது.
பெட்ரோலுக்கு விலை நிர்ணயிக்கும் அதிகாரம் எ‌ன்றை‌க்கு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்து பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு மாற்றப்பட்டதோ அ‌ன்று முத‌ல் வாகன‌ம் வை‌த்‌திரு‌ப்பவ‌ர்களு‌க்கு தல‌ை‌‌யி‌ல் இடி ‌விழு‌ந்த மா‌தி‌ரி ஆ‌‌‌கி‌‌வி‌ட்டது.
ஒரு ப‌க்க‌ம் ஒரு ரூபாய‌் கொடு‌த்து ‌வி‌ட்டு ‌நீ‌ங்க‌ள் ‌விரு‌ம்பு‌ம் வாகன‌ங்‌களை எடு‌த்து செ‌ல்லலா‌ம் எ‌ன்று கா‌ர், இருச‌க்கர ‌நிறுவன‌ங்கள‌் விள‌ம்பர‌ம் செ‌ய்து வரு‌கி‌ன்றன. ஆனா‌ல் ‌த‌ற்போது பெ‌ட்ரோ‌‌ல் ‌விலையை உய‌ர்வை பா‌ர்‌த்து வாகன‌ங்கள‌் வா‌ங்கு‌ம் எ‌‌ண்ண‌த்த‌ையே ம‌க்க‌ள் மற‌ந்து‌விட வே‌ண்டியதுதா‌ன்.
ஐ‌க்‌கிய மு‌ற்போ‌க்கு கூ‌ட்ட‌‌‌ணி‌யி‌ல் இரு‌‌க்கு‌ம் ‌தி.மு.க.வு‌ம் இதை க‌ண்டு கொ‌‌ள்வது ‌கிடையாது. பெயரளவு‌க்கு பெ‌ட்ரோ‌ல் ‌விலை உய‌ர்வா‌‌ல் நகர வாழ் நடுத்தர ம‌க்க‌ள் வெகுவாக பா‌தி‌க்க‌ப்படுவா‌ர்க‌ள். எனவே இத‌ன் ‌விலையை உடனடியாக ‌ம‌த்‌திய வில‌க்‌கி‌க் கொ‌ள்ள வே‌‌ண்டு‌‌ம் எ‌ன்று கூ‌றி நழு‌வி‌க் கொ‌ள்வா‌ர் ‌தி.மு.க. தலைவரு‌ம், முதலமை‌ச்சருமான கருணா‌நி‌தி.
இ‌ப்படி தராறுமாறாக பெ‌ட்ரோ‌ல் ‌விலையை உய‌ர்‌‌த்‌தி வரு‌ம் ம‌த்‌திய அரசு‌க்கு தே‌‌ர்த‌ல் நேர‌த்த‌ி‌ல் தா‌ன் ம‌க்க‌ள் ச‌ரியான பாட‌ம் க‌ற்‌பி‌க்க முடியு‌ம். தே‌ர்த‌‌லி‌ல் அதையு‌ம் செ‌ய்ய‌த் தவ‌றினா‌ல் ‌ம‌க்க‌ளி‌ன் ‌நிலைமை கே‌ள்‌வி‌க்கு‌றிதா‌ன்?

அரசு நிறுவனங்கள் ஊழலற்றதாக, சிறந்த தரத்துடன் செயல்பட வேண்டும் : பிரதமர் மன்மோகன் சிங்














அரசு நிறுவனங்கள் ஊழலற்றதாக, சிறந்த தரத்துடன் செயல்பட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் வலியுறுத்தினார்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கித் தவிக்கிறது மத்திய அரசு. புதன்கிழமை தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பாக செயல்படும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு விருது வழங்கினார் பிரதமர். இவ்விழாவில் அரசுத் துறை நிறுவனங்களின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
விழாவில் பிரதமர் பேசியது : பொதுத்துறை நிறுவனங்கள் போட்டிகளைச் சமாளிக்கும் வகையில் வலிமையுடன் திகழ்வதற்கு அரசு முயற்சி எடுத்து வருகிறது. அதேசமயம், அரசுத் துறை நிறுவனங்களின் செயல்பாடு உயர் தரத்துடனும், நேர்மையானதாகவும் இருக்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களின் கணக்கு வழக்குகள் வெளிப்படையானதாக இருக்க வேண்டும். உலக அளவில் அரசுத் துறை நிறுவனங்களுக்கென்று விதிமுறைகளை வகுத்து செயல்படுத்தும் மிகச் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இதனால் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு செயல்படுவதோடு வெளிப்படையான, சிறந்த நிர்வாகமும் பொதுத்துறை நிறுவனங்களில் அவசியம் இருக்க வேண்டும்.
உற்பத்திக்கு ஏற்ற ஊதியம் என்ற நடைமுறை மூலம் சிறப்பான நிர்வாகம் நடைபெறுவதோடு உற்பத்தியும் பெருகும். தற்போதைய போட்டிகள் நிறைந்த உலகில் இத்தகைய நடைமுறை மிகவும் அவசியமானது என்றார் பிரதமர்.
அரசுத் துறை நிறுவனங்களான ஏர் இந்தியா, பிஎஸ்என்எல் ஆகியன சிறப்பான செயல்பாட்டுக்கு அரசு முக்கியத்துவம் அளிக்கும் என்றும் குறிப்பிட்டார். இவ்விரு நிறுவனங்களும் தனியார் துறையின் கடும் போட்டியை சமாளிக்கவேண்டிய நிலையில் உள்ளளது குறிப்பிடத்தக்கது.
""சர்வதேச அளவில் போட்டிகளை சமாளிக்க வேண்டிய கட்டாயமும் உள்ளது. சர்வதேச அளவிலான வாய்ப்புகளையும் அரசு நிறுவனங்கள் கண்டறிய வேண்டும். இப்போதைய சூழலில் மூலப் பொருள்களை அதிகம் கையிருப்பில் வைத்துக் கொள்ள வேண்டிய தேவையும் ஏற்பட்டுள்ளது. இதை ஊக்குவிக்கும் வகையில் அரசுத் துறை நிறுவனங்களுக்கான கொள்கைகளில் மாற்றம் செய்யப்படும். இப்புதிய கொள்கை அடுத்த இரு வாரங்களில் தயாரிக்கப்பட்டு அமைச்சரவைக்கு அனுப்பப்படும்,'' என்று பொதுத்துறை நிறுவனங்களின் செயலர் பாஸ்கர் சாட்டர்ஜி தெரிவித்தார்.
எண்ணெய், நிலக்கரி, சுரங்கம் உள்ளிட்ட தொழில்துறைகளிடமிருந்து இது தொடர்பான ஆலோசனைகள் வந்துள்ளன. இவை அனைத்தும் அமைச்சரவை பரிசீலனைக்கு அனுப்பப்படும் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

படங்களும் - செய்திகளும் (நாளிதழ் செய்திகள்)

அஸ்ஸலாமு அலைக்கும்,,,


1. பெட்ரோல் விலை நாளுக்கு நாள் ஏற்றினால் விரைவில் பழமைக்கு மாறிவிடுவதுதான் நல்லதோ ?

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களில் ஒன்றான, பாரத் பெட்ரோலிய கார்ப்பரேஷன் நேற்றிரவு பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.2.96 உயர்த்தியது. இதையடுத்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் ( ஐ.ஓ.சி) மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் ( எச்.பி) ஆகிய இரு நிறுவனங்களும் அடுத்த இரு நாட்களில் பெட்ரோல் விலை உயர்வு எவ்வளவு என்று அறிவிக்கும் என்று கூறப்பட்டது. நிச்சயமாக இந்த நிறுவனங்களும் லிட்டருக்கு ரூ2.50க்கு மேல் உயர்த்தலாம் என்று கூறப்பட்டது.

           Laundry Detergent Powder. Photo by Tendersprout



2. சில வருடங்களுக்கு முன்பு,  நிறுவனங்கள் பட்ஜெட் நேரத்தில் தான் விலையை ஏற்றும். ஆனால், சமீபத்தில் எந்தவித அறிவிப்பும் இல்லாமல், விலையை உயர்த்தி கொண்டே செல்கிறது. விலை உயர்வை கண்டிக்கும் மக்கள், இதை பற்றி அறியாமலே உள்ளனர். உதாரணத்திற்கு, பிஸ்கட் தயாரிப்பு நிறுவனங்கள் மில்க் பிஸ்கட்டை 10 ரூபாய் விலையில், ஆரம்பத்தில் 150 கிராமுக்கு கொடுத்தன.  பிறகு 128 கிராம் ஆனது. ஆனால், தற்போது இதன் எடை 121 கிராமாக குறைத்துள்ளது. 13 ரூபாய் விலைக்கு, 200 கிராம் மேரி பிஸ்கட்டை வழங்கின.  தற்போது இதன் எடை 161 கிராமாக குறைத்து விற்பனை செய்கின்றன. மற்ற பிஸ்கட்களுக்கும் இதே நிலை தான். தனிநபர் பயன்படுத்தும் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள், பல் துலக்கும் "பேஸ்'டை 10 ரூபாய்க்கு 50 கிராம் வழங்கியது.  தற்போது இதன் எடையை 40 கிராமாக குறைத்துள்ளன. 100 கிராமம் பவுடரின் விலையை 34லிருந்து 36 ரூபாயாக உயர்த்தியுள்ளன. 250 கிராம் இருந்த துணி துவைக்கும் பவுடரின் எடை, தற்போது 210 கிராமாக குறைத்துள்ளன. அதே சமயம் விலையையும் சத்தமில்லாமல் உயர்த்தியுள்ளது.டீ தூள் தயாரிக்கும் நிறுவனங்கள் 250 கிராமை 245 கிராமாக குறைத்ததுடன், விலையையும் 82 ரூபாயிலிருந்து, 84 ரூபாயாக உயர்த்தியுள்ளன. மூலிகை வகை டீ தூளும் 250 கிராமிலிருந்து 200 கிராமாக குறைத்து, விலையை மட்டும் உயர்த்தாமல் உள்ளன. சிப்ஸ் தயாரிக்கும் நிறுவனங்கள் 18 கிராம் எடை கொண்ட சிப்சை ஐந்து ரூபாய் விற்றது. தற்போது இதன் எடை 14 கிராமாக குறைத்துள்ளது. நூடுல்ஸ் தயாரிக்கும் நிறுவனங்கள் 100 கிராம் இருந்ததை, 80 கிராமாக குறைத்து, 10 ரூபாய் விலையிலேயே விற்கின்றன. மற்றொரு நிறுவனம் 90 கிராமுக்கு விற்கிறது. இதில் குறிப்பிட்டு என்று சொல்ல முடியாமல், எல்லா தயாரிப்பு நிறுவனமும் போட்டி போட்டு கொண்டு செயல்படுத்தி வருகின்றன.  நிறுவனங்களிடம் கேட்டால், மூலப்பொருளின் விலை உயர்வு தான் காரணம் என கூறுகின்றனர். ஆனால் இதை ஒருபோதும் ஏற்று கொள்ள முடியாது. என்ன கொடுமை சார், "எவ்வளவு அடிச்சாலும் தாங்கிக்கராங்க, இவங்க ரொம்ப நல்லவங்க'ன்னு தமிழக மக்களை நினைச்சுட்டாங்க போல. வேறு எங்கேயும் இந்த எடை குறைப்பு இல்லன்னு மட்டும், என்னால உறுதியா சொல்ல முடியும். இதோ நமக்கு பக்கத்துல இருக்கிற கேரளாவில் போய் பாருங்க. அங்கெல்லாம் இப்படி செய்தால், 10க்கும் மேற்பட்டவர்கள் சேர்ந்து சம்பந்தப்பட்ட நிறுவன அலுவலகத்துக்கு சென்று, முறையிடும் நிலை உள்ளது. 
ஆனால் இங்கெல்லாம் அப்படி எதுவும் இல்லை. பெரும்பாலான மக்கள் பொருளை வாங்கும் போது, அதிலுள்ள தயாரித்த தேதி மற்றும் விலையை பார்க்கும் ஆவலை, அதனருகில் உள்ள எடையில் காட்டுவதே இல்லை.  இதில் மக்களையும், கடைக்காரரையும், டீலர்களையும் சொல்லி குற்றம் இல்லை. முழுக்க முழுக்க நிறுவனங்களின் ஆணவப்போக்கு தான் இதற்கு காரணம். எதை பாக்கெட்டில் போட்டு கொடுத்தாலும், மக்கள் வாங்கி கொள்வர் என்ற நிலையில், நிறுவனங்கள் நினைப்பதே இதற்கு முக்கிய காரணம்.  இனிமேலாவது ஏமாறும் மக்களை, ஏமாற்றும் நிறுவனத்திடம் இருந்து ஏமாறாமல் காக்குமா அரசு என்ற எண்ணம், பரவலாக அனைவரிடத்திலும் எழுந்துள்ளது. தேர்தல் நேரம் நெருங்கி வருவதால், நிச்சம் இதற்கு விடிவு உண்டு என்பது உறுதியாக சொல்ல முடியும்.

 
3. மகள் இறந்தது கூட தெரியாமல், பட்டினியால் மயக்கமடைந்த முதியவரை, இளைஞர்கள் சிலர்காப்பாற்றியுள்ளனர். சமீபத்தில், காஞ்சிபுரம் ரயில்வே ரோடு அகலப்படுத்தப்பட்ட போது, அந்த பணியை மேற்கொண்டவர்கள், அப்பகுதியில் உள்ள கந்தன் பார்க்கில் குடிசை போட்டு தங்கியிருந்தனர். அவர்களது பணி முடிந்த பின், அந்த குடிசைகளை அப்படியே விட்டு விட்டுச் சென்று விட்டனர்.அவர்கள் விட்டுச் சென்ற குடிசையில் இருந்து, நேற்று துர்நாற்றம் வீசியது. அப்பகுதி மக்கள் குடிசைக்குள் நுழைந்து பார்க்க, அழுகிய நிலையில் ஒரு பெண்ணின் உடல்... அதன் அருகே, நினைவுகளைத் தொலைத்த முதியவர் ஒருவர். உடனே, சிவகாஞ்சி போலீஸ் நிலையத்திற்கு தகவல் போனது.விரைந்து வந்த காவல்துறை, அழுகிய நிலையிலிருந்த பெண்ணின் உடலை பரிசோதனைக்காக, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தது. முதியவர் முகத்தில் தண்ணீர் தெளித்து, மயக்கம் தெளிவித்து, டீ மற்றும் பிஸ்கெட் வாங்கிக் கொடுத்து, காவல்துறை முதலில் கருணை காட்டியது; அதன் பின் விசாரணையை துவக்கியது. 90 வயதில் கண்கள் வெளிறிப்போய், திக்கித் திக்கி பேசத் துவங்கினார் அந்த முதியவர்.
"என் சொந்த ஊர் திருநெல்வேலி... எங்க ஊர் சாமியின் பேரான பேராட்சிதான் என்னோட பேரு. ஊரில பொழப்பு சரியா இல்லை. அதனால, பொண்டாட்டி, புள்ளையோட மெட்ராஸ் வந்துட்டோம். அங்கங்க கிடைச்ச வேலையை வைச்சு, பிழைப்பு நடத்தினோம். உடம்பு சரியில்லாம இருந்த என் பொண்டாட்டி, கொஞ்சநாள் முன்னால செத்துப் போயிட்டா. அம்மா போன அதிர்ச்சியில, என் பொண்ணு முத்துலட்சுமிக்கு கை, கால் விளங்காம போயிடுச்சு. அவளை தனியா எங்கேயும் விட முடியாதுங்கறதால, என்னோடவே வைச்சுகிட்டு, கிடைக்கிறதை சாப்பிட்டுட்டு இருந்தோம்.நாங்க ரோட்டில சிரமப்பட்டு நடந்து வர்றதைப் பார்த்து, ஆம்புலன்சில் வந்தவங்க, இங்க கொண்டுவந்து இறக்கி விட்டுட்டு போயிட்டாங்க. இந்த குடிசைங்க காலியா இருந்ததால, இங்க வந்து ஒண்டிகிட்டோம்.பசி வயித்த கிள்ளிச்சு... யாரும் இந்தப் பக்கம் வராததால, சாப்பிட எதுவும் கிடைக்கல. வெளியே போய் பிச்சை கேட்கஉடம்பு ஒத்துழைக்கலை. பசி அதிகமானதால மயக்கமாயிட்டோம். இப்ப நீங்க வந்து எழுப்பிய பின்னாலதான், என் பொண்ணசெத்துட்டான்ன தெரிஞ்சது...'அழக்கூட முடியாமல், "ஹீனமான' குரலில் முதியவர் பேசிமுடிக்க, காவல் துறையினர் கண்களிலும் கண்ணீர் மழை. முதியவர் மீது பரிதாபப்பட்ட போலீசார், அவரை மருத்துவமனையில் சேர்க்க முயற்சித்தனர்.ஆனால், அங்கிருந்த இதயமற்ற ஊழியர்கள், "கவனிக்க ஆள் இல்லை' எனக் கூறி, அவரை சேர்க்க மறுத்துவிட்டனர். தங்களின் வாதம் எடுபடாத நிலையில், காவல்துறை கடமையைத் தொடர புறப்பட்டு விட்டது. அங்கிருந்த இளைஞர்கள் சிலர், தமிழக அரசின் உயிர்காக்கும் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்களோ, " ஏற்கனவே முதியவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை கவனிக்க ஆள் இல்லாததால், மருத்துவமனையிலிருந்து வெளியேற்றி விட்டனர். அவரை, மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து வர வேண்டாம் எனஊழியர்கள் சொல்லி விட்டனர்' என தெரிவித்துவிட்டு, ஒதுங்கிக் கொண்டனர்.கருணை, அன்பு, பரிவு போன்ற வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாதவர்கள் தொடர்ந்து ஒதுக்கித் தள்ளிய நிலையில், காஞ்சிபுரம் தாசில்தார் வரதராஜனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர் உடனடியாக, சுகாதாரத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு, முதியவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளார்.அவரின் தலையீட்டால், கந்தன்பார்க்கிற்கு வந்த 108 ஆம்புலன்ஸ் முதியவரின், "உயிர் காக்க' அவரை அழைத்துச் சென்று மருத்துவமனையில் அனுமதித்தது.
 
4.  பார்வையை காரணம் காட்டிபள்ளிக்கு வர ஆசிரியர்கள் அனுமதி மறுத்த பெண்தற்போது பிழைப்புக்கு சிரமப்படுகிறார். ராமநாதபுரம் மாவட்டம்மண்டபம் வாத்தியார் தோப்பை சேர்ந்த பில்லன் மகள் கவிதா(18). இவருக்கு மாலைக்கண்நோய் இருந்தது. மண்டபம் அரசு தொடக்கப் பள்ளியில் நன்கு படித்துக் கொண்டிருந்த கவிதாவின் பார்வைநாளடைவில் குறையத் துவங்கியதை காரணம் காட்டிபள்ளிக்கு வருவதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதைத்தொடர்ந்துநான்காம் வகுப்புடன் கவிதாவின் பள்ளி வாழ்க்கை முடிவுக்கு வந்தது. வீட்டில் முடங்கிய கவிதாவுக்குகுடும்பத்தார் மட்டுமே உலகமாகினர். காலம் கடந்த நிலையில் பெற்றோருக்கு முதுமை ஏற்படவேபிழைப்புக்கு வழிதேட துவங்கினார்கவிதா. தனது எதிர்காலத்திற்கு உதவி கேட்டுதாய் சமுத்திரவள்ளியுடன் ராமநாதபுரம் வந்த கவிதாஅதிகாரிகளிடம் மனு அளித்தார்.
அவர் கூறியதாவது:நன்கு படித்துக்கொண்டிருந்த எனக்குபள்ளியில் அனுமதி மறுக்கப்பட்டது. இவ்வளவுக்கும் பகல் பார்வையில் சிரமம் இல்லாமல் இருந்தது. படிப்பை நிறுத்திய பின்வீட்டில் முடங்கியதால்முழுமையாக பார்வை குறைந்து வருகிறது. அப்பா இறந்த நிலையில்எனது எதிர்காலம் கருதி உதவிகேட்டு வந்தேன்.இவ்வாறு கவிதா கூறினார்.உதவி செய்ய விரும்புவோர், 96593 92763 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.



                              

5. பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வருவதைத் தடுக்க, "மிர்ச்சி ஜோன்க்' என்ற அமைப்பு களம் இறங்கியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் துவக்கப்பட்ட இந்த அமைப்பு, பெண்கள் தங்களை தற்காத்துக் கொள்ள தேவையான நடவடிக்கைகள் குறித்து பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
தலைநகர் டில்லியில், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. கற்பழிப்பு, பாலியல் பலாத்காரம், வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்களால், டில்லி பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. கடந்த மாதம் டில்லியில் நடந்த ஒரு சம்பவத்தில், மிசோரம் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இளம் பெண், ஐந்து பேர் கொண்ட ஒரு கும்பலால் கடத்தி, கற்பழிக்கப்பட்டார். பின், மயங்கிய நிலையில் இருந்த அப்பெண்ணை, மர்ம நபர்கள் காரில் ஏற்றி வந்து, அவர் பணிபுரியும் நிறுவனத்தின் அருகே வீசிவிட்டுச் சென்றனர். இந்த சம்பவம் டில்லி நகரையே உலுக்கியது.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதில் போலீசார் ஒரு பக்கம் ஈடுபட்டு வந்தாலும், "மிர்ச்சி ஜோன்க்' என்றழைக்கப்படும் ஒரு அமைப்பும் இவ்விஷயத்தில் அக்கறை எடுத்துள்ளது. தனியாக செல்லும் பெண்கள், தங்களை பாதுகாத்துக் கொள்ள பல்வேறு, "டிப்ஸ்'களை இந்த அமைப்பு எடுத்துக் கூறி வருகிறது. பள்ளி, கல்லூரிகளில் இதற்கான விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடக்கின்றன. மேலும், பெண்களுக்கு தற்காப்பு கலைகளும் இந்த அமைப்பின் மூலம் கற்றுத் தரப்படுகின்றன. தனியாக செல்லும் பெண்கள், எப்போதும் கைப்பைகளில் சிறிய பாக்கெட்டில் மிளகாய் அல்லது மிளகு தூளை வைத்துக் கொள்ள வேண்டும்; சாலையை ஒட்டியுள்ள நடைபாதைகளில் மட்டுமே நடந்து செல்ல வேண்டும்; போலீஸ் உள்ளிட்ட முக்கியமான டெலிபோன் எண்களை எப்போதும் வைத்திருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளை "மிர்ச்சி ஜோன்க்' அமைப்பு கூறியுள்ளது.
பெண்களுக்கு தற்காப்புக் கலைகளை கற்றுத் தருவதற்காக, கைதேர்ந்த கலைஞர்களையும், ஆலோசனை கூறுபவர்களையும் இந்த அமைப்பு வைத்துள்ளது. அவர்களைக் கொண்டு, டில்லி நகரின் பல்வேறு இடங்களில் தற்காப்புக் கலை பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. "மிர்ச்சி ஜோன்க்' அமைப்பு குறித்து அதன் இயக்குனர் ஷாலினி மாலிக் கூறுகையில், "பெண்களின் பாதுகாப்பிற்காக பெண்களே நடத்தும் ஒரு இயக்கம் இது. தற்காப்புக் கலைகளையும், விழிப்புணர்வையும் பெறும் பெண்கள், குற்ற செயல்களில் இருந்து தங்களை காத்துக் கொள்வதோடு, மற்ற பெண்களையும் காப்பாற்ற முடியும்' என்றார். அவசரத்திற்கு உதவுவதற்காக, ஹெல்ப் லைன் ஒன்றையும், "மிர்ச்சி ஜோன்க்' அமைப்பு அமைத்துள்ளது. இதுவரை 150க்கும் மேற்பட்ட அழைப்புகள் ஹெல்ப் லைனுக்கு வந்துள்ளன. இவற்றில் பெரும்பாலானவை ஈவ் - டீசிங், குடும்பத் தகராறு குறித்தவையே ஆகும்.

6. சிவகங்கை அருகே நாட்டரசன்கோட்டையில் மாந்திரீகம் செய்வதாக, நான்கு பேரிடம் 5.50 பவுன் நகை, 15 ஆயிரம் ரூபாயுடன் தலைமறைவான நபரை போலீசார் தேடி வருகின்றனர். இப்பகுதியை சேர்ந்தவர் நாராயணன் (32). இவரது, குடும்பத்தில் பிரச்னை இருந்தது.(இப்பொது அதைவிட பிரச்சினை அதிகமாகி விட்டதே ) இது குறித்து நோட்டமிட்டு அறிந்த 35 வயது நபர், மணி ஆசாரி என்ற பெயரில், கடந்த 11ம் தேதி, அறிமுகம் ஆனார். கஷ்டம் நீங்க மாந்திரீகம் செய்ய வேண்டும் எனக்கூறி, அவரிடம் மூன்று பவுன் நகை, 800 ரூபாய் வாங்கியுள்ளார். மாந்திரீகத்தை நம்பி ராஜா (28), முத்துக்குமார் (32), அப்துல் சமது மனைவி பைரோஷா (36) ஆகியோரும் பணம், வெள்ளி பொருட்களை கொடுத்தனர். இரண்டு நாட்களாக பூஜை செய்த அவர், நேற்று காலை தலைமறைவானார். நாராயணன் புகாரின்படி, இன்ஸ்பெக்டர் பாலாஜி, ராஜேஷ் எஸ்.ஐ., விசாரிக்கின்றனர்.

             Thyroid Fast Heart Beat Big Abdomen picture in wellpage  Overweight male - taken with fish-eye lens for exaggerated...

7. உணவு பழக்கம் மாறிவரும் சூழ்நிலையில், உடல் பருமனால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இடுப்பு பருமனாவது டயபடீஸ் உட்பட பல தீராத நோய்க்கு அறிகுறி என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சார்பில் இடுப்பு பருமனானவர்கள் பற்றிய ஒரு ஆய்வு நடைபெற்றது. இதில், பெண்களில் 35.3 சதவீதம் பேருக்கும், ஆண்களில் 22.4 சதவீதம் பேருக்கும் இடுப்பு பருமன் அதிகமாக இருப்பது தெரியவந்துள்ளது. குறிப்பாக, பெரியவர்கள் மட்டுமல்லாது குழந்தைகளும் இந்த பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது டயபடீஸ் உட்பட பல தீராத நோய்க்கான அறிகுறி என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.




தேவையற்ற கொழுப்பு காரணமாக வயிறு, இடுப்பு பருமனாவதால் மோசமான விளைவுகள் ஏற்படும்.  இதனால் சுவாச கோளாறு, இதய நோய் மற்றும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உள்ளது. குறிப்பாக இன்சுலின் சுரப்பதை தடை செய்வதால் டயபடீஸ் நோய் ஏற்படுவதற்கான காரணங்களில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. பெரும்பாலானவர்கள் இத்தகைய விளைவுகளைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கின்றனர் என மெட்ராஸ் டயபடீஸ் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் டாக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.  பெரியவர்கள் மட்டுமல்லாது குழந்தைகளும் இடுப்பு அளவு பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பிரச்னை உள்ளவர்கள் நடைபயிற்சி, கட்டுப்பாடான உணவு முறை மூலம் இடுப்பு பருமனை கட்டுப்படுத்த முயற்சி செய்ய வேண்டும் என டெல்லியைச் சேர்ந்த டயபடீஸ் நோய் நிபுணர் அனூப் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.



இதுக்கு நம்ம சென்னையே தேவலாம். இப்படியா ஊரை நாரடிக்கிறது. இதைவிட மோசமான படங்கள்
நமது குரூப்பில் வெளியிட தகுதியில்லாததால் இதை மட்டும் உங்கள் பார்வைக்காக.

8. அமைச்சரவையில் ஒரு பெண்கூட அமைச்சராக இல்லாததை கண்டித்து உக்ரைனில் மகளிர் உரிமை ஆதரவாளர்கள் சிறுநீர் நிரப்பிய பாட்டில்களை தலைமை செயலகத்துக்குள் வீசி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். உக்ரைன் நாட்டின் அமைச்சரவையில் இருக்கும் அமைச்சர்கள் அனைவரும் ஆண்களே. ஒரு பெண் கூட அதில் இடம் பெறவில்லை. இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து 30 க்கும் மேற்பட்ட மகளிர் உரிமை ஆதரவாளர்கள் அரசு தலைமை செயலகத்துக்கு வெளியே போராட்டம் நடத்தினர். அப்போது போலீசார் பார்த்து கொண்டிருக்கையில் வழக்கத்துக்கு மாறாக, நூதன முறையில் திடீரென தண்ணீர் மற்றும் சிறுநீர் நிரப்பிய பாட்டில்களை வீசி தங்கள் எதிர்ப்பை வெளிக்காட்டினர். இதனால், உள்ளே இருந்த அதிகாரிகள் அலறியடித்துக் கொண்டு வெளியே ஓடினர். பிறகு, துப்புரவு தொழிலாளர்கள் வந்து அந்த பகுதியை சுத்தம் செய்தனர்.
--
முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களும் ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாக இருக்கின்றனர்; அவர்கள் நல்லதைச் செய்ய துண்டுகிறார்கள்; தீயதை விட்டும் விலக்குகிறார்கள்; தொழுகையைக் கடைப்படிக்கிறார்கள்; (ஏழை வரியாகிய) ஜகாத்தை (முறையாகக்) கொடுத்துவருகிறார்கள்; அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் வழிப் படுகிறார்கள்; அவர்களுக்கு அல்லாஹ் சீக்கிரத்தில் கருணை புரிவான் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான் 9:71