செவ்வாய், 2 நவம்பர், 2010

கருணாநிதிக்கு தனது பிள்ளைகளால் ஆபத்து-தா.பாண்டியன்

திருவாரூர்: முதல்வர் கருணாநிதிக்கு யாராலும் ஆபத்து இல்லை. அவரது சொந்தப் பிள்ளைகளால்தான் ஆபத்து என்று கூறியுள்ளார் தமிழக சிபிஐ செயலாளர் தா.பாண்டியன்.

கோட்டூரில் நடந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் பேசுகையில், தமிழகத்தில் எது நடந்தாலும் கம்யூனிஸ்ட் கட்சியை விமர்சித்து வருகிறார் முதல்வர் கருணாநிதி. தமிழக முதல்வர் கருணாநிதிக்கு கம்யூனிஸ்டுகளால் ஆபத்தில்லை. அவர் பெற்ற பிள்ளைகள், பிள்ளைகளின் பிள்ளைகளால்தான் ஆபத்து.

தற்போதுள்ள சூழ்நிலையில் காங்கிரஸ் கட்சி திமுக கூட்டணியில் நீடித்திருக்குமா என்பது சந்தேகமே. காங்கிரஸ் கட்சி அதிமுக கூட்டணிக்கு வந்தால், அங்கு கம்யூனிஸ்ட்டுகளுக்கு இடமில்லை என்பதற்காகத்தான் கருணாநிதி கம்யூனிஸ்ட் கட்சிகளைப் பார்த்து ஏமாறப் போகிறீர்கள் என்கிறார்.

அர்ச்சகர்கள் தொடங்கி பல தரப்பினரும் அரசு கடைபிடிக்கும் தவறான கொள்கை காரணமாக அரசுக்கு எதிராக திரண்டுள்ளனர். இந்நிலையில், பாமக மற்றும் இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் அதிமுகவுடன் இணைந்தால் வரவுள்ள தேர்தலில் திமுகவுக்கு எதிர்க்கட்சி என்ற அந்தஸ்து கூட கிடைக்காது.

தேர்தலில் சரிவு ஏற்பட்டதால் சோர்ந்து விடும் இயக்கமல்ல கம்யூனிஸ்ட் இயக்கம். அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவையும், உழைக்கும் மக்களையும் மோசடி அரசியலிலிருந்து விடுவிப்போம் என தேதி குறித்துக் கொண்டு கம்யூனிஸ்ட்டுகள் பணியாற்ற வேண்டும் என்றார் அவர்.

காவிரிப் பிரச்சினையில் தமிழகத்திற்கு கருணாநிதி செய்த 4 துரோகங்கள்-ஜெ.

Jayalalithaசென்னை: காவிரி நீர் விவகாரத்தில் தமிழகத்திற்கு நான்கு துரோகங்களை செய்துள்ளார் முதல்வர் கருணாநிதி. இனியாவது காவிரி நீரைப் பெறும் விவகாரத்தில் திமுக அரசு ஆக்கப்பூர்வமாக எதையாவது செய்ய வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

காவிரி நதிநீர் ஆணையத்தை நான் பல் இல்லாத ஆணையம் என்று 2002-ஆம் ஆண்டு கூறியதாகவும், தற்போது இதன் மீது மிகுந்த மரியாதையும், நம்பிக்கையும் உள்ளவரைப் போல பேசுவதாகவும் கருணாநிதி தன்னுடைய அறிக்கையில் கூறியிருக்கிறார்.

2002-ஆம் ஆண்டு அல்ல, 1998-ஆம் ஆண்டு இந்த காவிரி நதிநீர் ஆணையம் அமைக்கப் பெற்றதிலிருந்தே இது அதிகாரமற்ற ஆணையம் என்று தான் நான் குறிப்பிட்டு வருகிறேன்.

1998-ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை ஒரே நிலையைத் தான் நான் கடைபிடித்து வருகிறேன். தமிழகத்தின் உரிமையை பெறும் வகையில் அதிகாரிகளைக் கொண்ட அதிகாரமுள்ள காவிரி நதிநீர் ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்பது தான் என்னுடைய நிலைப்பாடு.

காவிரிப் பிரச்சினையில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு 1970 ஆம் ஆண்டு முதன் முதலாக கடிதம் எழுதியதாக கூறி இருக்கிறார் கருணாநிதி. இதே கருணாநிதி தான், “கர்நாடக அரசு ஹேமாவதி அணையைக் கட்டிக் கொள்வதில் தமிழக அரசுக்கு எந்தவித ஆட்சேபணையும் இல்லை” என்று 6.3.1970 அன்று பேரவையில் பேசி இருக்கிறார் என்பது வரலாறு. இது கருணாநிதியின் முதல் துரோகம்.

இதனைத் தொடர்ந்து, காவேரி நதியின் உபநதிகளாகிய கபினி, ஹேமாவதி, ஹாரங்கி, சொர்ணவதி ஆகியவற்றில் பல்வேறு கட்டுமானப் பணிகளை மத்திய நீர் ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமலும், மத்திய திட்டக் குழுவின் ஒப்புதல் இல்லாமலும், தன்னிச்சையாக கர்நாடகம் துவக்கியது. கர்நாடக அரசின் இந்த அத்துமீறல்களை எல்லாம் கண்டு கொள்ளாமல் இருந்தவர் தான் கருணாநிதி. இது கருணாநிதியின் இரண்டாவது துரோகம்.

காவிரிப் பிரச்சினை குறித்து பேரவையில் 8.7.1971 அன்று தீர்மானம் நிறைவேற்றியதாக கூறி இருக்கிறார் கருணாநிதி. ஆனால் இந்தத் தீர்மானத்தின் அடிப்படையில், 4.8.1971 அன்று இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 131-ன் கீழ் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை பேரவை மற்றும் மேலவைக்கு தெரிவிக்காமலேயே தெரிவிக்காமலேயே தனக்குள்ள அரசியல் நெருக்கடி காரணமாக திரும்பப் பெற்றுக் கொண்டு விட்டார் கருணாநிதி! இது கருணாநிதியின் மூன்றாவது துரோகம்.

18.2.1892-ஆம் ஆண்டு மெட்ராஸ் பிரசிடென்சி மற்றும் மைசூர் சமஸ்தானம் ஆகியவற்றுக்கு இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் தான் காவேரி தொடர்பான முதல் ஒப்பந்தம் ஆகும். 1924-ஆம் ஆண்டு இரண்டாவது ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த இரண்டாவது ஒப்பந்தம் 50 ஆண்டு காலம் நடைமுறையில் இருக்கும் என்றும், மறு ஒப்பந்தம் 50 ஆண்டுகளுக்கு பிறகு ஏற்படுத்திக் கொள்வது என்றும் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, இந்த ஒப்பந்தம் 1974-ஆம் ஆண்டு புதுப்பிக்கப்பட வேண்டும். ஆனால் இந்த ஒப்பந்தத்தை புதுப்பிக்கத் தவறியவர் கருணாநிதி! இது கருணாநிதியின் நான்காவது துரோகம்.

அடுத்தபடியாக, நான் முதல்வராக இருந்த போது நடுவர் மன்றத் தீர்ப்பினை நிறைவேற்ற முயற்சி எடுக்கவில்லை என்று கருணாநிதி என் மீது குற்றம் சாட்டியிருக்கிறார். காவிரி நடுவர் மன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவை நிராகரிக்கும் வகையில் கர்நாடக அரசு அவசரச் சட்டம் இயற்றிய போது, அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அதன் விளைவாக நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு 10.12.1991 அன்று மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டது எனது ஆட்சிக் காலத்தில் தான்.

காவிரி நீரை தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டும் என்று மத்திய அரசும், கர்நாடக அரசும் வலியுறுத்தப்பட்டது எனது ஆட்சிக் காலத்தில் தான்.

இது தவிர, அதிகாரமுள்ள காவிரி நதிநீர் ஆணையம் அமைக்கப்பட வேண்டும் என்ற எனது கோரிக்கையை பாரதிய ஜனதா தலைமையிலான மத்திய அரசு புறக்கணித்த போது, அந்த அரசுக்கு அளித்து வந்த ஆதரவை அதிமுக விலக்கிக் கொண்டது.

காவிரிப் பிரச்சினைக்காக, எனது ஆட்சிக் காலத்தில் 2002-ஆம் ஆண்டு அனைத்துக் கட்சித் தலைவர்களையும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழுவையும் அழைத்துக் கொண்டு போய் பிரதமரைச் சந்தித்தோம்.

கடந்த நான்கரை ஆண்டு கால தி.மு.க. ஆட்சியில் காவிரி நதிநீரைப் பெற கருணாநிதி என்ன நடவடிக்கை எடுத்தார்? ஏதாவது கேட்டால் கடிதங்கள் எழுதியதற்கான புள்ளி விவரங்களை தருகிறார். இதை வைத்துக் கொண்டு என்ன செய்வது? காவிரி நீரைப் பெற்றுத் தருவதற்காக மத்திய அரசை வலியுறுத்தவோ அல்லது கர்நாடக அரசை வலியுறுத்தவோ கருணாநிதிக்கு துணிச்சல் இருக்கிறதா?

இனிமேல், இது போன்ற அறிக்கைகள் எழுதுவதில் நேரத்தை செலவிடாமல் காவிரி நீரைப் பெற்றுத் தருவதற்கான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழக மக்களின் சார்பில் கருணாநிதியை வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

பாபர் மசூதி இடிப்பை நியாயப்படுத்த முடியாது-இடித்தவர்கள் தண்டிப்பட்டாக வேண்டும்: சோனியா!

Soniaடெல்லி: அயோத்தி நிலம் தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பு, பாபர் மசூதி இடிப்பை நியாயப்படுத்தவில்லை. எனவே மசூதியை இடித்தவர்களை தண்டித்தேயாக வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கூறியுள்ளார்.

டெல்லியில் இன்று ஒரு நாள் காங்கிரஸ் காரியக் கமிட்டிக் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு சோனியா பேசினார்.

அவரது பேச்சிலிருந்து சில பகுதிகள்...

2010ம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதி காங்கிஸ் கட்சியின் நிலைக்குழு ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது. அதில், அயோத்தி பிரச்சினை தொடர்பாக அலகாபாத் உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்ட செயலை எந்த வகையிலும் நியாயப்படுத்தவில்லை என்று ஆணித்தரமாக கூறியிருந்தோம். பாபர் மசூதி இடிப்பை உயர்நீதிமன்றத் தீர்ப்பு நியாயப்படுத்தவில்லை, அதை சரி என்று கூறவில்லை. இது ஒரு அவமானகரமான, குற்றவியல் நடவடிக்கை. இதில் சம்பந்தப்பட்டவகர்கள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது.

தீர்ப்புக்கு முன்பு நாடு எந்த அளவுக்கு பதட்டமாக இருந்ததை அனைவரும் அறிவோம். ஆனால் மக்கள் அமைதியையும், நல்லிணக்கத்தையும் பேணிக் காத்தனர்.

அனைத்து வகையான மதவாதங்களையும் எதிர்த்து நாம் போராட வேண்டிய நிலையில் உள்ளோம். இனவாதம், மதவாதம் எந்த ரூபத்தில் வந்தாலும் நாம் அதை அனுமதிக்கக் கூடாது. மதச்சார்பற்ற இந்தியாவைக் கட்டிக் காக்க அரசியல் போராட்டத்தை நடத்த வேண்டிய நிலையில் நாம் உள்ளோம்.

மும்பையில் பயங்கரவாத தாக்குதல் நடைபெற்று 2 ஆண்டுகளாகி விட்டன. அதற்குக் காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும். தீவிரவாத அச்சுறுத்தல் தொடர்ந்துகொண்டேதான் உள்ளது. எனவே எந்த நிலையிலும் நாம் அஜாக்கிரதையாக இருந்து விடக் கூடாது. தொடர்ந்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த ஆறு மாதங்களாக நடந்து வரும் அசாதாரண சம்பவங்கள் வேதனையைத் தருகிறது. பல அப்பாவி உயிர்கள் பலி போனது குறித்து என்னிடம் பேசியவர்களிடம் நான் வேதனையைப் பகிர்ந்து கொண்டுள்ளேன். மிகவும் கடினமான சூழ்நிலையில் நமது பாதுகாப்புப் படையினர் பணியாற்றி வருகின்றனர். அவர்களுக்கு நமது முழு ஆதரவும் உண்டு.

ஜம்மு காஷ்மீரின் அனைத்து தரப்பினருடனும் அர்த்தப்பூர்வமான பேச்சுக்களை நாம் நடத்த வேண்டிய நிலையில் உள்ளோம். ஜம்மு காஷ்மீர் அரசு மீது அனைவரும் நம்பிக்கை வைக்க வேண்டும்.மத்திய அரசு அனைவரும் நம்பிக்கை வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அமைதி ஏற்பட ஒரு வழி ஏற்படுத்தித் தாருங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன். நமக்கு ஒரு எதிர்காலத்தை ஏற்படுத்தித் தரத்தான் அனைவரும் பாடுபடுகின்றனர் என்பதை அவர்கள் உணர வேண்டும்.

ஒரு ஒட்டுமொத்த தலைமுறையே வன்முறைக்கும், மரணத்திற்கும் இடையே வாழ்ந்து கொண்டிருக்கிறது. இது நிச்சயம் அவர்களது எதிர்காலம் அல்ல. அமைதியான எதிர்காலத்தை அவர்கள் அடைய நாங்கள் பாடுபட்டு வருகிறோம்.

நக்சலிசம் அல்லது இடதுசாரி தீவிரவாதம் நாட்டின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. போலீஸ் நடவடிக்கை தேவை என்பதை நாம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அதேசமயம், பொருளாதார முன்னேற்ற நடவடிக்கைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கிறோம்.

பழங்குடியின மக்களின் தினசரிப் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டியது அவசியம். அவர்கள் முன்னேற்றப்பட வேண்டும். அவர்களது பகுதிகள் வளம் பெற வேண்டும். வளர்ச்சியின் மூலம் மட்டுமே நக்சலிசத்தை ஒழிக்க முடியும் என்றார் சோனியா.

ரூ.40 லட்சம் மோசடி-மாஜி அமைச்சர் அம்மமுத்துப் பிள்ளை சரணடைய உத்தரவு

நெல்லை: போலி ஆவணங்களை கொடுத்து வங்கியில் கடன் வாங்கிய வழக்கில் கோர்ட்டில் சரண் அடையுமாறு முன்னாள் அமைச்சர் அம்மமுத்துபிள்ளைக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டுள்ளது.

பாளையங்கோட்டை ஐஓபி வங்கியில் 2007ல் போலி ஆவணங்களை கொடுத்து ரூ.2.42 கோடி மோசடி செய்ததாக வங்கி தலைமை மேலாளர் பாலசுப்பிரமணி, அதிமுக முன்னாள் அமைச்சர் அம்மமுத்து பிள்ளை, கல்யாணசுந்தரம், மகாலிங்கம் உள்பட 9 பேர் மீது சிபிஐ போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இதில் முன்னாள் அமைச்சர் அம்மமுத்துபிள்ளை, தனது மருத்துவமனைக்கு டாப்ளர் ஸ்கேன் வாங்குவதற்காக போலி ஆவணங்களை வழங்கி ரூ.40 லட்சம் கடன் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் கைதாகாமல் இருக்க முன்ஜாமீன் கேட்டு அம்மமுத்துபிள்ளை ஐகோர்ட் கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ராஜ்சூர்யா மனுதார் கடன் வாங்கி விட்டு டாப்ளர் ஸ்கேன் வாங்கவில்லை. அதை வாங்கியதற்கான ஆவணங்களையும் தாக்கல் செய்யவில்லை.

இந்த வழக்கு மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்க தகுதியான வழக்கு அல்ல. எனவே அவர் கோர்ட்டில் சரண் அடைந்து ஜாமீன் மனுதாக்கல் செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

இதையடுத்து கோர்ட்டில் சரணடையுமாறு உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை நவ 12க்கு ஓத்தி வைத்தார்.

பள்ளி குழந்தைகள் கொலையில் வெளிவராத அதிர்ச்சி தகவல்கள்

கோவை நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி குழந்தைகள் இருவர் கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரத்துக்கு பின் வாய்க்காலில் தள்ளி ஈவு இரக்கமின்றி கொல்லப்பட்ட கொடூரத்தின் பின்னணி, கிரைம் நாவலையும் மிஞ்சுகிறது. "இப்படியும் கொடூரர்கள் இருப்பார்களா?' என்ற கேள்வி, மக்கள் மனதை கொந்தளிக்க செய்திருக்கிறது. படுபாதக கொலைச்சம்பவம் எப்படி நடந்திருக்கும், கொலையாளிகளிடம் சிக்கி பிள்ளைகள் என்னபாடு பட்டிருப்பார்கள், போலீசாரால் உயிருடன் மீட்க முடியாமல் போனதெப்படி என்ற, ஆதங்க கேள்விகள் ஆயுதமாகி இதயத்தை துளைக்கின்றன.
இதற்கான பதில்கள், கொடூரத்தை அரங்கேற்றிய அரக்க கொலையாளிகளான அங்கலக்குறிச்சியைச் சேர்ந்த மோகன்ராஜ்(33), மனோகரன்(23) அளித்துள்ள வாக்குமூலத்தில் அங்குலம், அங்குலமாக விவரிக்கப்பட்டுள்ளது. இதை பதிவு செய்த போலீஸ் அதிகாரிகள் ஒருகட்டத்தில் கண்கலங்கிவிட்டனர். அந்த அளவுக்கு நடந்திருக்கிறது, குழந்தைகளின் உயிர்பறிப்பு. கோவை நகரில் கடத்தப்பட்டதில் இருந்து, போலீசாரிடம் கொலையாளிகள் பிடிபட்டது வரை 250 கி.மீ., பயணித்திருக்கிறது, அரக்கர்களின் ஆம்னி வேன்.

குழந்தைகள், பள்ளிக்கு கிளம்பியது முதல் பலியானது வரை தொடர்ந்த திக்...திக்...திக்..., சம்பவம் இதோ:(கொலையாளிகள் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலம் மற்றும் விசாரணையில் தெரியவந்த தகவல்கள்)கடந்த 29ம் தேதி, காலை 7.50 மணி. கோவை நகரிலுள்ள காத்தான்செட்டி சந்தில் வசிக்கும் துணிக்கடை அதிபர் ரஞ்சித்குமாரின் மகள் முஸ்கன்(11), மகன் ரித்திக்(8) ஆகியோர் முதுகில் புத்தக மூட்டை, கையில் "லஞ்ச் பேக்' சகிதமாக தனியார் பள்ளிக்கு கிளம்பினர். தாயாரும், பாட்டியும் வழியனுப்பி வைக்க தெருவில் காத்திருந்தனர், வழக்கமாக அழைத்துச் செல்ல வரும் ஆம்னி வேனுக்காக; ஆனால், வந்ததோ கொலைகார வேன். இதையறியாத குழந்தைகள், பள்ளிக்குப் போகும் ஆவலுடன் தாவி ஏறி சீட்டில் அமர்ந்தனர். வேனை ஓட்டிவந்த மோகன்ராஜ், தனது கொடூர முகத்தை மறைத்து, புன்னகை பூத்து நடித்தான். கிளம்பிய வேன், பள்ளி நோக்கிச் செல்லாமல் கோவை - பொள்ளாச்சி ரோட்டில் பறந்தது. "அங்கிள், ஏன் இப்படி போறீங்க... ஸ்கூலுக்கு தானே போகணும்?' என, அப்பாவி மாணவி முஸ்கன் கேட்க, "அதுவா, இன்னைக்கு ஸ்கூல் லீவு... அதனால டூர் போயிட்டு வரலாம்...' என்றானாம் கொடூரன். வீட்டுக்கு போகணும் என, குழந்தைகள் அடம்பிடித்தும் அவன் கேட்கவில்லை. இருவரும் அழுதபடியே வேனில் பயணிக்க... அடுத்த 45வது நிமிடத்தில் வேன் பொள்ளாச்சியை அடைந்து, வால்பாறை ரோட்டில் அசுர வேகத்தில் பறந்தது.

அந்நேரத்தில், தங்களது குழந்தைகள் பள்ளிக்குச் செல்லாமல், ஆம்னி வேனில் காணாமல் போனதையறிந்த வீட்டார் பதபதைத்து போய், உறவினர்களின் உதவியுடன் அங்குமிங்குமாக தேடத்துவங்கினர். எங்கும் காணாததை அடுத்து காலை 10.45 மணிக்கு போலீசின் உதவியை நாடினர். மாநகர போலீஸ் நுண்ணறிவுப்பிரிவு மூலமாக தகவல் அறிந்த கமிஷனர் சைலேந்திரபாபு, கடத்தல் வேனை கண்டுபிடித்து குழந்தைகளை மீட்க வாகன சோதனையில் ஈடுபடுமாறு மாநகர போலீசுக்கு உத்தரவிட்டார்; இந்த உத்தரவு கோவை ரூரல் போலீசுக்கும் போகிறது. அதன் பின், துவங்கிய வாகன சோதனையால் பயனொன்றுமில்லை.கடத்தல் வேனை சாலையில் சல்லடை போட்டு போலீசார் தேடிக்கொண்டிருந்த வேளையில், அவ்வேன் பொள்ளாச்சி - வால்பாறை ரோட்டிலுள்ள அங்கலக்குறிச்சிக்குள் நுழைந்தது.

இரு குழந்தைகளுடன் அங்குள்ள ஒரு வீட்டு முன் வேனை நிறுத்திய மோகன்ராஜ், வீட்டு முன் நின்றிருந்த மூதாட்டியிடம், "மனோகரன் இருக் கிறானா' என விசாரிக்க, "இல்லை' என பதில் வந்ததது; வேனை மீண்டும் கிளப்பிச் சென்று சற்று தொலைவில் நிறுத்திய மோகன்ராஜ், போனில் பேசி மனோகரனையும் வரவழைத்தான். அவன் வந்து வேனில் ஏறியதும் மீண்டும் கிளம்பி, ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் நின்றது. மாணவி முஸ்கனிடம், அவரது தந்தை ரஞ்சித்குமாரின் மொபைல்போன் நம்பரை கேட்டு பெற்ற கடத்தல் ஆசாமிகள், போனில் பேசி பணம் பறிக்க திட்டமிடுகின்றனர்...இவர்களது திட்டத்தை எதிர்பார்த்த மாநகர போலீசாரும், போனில் பேசினால் "பேச்சு நடத்த' தயாராக, குழந்தைகளின் வீட்டு "லேண்ட் லைன்' இணைப்பில் "காலர் ஐ.டி.,' (அழைப்பவரின் போன் எண்களை காட்டும் சாதனம்) பொருத்தி தயாராக இருந்தனர். அ

திரடி மீட்பு நடவடிக்கையில் ஈடுபட உதவிக்கமிஷனர் குமாரசாமி தலைமையில் 8 தனிப்படை போலீசாரும் துப்பாக்கி சகிதமாக தயார் நிலையில் இருந்தனர்; ஆனால், போன் ஏதும் வரவில்லை. அங்கே... திடீரென, பணம் பறிப்பு திட்டத்தை மாற்றிய மோகன்ராஜ், மனோகரன் இருவரும் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்யும் திட்டத்தை துவக்கினர். முஸ்கன், ரித்திக்கின் கை, கால்களை கயிற்றால் கட்டினர். ரித்திக்கை, வேனின் பின் இருக்கையில் தள்ளிவிட்டனர். கண்ணாடிகள் மூடப்பட்ட வேனுக்குள் இருந்த இவர்களின் கூச்சல் வெளியில் கேட்கவில்லை. அடி, உதைக்கு பின் வாயடைத்து மவுனமாயினர். முஸ்கனை பாலியல் பலாத்காரம் செய்யும் முயற்சி பலிக்காமல் போனதால், இருவரையும் கொலை செய்யும் முயற்சியாக "பாலிதீன் கவரால்' முகத்தை மூடி மூச்சடைக்கச் செய்தனர்; குழந்தைகளின் உயிர்போராட்டம், இவர்களது கொடூர முயற்சியை தோற்கடித்தது.

இச்சம்பவம், ஆனைமலை - பழனி ரோட்டில் அரங்கேறியது.கடத்தி வெகுநேரமாகிவிட்டதால் போலீசார் நம்மை பிடித்துவிடுவார்கள் என பயந்து போன கொடூரரர்கள், குழந்தைகள் இருவரையும் மலையில் இருந்து பள்ளத்தில் தள்ளி கொலை செய்ய திட்டமிட்டனர்; வாகனங்கள் சென்று வந்ததால் அந்த திட்டமும் எடுபடவில்லை. இதையடுத்து, உடுமலை அருகே சர்க்கார்புதூரிலுள்ள தீவாலப்பட்டியை நோக்கி கொலைகாரர்களின் வேன் பறந்தது. வழியில் வேனை நிறுத்திய கொலைகாரர்கள், சாணிப்பவுடரை பாலில் கலந்து கொடுத்து குழந்தைகளை கொல்ல முயன்றனர். குடிக்க மறுத்து குழந்தைகள் காட்டிய எதிர்ப்பால், மூன்றாவது முயற்சியும் பலிக்கவில்லை; அப்போது, காலை 10.00 மணி. கொலைகாரர்களுக்கு போலீஸ் பயம் அதிகரித்தது. அடுத்த சில நிமிடங்களில் வேன் பறந்து தீவாலப்பட்டியை அடைந்தது. ஊருக்குள் இருந்து 20 கி.மீ., தொலைவிலுள்ள பி.ஏ.பி., வாய்க்கால் கரையில் நின்றது.இரு குழந்தைகளின் கை கட்டுகளையும் அவித்துவிட்டு, அவர்கள் கொண்டு வந்திருந்த டிபன் பாக்ஸ்களை திறந்தனர்.

"சாப்பிடுங்கள், சாப்பிட்டு முடிந்ததும் உங்கள் வீட்டுக்கே திரும்பி அழைத்துச் செல்கிறோம்...' எனக்கூற, குழந்தைகள் சாப்பிட மறுத்தனர். மிரட்டி ஒரிரு சப்பாத்திகளை சாப்பிட வைத்த பின், முஸ்கனை அடித்து, உதைத்து தங்களது "எண்ணத்தை' நிறைவேற்றிக்கொண்டனர். அரக்கர்களிடம் சிக்கிய குழந்தைகள் இருவரும் குற்றுயிரும், குலையுயிருமாக கிடக்க, இருவரையும் மிரட்டி எழுப்பி வாய்க்காலில் கைகழுவுமாறு மிரட்டியுள்ளனர். பயந்துபோன குழந்தைகள், பல அடி ஆழத்துடன் தண்ணீர் கரைபுரண்டோடும் வாய்க்கால் கரையோரத்தில் அமர்ந்து, ஓடிய தண்ணீரில் கைகழுவினர்; அடுத்த விநாடிகளில் நடக்கப்போகும் ஆபத்தை அறியாதவர்களாய்...இருவரையும், முதுகு பக்கமிருந்து தண்ணீரில் தள்ளிவிட்ட கொலை பாதகர்கள், நீரில் அடித்துச் செல்லப்பட்ட குழந்தைகளை வெகுநேரம் பார்த்திருந்து, உயிர்போனதை உறுதி செய்தபின் அங்கிருந்து கிளம்பினர். கிளம்பும் போது, குழந்தைகளின் ஸ்கூல் பேக்குகளை அதே இடத்தில் வீசிச் சென்றனர்; அப்போது, காலை 11.30 மணி."எல்லாம் முடிந்தும்', எதுவும் தெரியாத நிலையில், குழந்தைகளை மாலைவரை தேடிக்கொண்டிருந்தனர், மாநகர போலீசார்.

மாலை 5.00 மணியளவில்தான், கடத்தல்காரன் மோகன்ராஜின் மொபைல் போன் நம்பரை ஒருவழியாக கண்டுபிடித்த போலீசார், "டவர் லொகேஷன்' பார்த்து, உடுமலை அருகிலுள்ள தளி பகுதியை முற்றுகையிட்டனர். "எப்படியும் குழந்தைகளை உயிருடன் மீட்டுவிடலாம்...' என்ற நம்பிக்கையுடன் இருந்த போலீசாருக்கு, தீவாலப்பட்டியிலுள்ள பி.ஏ.பி., வாய்க்கால் அருகே குழந்தைகளின் ஸ்கூல் பேக் கிடப்பதாக தகவல் கிடைத்து "அப்செட்' ஆகினர். இரு குழந்தைகளையும் வாய்க்காலில் தள்ளி கொன்றிருப்பார்களோ? என்ற சந்தேகம் ஏற்பட்டு, உடல்களை தேடத் துவங்கினர்.அதே நேரத்தில், கொலையாளிகளை பிடிப்பதற்கான நடவடிக்கையும் தீவிரப்பட்டிருந்தது. வெகுநேரம் நடந்த தேடலுக்கு பின் முஸ்கன் உடல் மீட்கப்பட்டது; ரித்திக் குறித்து தகவல் ஏதுமில்லை. "முஸ்கனை கொலை செய்த கொலையாளிகள், ரித்திக்கை உயிருடன் கையில் வைத்திருக்கலாம்' என்ற நம்பிக்கையுடன் கடத்தல்காரர்களுக்கு எதிரான வேட்டையை இன்னும் தீவிரப்படுத்தினர். நீண்ட நேர தேடலுக்கு பின், கொடூரன் மோகன்ராஜ் மட்டும் பிடிபட்டான். குழந்தைகள் இருவரையும் வாய்க்காலில் தள்ளி கொலை செய்ததை போட்டுடைத்தான்; போலீசார் அதிர்ச்சியடைந்தனர். அதன் பிறகே, ரித்திக் உடலும் ஒரு வழியாக மீட்கப்பட்டது. கொலைபாதக செயலின் கூட்டாளி மனோகரனும் பின்னர் பிடிபட்டான். பிள்ளைகள் இருவரையும் பலிகொடுத்த பெற்றோர், மீளாத்துயரில் தள்ளப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து, மாநகர போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு கூறுகையில்,"" காலை 7.55 மணிக்கே குழந்தைகள் கடத்தப்பட்ட போதிலும், 10.45 மணிக்குத்தான் எங்களுக்கே தகவல் கிடைத்தது. அதற்குள் கடத்தல் வேன் பொள்ளாச்சியை கடந்து கண்காணிப்பில்லா எல்லைக்குள் நுழைந்துவிட்டது. எங்களுக்கு தகவல் முன்னரே கிடைத்திருந்தால் உயிருடன் மீட்பதற்கான அவகாசம் கிடைத்திருக்கும்; இச்சம்பவத்தால், நாங்களும் மிகுந்த வேதனை அடைந்துள்ளோம்,'' என்றார்.

நாடகமாடிய கொலையாளி : போலீசாரிடம் பிடிபட்டதும் கொலையாளி மோகன்ராஜ், ஏதுமறியாதவனை போல நடித்துள்ளான். "என்ன சொல் றீங்க சார், ரஞ்சித்குமாரின் குழந்தைகளை கடத்தி கொலை செய்துவிட்டார்களா?' என எதிர்கேள்வி கேட்டு, போலீசாருக்கு ஆத்திரமூட்டியுள்ளான். ஒரு கட்டத்தில் பொறுமையிழந்த போலீசார், "முறைப்படி விசாரணையை' துவக்க, கொலை செய்தததை ஒப்புக் கொண்டு, நடந்த அனைத்தையும் அச்சுக்கோர்த்தால் போல விவரித்தான். அதன்பிறகே, போலீசார் அடுத்த கட்ட விசாரணையை துவக்கினர்.

கடத்தப்பட்ட 2 குழந்தைகள் தண்ணீரில் மூழ்கடித்து  கொலை :  கார் டிரைவர் சிக்கினான் : கோவை, காத்தான்செட்டி சந்தில் வசிப்பவர் ரஞ்சித்குமார் ஜெயின்(40); சுக்ரவார்பேட்டை பகுதியில் துணிக்கடை நடத்துகிறார். இவரது மகள் முஸ்கின் (11), மகன் ரித்திக்(8). இருவரும் கோவையில் உள்ள தனியார் பள்ளியில் முறையே மூன்று மற்றும் ஐந்தாம் வகுப்பு படித்தனர். நேற்று முன்தினம் காலை இருவரும் பள்ளிக்கு வேனில் செல்வதற்காக, வீட்டருகே நின்றிருந்தனர். வழக்கமாக வரும் வேனுக்கு பதிலாக, வேறு வேன் வந்து நின்றது. அதில், இருவரும் ஏறிச் சென்றனர். வேன் சென்ற சில நிமிடங்களில் வழக்கமாக வந்து செல்லும் வேன் வந்தது. பயணத்துக்கு குழந்தை வராததால் வேன் டிரைவர், ரஞ்சித்குமார் ஜெயினை மொபைல் போனில் தொடர்பு கொண்டு விவரம் கேட்டார். தான் வியாபார விஷயமாக வெளியூரில் உள்ளதாகக் கூறிய அவர், உடனடியாக தன் வீட்டாரை தொடர்பு கொண்டு கேட்க, குழந்தைகள் இருவரும் வேனில் பள்ளிக்குச் சென்று விட்டதாக தெரிவித்தனர். திடுக்கிட்ட ரஞ்சித்குமார், குடும்பத்தாரை உஷார்படுத்தி வெரைட்டி ஹால் ரோடு போலீசில் புகார் அளிக்கச் செய்தார். இதையடுத்து, மாநகர போலீசார் வாகனச் சோதனையில் தீவிரமாக ஈடுபடத் துவங்கினர்.

போலீசாரின் பல்வேறு கட்ட விசாரணையில், குழந்தைகளை கடத்திச் சென்றது, அவர்கள் வீட்டில் முன்னர் வேலை பார்த்த கார் டிரைவர் மோகன் என்பது தெரியவந்தது. மோகனை பிடித்து போலீசார் விசாரித்ததில், குழந்தைகள் இருவரையும் கடத்தி, உடுமலை அருகே உள்ள தளி பி.ஏ.பி., வாய்க்காலில் வீசியதாக தெரிவித்தார். போலீசார் நேற்று முன்தினம் இரவு முதல், சுல்தான்பேட்டை பி.ஏ.பி., வாய்க்காலில் குழந்தைகளை தேடி வந்தனர். நேற்று காலை 8.45 மணியளவில் வாவிபாளையம் பி.ஏ.பி., வாய்க்கால் தண்ணீரில் முஸ்கின் பிரேதம் மிதந்தது. பிரேதத்தை, சுல்தான்பேட்டையைச் சேர்ந்த கட்டட தொழிலாளி சதீஷ்குமார்(27), தண்ணீர் ஊற்றும் பரமன் (27) ஆகியோர் மீட்டு தண்ணீரில் அடித்துச் செல்லாதபடி, வாய்க்கால் கரையில் கயிற்றை கட்டி, அதை முஸ்கின் கையில் கட்டினர்.

இதுகுறித்து துணை கமிஷனருக்கு தகவல் தெரிவித்தனர். வாவிபாளையம் வந்த அவர், முஸ்கின் உடல் மீட்கப்பட்டது குறித்து கமிஷனர் சைலேந்திரபாபுவுக்கு தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு கமிஷனர் வந்த பின், முஸ்கின் பிரேதம் வாய்க்காலில் இருந்து வெளியே எடுக்கப்பட்டு, பல்லடம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.போலீஸ் குழுவினர், வாவிபாளையம் பகுதி பி.ஏ.பி., வாய்க்காலில் மூன்று கிலோ மீட்டர் தொலைவுக்கு நடந்தே சென்று ரித்திக் உடலை தேடும் பணியில் ஈடுபடத்துவங்கினர். இந்நிலையில் சிறுவனின் உடல் பல்லடம் அருகே வாய்க்காலி?ல் இருந்து கண்டெடுத்தனர். ரஞ்சித்குமாரின் உறவினர்கள், வாவிபாளையம் பி.ஏ.பி., வாய்க்கால் பகுதியில் குவிந்திருந்தனர்.

முஸ்கின் உடலில் எவ்விதமான காயமும் இருந்த தடயம் தெரியவில்லை. இருப்பினும் முஸ்கின் கொலை செய்யப்பட்டு பி.ஏ.பி., தண்ணீரில் வீசப்பட்டாரா அல்லது பிடித்து தள்ளப்பட்டாரா என்பது பிரேத பரிசோதனை முடிவில் தெரிய வரும் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. ரஞ்சித்குமாரிடம் பணம் பறிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மோகன், குழந்தைகளை கடத்தியுள்ளான். அந்த எண்ணம் ஈடேறாது என நினைத்த மோகன், தன்னை குழந்தைகள் காட்டிக் கொடுத்து விடுவரோ என அஞ்சி, இக்கொடூர செயலில் ஈடுபட்டுள்ளான்.

கொலை செய்த இடத்தில் நடித்துக் காட்டிய டிரைவர்: ""குழந்தைகளுடன் விளையாடிய பின், அவர்களை கால்வாயில் தள்ளிவிட்டு வந்தேன்,'' என கைதான டிரைவர் தெரிவித்துள்ளான். குழந்தைகளை கடத்தி, பணம் கேட்டு மிரட்டி, சம்பாதிக்கலாம் என டிரைவர் மோகன்ராஜ், அவனது நண்பன் பொள்ளாச்சி கோட்டூர் மலையாண்டிபட்டணம் மனோகரனுடன் சேர்ந்து திட்டமிட்டுள்ளான். அதற்கென நேற்று முன்தினம் காலை பள்ளிக்குச் செல்ல தயாராக இருந்த குழந்தைகளை கடத்தினான். பொள்ளாச்சி வந்து, மனோகரனை மொபைல் போனில் அழைத்தான். மனோகரனை தொடர்பு கொள்ள முடியாததால், பொள்ளாச்சியிலிருந்து நா.மூ., சுங்கம் வந்து, அங்கிருந்து ஆனைமலை - எரிசனம்பட்டி - பழநி சாலையில் வந்தான். தொடர்ந்து மனோகரனை தொடர்பு கொள்ள முடியாததால், பகல் 2 மணியளவில் மெயின் ரோட்டிலிருந்து பி.ஏ.பி., பிரதான கால்வாய் சாலையில் வடக்கு நோக்கி காரை ஓட்டி வந்தான்.

பகல் 2.30 மணியளவில் குழந்தைகள் பசிக்கு அழுததால், கால்வாயில் 8.3வது கி.மீட்டரில், பூலாங்கிணர் கிளை கால்வாய் பிரியும் இடத்தில் குட்டை கருப்பராயன் கோவில் அருகே காரை நிறுத்திவிட்டு, குழந்தைகளை சாப்பிட வைத்தான். பின்னர் சிறிது தூரத்தில் ஷட்டர் மற்றும் வாய்க்காலில் இறங்கும் படிக்கட்டுகள் அமைந்துள்ள பகுதிக்கு அழைத்துச் சென்று, அமர வைத்து விளையாடினான். அப்போதும், மனோகரனை தொடர்பு கொண்டும் பயனில்லாததால், குழந்தைகளை அழைத்துக் கொண்டு திரும்பச் சென்றாலும் சிக்கல் என நினைத்து, கரையில் அமர்ந்திருந்த குழந்தைகளை திடீரென வாய்க்கால் தண்ணீரில் தள்ளினான்.

குழந்தைகள் அலறியவாறு, உயிருக்கு போராடியும் மனம் இளகாமல் வேடிக்கை பார்த்தான். சிறிது நேரத்தில் குழந்தைகள் நீரில் மூழ்கினர். பின்னர், வந்த வழியிலேயே கோவைக்கு திரும்பிச் செல்லும் போது போலீசில் சிக்கினான்.குற்றவாளியைப் பிடித்த போலீசார் நேற்று முன்தினம் இரவு, அதே வழித்தடத்தில் அழைத்து வந்தனர். போலீசாரிடம், மிரட்டி பணம் சம்பாதிக்க கடத்தியது, நண்பனுடன் திட்டமிட்டது, வந்த வழித்தடம், சம்பவம் நடந்த இடம், கொடூர மனதுடன் தண்ணீரில் தள்ளிவிட்டு கொலை செய்த விதம் குறித்து போலீசாருக்கு நள்ளிரவு 2.30 மணிக்கு மோகன் விளக்கினான்.

தகவல் கொடுத்த விவசாயி: உடுமலை அருகேயுள்ள சர்க்கார்புதூர் கிராமத்திலுள்ள பி.ஏ.பி., பிரதான கால்வாயில், குழந்தைகளின் புத்தக "பேக்' மிதந்து சென்றதை நேற்று முன்தினம் மாலை பார்த்த விவசாயி சவுந்தரராஜன், பேக்கை மீட்டார். அதிலிருந்த பள்ளி போன் நம்பருக்கு தகவல் கொடுத்தார். பி.ஏ.பி., பிரதான கால்வாய், திருமூர்த்தி அணையிலிருந்து 148 கி.மீ., நீளமுடையது. அதில், வினாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீர் சென்று கொண்டிருந்ததோடு, இரவு நேரமானதால் தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இரவு முழுவதும் வாய்க்கால் கரை ஓரத்திலேயே தேடும் பணி நடந்ததோடு, ஷட்டர்கள் அமைந்துள்ள பகுதிகளிலும் தேடுதல் பணி நடந்தது. இரவு முழுவதும் தேடியும் குழந்தைகளின் சடலங்கள் சிக்கவில்லை. நேற்று அதிகாலை தேடும் பணிக்காக பிரதான கால்வாயில் தண்ணீர் நிறுத்தப்பட்டது. உடுமலை சர்க்கார்புதூர் வாய்க்கால் கரையில் உள்ள குட்டை கருப்பராயன் கோவிலில், சாப்பாடு பேக் இருந்ததை போலீசார் மீட்டனர். அதில், சப்பாத்தி, திராட்சை மற்றும் முட்டைகோஸ் பொரியல் ஆகியவை இருந்தன. இதில், கொஞ்சம் மட்டும் சாப்பிடப்பட்டிருந்தது. வாய்க்காலின் கடைசி பகுதியான சுல்தான்பேட்டை வாவிபாளையம் பகுதியில், பெண் குழந்தை முஸ்கினின் சடலம் மட்டும் மீட்கப்பட்டது.

குழந்தைகளை கடத்தி கொலை செய்த கொடூர கொலைகாரன் சிறையில் அடைப்பு: பணம் பறிப்பதற்காக குழந்தைகளைக் கடத்திய மோகன்ராஜ் போலீசில் பிடிபட்டு விடுவோம் என்ற பயத்தில், குழந்தைகளைக் கால்வாயில் தள்ளி விட்டுக் கொன்றதாக வாக்குமூலம் அளித்துள்ளான்.  தப்பியோட நினைத்த மோகன்ராஜை , போலீசார் நேற்று முன் தினம் இரவில் சுற்றி வளைத்துப் பிடித்தனர். நேற்று முழுவதும் அவனிடம் விசாரணை நடத்தப்பட்டது.கோவை மாநகர காவல்துறை கமிஷனர் சைலேந்திரபாபுவின் உத்தரவின்பேரில், நேற்று அவனை கைது செய்த வெரைட்டிஹால் போலீசார், அவன் மீது கொலை வழக்கு மற்றும் கடத்தல் வழக்குகள் பதிவுசெய்தனர். நேற்று இரவு 10.45 மணிக்கு, ஜே.எம்.1 மாஜிஸ்திரேட் சத்தியமூர்த்தியின் முன்பாக மோகன்ராஜை போலீசார் ஆஜர் படுத்தினர். வரும் 12ம் தேதி வரையிலும் அவனை "ரிமாண்ட்' செய்து, மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.அவனது முகத்தில் கருப்புத் துணியைச் சுற்றி, பலத்த பாதுகாப்புடன் அவனை அழைத்துச் சென்ற போலீசார், கோவை மத்திய சிறையில் அடைத்தனர். ஈவு இரக்கமின்றி, அப்பாவிக் குழந்தைகளை கொலை செய்த மோகன்ராஜூவுக்கு ஆதரவாக, கோவை மாவட்டத்தைச் சேர்ந்த எந்த வக்கீலும் ஆஜராவதில்லை என முடிவெடுத்திருப்பதாக வழக்கறிஞர் வட்டாரங்கள் தெரிவித்தன.

சிறுவன் உடல் பொள்ளாச்சி அருகே வாய்க்காலில் மீட்பு : கோவையில் கடத்தப்பட்ட துணிக்கடை அதிபர் மகனின் சடலம், பொள்ளாச்சி அருகே பி.ஏ.பி., பிரதான வாய்க்காலில் நேற்று மீட்கப்பட்டது.கோவை துணிக்கடை அதிபர் ரஞ்சித்குமார் மகள் முஸ்கின் ஜெயின் (11), மகன் ரித்திக் ஜெயின் (8), இருவரும் கார் டிரைவரால் கடத்தப்பட்டு உடுமலை அடுத்த தளி பி.ஏ.பி., வாய்க்காலில் வீசப்பட்டனர். ரித்திக்கின் சடலம் கிடைக் காததால், போலீசார் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தேடும் பணிக்காக, பிரதான வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்பட்டது. சின்னபாப்பானூத்து பகுதியிலிருந்து கோமங்கலம் போலீசாரின் எல்லை துவங்குகிறது. அங்கு துவங்கும் வாய்க்காலிருந்து சடலத்தை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர். பொள்ளாச்சி - உடுமலை ரோட்டில் கெடிமேடு அருகே பி.ஏ.பி., பிரதான வாய்க்காலில் நேற்று காலை 11.40 மணிக்கு, நம்பிநாராயணன் என்பவர் பள்ளி சீருடை அணிந்த நிலையில் மாணவன் சடலம் மிதந்து வருவதை பார்த்துள்ளார். வாய்க்கால் மேடு வழியாக சடலத்தை, பைக்கில் பின் தொடர்ந்து வந்த அவர், தென்னை மட்டையை கொண்டு சடலத்தை தடுத்து, அருகில் உள்ளவர்களை அழைத்துள்ளார்.வாய்க்காலுக்கு அருகிலுள்ள தென்னந்தோப்பில் தேங்காய் பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மாரிமுத்து, கனகராஜ், செந்தில்குமார் ஆகியோர், அரைமணி நேர போராட்டத்திற்கு பின் பகல் 12.20 மணிக்கு சடலத்தை வெளியே மீட்டனர்.சம்பவ இடத்திற்கு வந்த கோமங்கலம் போலீசார், மாணவன் சடலத்திலிருந்த அடையாளங்களை குறித்து கொண்டு, கோவை போலீஸ் கமிஷனருக்கும்,மாணவரின் உறவினருக்கும் தகவல் தெரிவித்தனர். கமிஷனர் சைலேந்திரபாபு, அங்கு வந்து சடலத்தை பார்வையிட்டு, மீட்டவர்களிடம் விசாரித்தார். அதன்பின், கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

போலீசார் கூறியதாவது: சின்னப்பாப்பனூத்து பகுதியிலிருந்து குண்டலப்பட்டி அருகே வரும் வழியில் வாய்க்கால் குறுகி இருப்பதோடு, புதர் அதிகளவில் வளர்ந்திருக்கும். வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தியதும், புதரின் இடையில் சடலம் சிக்கியிருக்க வாய்ப்புள்ளது. வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்பட்டதால், நீரின் வேகத்தில் புதரில் சிக்கியிருந்த சடலம் அடித்து வந்திருக்கலாம், என்றனர். ரித்திக்கின் சடலத்தை மீன் அரித்ததால் உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டிருந்தது. கை, காலில் தோலுரிந்த நிலையிலும், கண்களிலிருந்து ரத்தம் வடிந்தும் காணப்பட்டது. மூன்று நாட்களாக தண்ணீரில் சடலம் ஊறியதால், அழுகத் துவங்கியது.
இரவு, பகலாக தேடுதல் வேட்டை: மாணவர் ரித்திக்கின் உடலை தேடும் பணியில், போலீசார் ஒருப்புறம் ஈடுபட்டிருந்தாலும், ரஞ்சித்குமாரின் உறவினரும் வாய்க்கால் முழுவதும் உடலை தேடும் பணியில் ஈடுபட்டனர். இரு தரப்பிலும், இரவு, பகலாக தேடும் வேட்டை நடந்தது. ரஞ்சித்குமாரின் உறவினர்களுக்கு, பொள்ளாச்சி சுற்றியுள்ள பகுதி தெரியாததால், உள்ளூர் ஆட்களை உடன் அழைத்து சென்று தேடும் பணியை மேற்கொண்டனர். இரண்டு நாட்களில், 120 கி.மீ., தூரம் போலீசாரும், உறவினரும் தேடி அலைந்துள்ளனர். அதன் பின், மாணவரின் சடலம் கைப்பற்றப்பட்டது.

சடலத்தைத் தேடி  அலைந்த போலீசார் : பி.ஏ.பி., வாய்க்காலில் வீசப்பட்ட மாணவர் ரித்திக் சடலம், நெகமம் அடுத்த கப்பாளங்கரை அருகே பி.ஏ.பி., வாய்க்காலில் ஒதுங்கி இருப்பதாக நேற்று தகவல் கிடைத்தது. நெகமம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை தேடினர். அங்கு, சடலம் கிடைக்கவில்லை. இந்நிலையில், காமநாயக்கன் பாளையம் அருகே பி.ஏ.பி., வாய்க்காலில் சடலம் இருப்பதாக மற்றொரு தகவல் வெளியானது. பல்லடம் போலீசார் சென்று சடலத்தை தேடி, அங்கும் சடலம் கிடைக்கவில்லை. இறுதியில், பொள்ளாச்சி அடுத்த கெடிமேடு அருகே வாய்க்காலிலிருந்து ரித்திக்கின் சடலம் மீட்கப்பட்டது. மூன்று பகுதியை சேர்ந்த போலீசாரும் சடலத்தை தேடி அலைந்தனர்.

குழந்தைகள் கொலையில் இன்னொரு டிரைவரும் உடந்தை : பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான கொடுமை : கோவையில் அக்கா - தம்பி கடத்தி கொலை செய்யப்பட்ட கொடூர சம்பவத்தில் உடந்தையாக இருந்த மற்றொரு கார் டிரைவரை தனிப்படையினர் தேடுகின்றனர். சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. கோவை, ரங்கேகவுடர் வீதி அருகேயுள்ள காத்தான்செட்டி சந்து பகுதியில் வசிப்பவர் ரஞ்சித்குமார் ஜெயின்(40); துணிக்கடை வைத்துள்ள இவர் நூல் வியாபாரத்திலும் ஈடுபட்டுள்ளார். இவரது மகள் முஸ்கின்(11), மகன் ரித்திக்(8). இருவரும் தனியார் பள்ளியில் 5 மற்றும் 3ம் வகுப்பில் படித்து வந்தனர்.கடந்த வெள்ளியன்று, குழந்தைகள் இருவரும் பள்ளி செல்வதற்காக வீட்டருகே, ஆம்னி வேனுக்காக காத்திருந்தனர். அப்போது வந்த ஆம்னி வேனில் ஏறிய இருவரும் கடத்தப்பட்டனர். காலை 10.30க்கு தகவல் கிடைத்த போலீசார் கோவை நகர் முழுவதும் ஆம்னி வேன்கள் உள்பட அனைத்து வாகனங்களும் அதிரடி சோதனைக்கு உட்படுத்தப்படுத்தினர்.

காணாமல் போன இருவரையும் கண்டு பிடிக்க, கோவை போலீஸ் கமிஷனர் சைலேந்திரபாபு உத்தரவில், உதவி கமிஷனர் குமாரசாமி தலைமையில் எட்டு தனிப்படை அமைக்கப்பட்டது. கால் டாக்சி டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் கொடுத்த தகவலில், கடத்தலில் ஈடுபட்டது பொள்ளாச்சியைச் சேர்ந்த டிரைவர் மோகன்ராஜ் என்பதுதெரிந்தது.அவரது மொபைல் போனின் இ.எம்.ஐ.இ.,எண்ணைக் கொண்டு தேடிபோது, திருமூர்த்திமலை அடிவாரத்தில் இருப்பது தெரிந்தது. உஷார் அடைந்த தனிப்படை போலீசார், பொள்ளாச்சி மற்றும் உடுமலை போலீசாருக்கு தகவல் கொடுத்ததுடன் அப்பகுதிக்கு விரைந்தனர்.இதற்கிடையில், சர்க்கார்புதூர் அருகே ஸ்கூல் பேக் பி.ஏ.பி.,கால்வாயில் மிதந்து வந்தது கைப்பற்றப்பட்டு, அது கடத்தப்பட்ட மாணவன் ரித்திக்கின் ஸ்கூல் பேக் என்பது உறுதி செய்யப்பட்டது.இச்சூழலில், தனிப்படை போலீசாரின் தீவிர கண்காணிப்பில் டிரைவர் மோகன்ராஜ் கைது செய்யப்பட்டான். அவனிடம் நடத்திய விசாரணைத் தொடர்ந்து,70 கி.மீ., தூரத்தில் உள்ள பல்லடம் அருகே கால்வாயில் மிதந்து வந்த சிறுமியின் உடல் கைப்பற்றப்பட்டு, கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. சிறுவனின் உடல் கால்வாய் நெடுக தேடியும் கிடைக்கவில்லை. ஆனாலும், தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடி வந்தனர். இரண்டு நாட்களுக்கு பின், நேற்று பகல் 11.30 மணி அளவில், உடுமலை - பொள்ளாச்சிக்கு இடையில் உள்ள கெடிமேடு எனும் பகுதியில் பி.ஏ.பி.,பிரதான கால்வாயில் மிதந்து வந்த சிறுவனின் உடல் சிக்கியது.கைது செய்யப்பட்ட டிரைவர் மோகன்ராஜிடம் போலீசார் நடத்திய சோதனையில் பல திடுக் செய்திகள் வெளியாகியுள்ளன. டிரைவர் மோகன்ராஜ் ஏற்கனவே 15 நாட்கள் பள்ளி மாணவ, மாணவிகளை ஏற்றிச் செல்லும் வாடகை வேன் டிரைவராக பணியாற்றியுள்ளான். அப்போது, மாணவி முஸ்கின், சிறுவன் ரித்திக் ஆகியோரை ஏற்றிச் சென்றுள்ளான். அப்போதெல்லாம் சிறுமிக்கும், சிறுவனுக்கும் சாக்லெட் வாங்கி கொடுத்துள்ளான். இதனால், டிரைவரிடம் அன்பாக பழகி அண்ணா என்றே அழைத்து வந்துள்ளனர்.

கடந்த வெள்ளியன்று, பள்ளி வாகனம் வருவதற்கு முன்பே வேனுடன் சென்று, காத்திருந்த இருவரை அழைத்து சென்றுள்ளான். பொள்ளாச்சிக்குள் நுழைந்ததும் அங்கிருந்த மற்றொரு கால் டாக்சி டிரைவர் மனோகரை தன்னுடன் அழைத்துக் கொண்டு திருமூர்த்தி மலை நோக்கி சென்றுள்ளான். மலைப்பகுதிக்கு வேன் செல்லும் போதே, சிறுவன் ரித்திக்கின் கை, கால்களை கட்டி, பின் சீட்டுக்கு அடியில் கிடத்தி உள்ளனர். இதன் பின் முன்சீட்டில் அமர்ந்திருந்த மோகன்ராஜ், கதறிய சிறுமியை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளான். இதற்கு, உடன் வந்த டிரைவர் மனோகரனும் உதவி செய்துள்ளான்.இதன்பின், இருவரையும் மிரட்டி, கொண்டு வந்திருந்த உணவை சாப்பிட வைத்துள்ளனர். இதன் பின் மலை உச்சியில் இருந்து தள்ளிவிட்டு கொலை செய்ய இருவரும் முடிவு செய்துள்ளனர். பாதிதூரம் சென்றதும் அதற்கு மேல் நடக்க முடியாது எனக்கூறி குழந்தைகள் அங்கேயே உட்கார்ந்து விட்டனர்.வேறு வழியில்லாமல் மீண்டும் மலை அடிவாரத்துக்கு வந்தனர். தயாராக கொண்டு வந்திருந்த பாலில் சாணிப்பவுடரை கலக்கி குடிக்க கொடுத்துள்ளனர். சாணிப்பவுடர் கலந்த பாலை வாயில் ஊற்றியதும் கசப்பதாகக்கூறி குழந்தைகள் அழுததோடு,அதை கீழே துப்பி விட்டனர்.ரகசியமாக பேசிக் கொண்ட டிரைவர்கள் இருவரும், வேனில் இருந்து பிளாஸ்டிக் பேக்கை கொண்டு எடுத்து வந்து கழுத்தை இறுக்கி உள்ளனர். மூச்சுத் திணறிய இருவரும் சத்தமாக கத்தியுள்ளனர். இதில் பயந்து போன டிரைவர்கள் இத்திட் டத்தையும் கைவிட்டு விட்டனர்.தொடர்ந்து, இருவரையும் சாப்பிடச் சொல்லி மீதமிருந்த டிபன்பாக்சையும், தண்ணீர் பாட்டிலையும் கொடுத்தனர். அழுது கொண்டே சாப்பிட்டு முடித்த குழந்தைகளை, அருகில் உள்ள கால்வாயில் கை கழுவும்படி மோகன்ராஜ் கூறியுள்ளான். பயந்து போன சிறுமி, வாட்டர் கேனில் உள்ள நீரில் கையை கழுவிக் கொள்வதாக தெரிவித்து உள்ளாள். உடனே, சிறுவன் ரித்திக்கை கால்வாயில் கைகழுவ அனுப்பினான். சிறுவனும் வாய்க்காலில் ஓடும் நீரில் கை கழுவிக் கொண்டு திரும்பினான். அப்போது டிரைவர் மோகன்ராஜ், "யாரையும் தண்ணீரில் தள்ளி விடமாட்டேன். தம்பியை பாதுகாப்புக்கு அழைத்துச் சென்று கை கழுவிக் கொண்டு, பாட்டிலில் தண்ணீர் எடுத்து வா' என, அன்பாக பேசியுள்ளான்.உண்மை என நம்பிய முஸ்கின், தனது தம்பியுடன் சென்று, கால்வாயில் கை கழுவிக் கொண்டிருந்தாள். சிறுவர்களுக்கு தெரியாமல் பின் தொடர்ந்த டிரைவர்கள், கீழே குனிந்து இருவரையும் ஓடும் நீரில் தள்ளினர். கதறியபடியே மூழ்கிய குழந்தைகளை நீர் அடித்துச் சென்றது. இரக்கமற்ற இக்கொலையில் ஈடுபட்ட டிரைவர்களில் மோகன்ராஜ் கைது செய்யப்பட்டு ,சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், தலைமறைவான மற்றொரு டிரைவர் மனோகரனை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட டிரைவர் மீது கடத்தல், கொலை, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட் டுள்ளது.

இரவு-பகலாக தேடிய தனிப்படையினர்  :கால்டாக்சி டிரைவர்களால் கடத்தப்பட்ட பள்ளிக்குழந்தைகளை மீட்க கோவை போலீஸ் கமிஷனர் உத்தரவில் எட்டு தனிப்படை அமைக்கப்பட்டது. உதவி கமிஷனர்கள் சார்பில் குமாரசாமியும், இன்ஸ்பெக்டர்கள் கனகசபாபதி, அண்ணாதுரை, நுண்ணறிவுப்பிரிவு எஸ்.ஐ.,முத்துமாலை மற்றும் எஸ்.ஐ.,கள் ஜோதி, ராஜேந்திரன் ஆகியோர் குழு தீவிர தேடுதலில் இறங்கி, குழந்தைகளை கண்டு பிடிப்பதற்கு முன், அவர்களை கடத்திய டிரைவரை கைது செய்தனர். தொடர்ந்து விடிய விடிய தேடுதல் நடத்தி நேற்று பகலில் சிறுவனின் உடலை கைப்பற்றினர். இவர்களின் சீரிய பணியை பாராட்டி 25 ஆயிரம் ரூபாய் வெகுமதியாக வழங்க உத்தரவிடப்பட்டது.

கண்ணாடியில் கருப்பு ஸ்டிக்கர் அவசியமா? கார் போன்ற வாடகை வாகனங்களின் பக்கவாட்டு மற்றும் பின்புற கண்ணாடியில் "கூலிங் பேப்பர்' எனப்படும் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டப்படுகிறது. வாகனத்தின் உள்ளே நடப்பதை வெளியில் இருப்பவர்கள் காண முடியாது. கடத்தப்பட்ட நபர் உள்ளே உதவி கோரி சைகை செய்தாலும் வெளியில் தெரியாது.சாதாரண கண்ணாடியாக இருப்பின், பின்னால் செல்லும் லாரி போன்ற உயரமான வாகன டிரைவர்களுக்கு, முன்னால் செல்லும் காருக்குள் நடப்பது தெரிந்து விடும். "கூலிங் பேப்பர்' ஒட்டக்கூடாது என, ஏற்கனவே விதிமுறை உள்ளது. ஆனால், நடைமுறைப்படுத்தப்படவில்லை.
வாகனங்களில் "கூலிங் பேப்பர்' ஒட்டுவது மற்றும் ஸ்கிரீன் அமைப்பது போன்றவற்றை வாடகை வாகன உரிமையாளர்கள் தவிர்க்க வேண்டும். போலீசாரும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனால், பெரும்பாலான சட்டவிரோத செயல்களை குறைக்க முடியும்.

தண்ணீரில் மிதந்த பிஞ்சுகள்... கண்ணீரில் தத்தளித்த கோவை:இரண்டு நாட்களாக அதிர்ச்சியில் உறைந்து போயிருக்கிறது கோவை. பணத்துக்காக இரு பள்ளிக்குழந்தைகள் கடத்தப்பட்டு, இரக்கமற்ற கொடூரனால் கொலை செய்யப்பட்ட சம்பவம், கோவையை அதிர வைத்துள்ளது. காலையில் உற்சாக ஊற்றாய் பள்ளி கிளம்பிய குழந்தைகளை இனி எப்போதும் காணப்போவதில்லை என, அவர்களின் தாய் கனவிலும் கூட நினைத்துப்பார்த்திருக்க மாட்டார்.கோவை ஒன்றும் குற்றமே இல்லாத நகரம் இல்லை. சிறு சிறு சம்பவங்கள் நடந்தபடிதான் இருக்கின்றன. ஆனால், இரு பிஞ்சுகளின் கொலை இதுவரை கோவை கண்டிராத ஒன்று. பள்ளிக்கு வழக்கமாக செல்வதற்காக குழந்தைகள் காத்திருக்கின்றன. வழக்கம் போல் கார் வருகிறது; நீண்ட நாட்களாக வராத டிரைவர் வருகிறார். ஆனால், ஏற்கனவே நன்கு பழக்கமான டிரைவர் என்பதால், தம்பியுடன் வாகனத்தில் நுழைகிறாள் அச்சிறுமி.

அதற்குப்பின் நடந்தது சோகசம்பவம். குழந்தைகள் கடத்தப்பட்டதை, மிக தாமதமாக உணரும் பெற்றோர், போலீசில் புகார் செய்கின்றனர். போலீஸ் சுறுசுறுப்பாக செயல்பட்டபோதும், நிலைமை கைமீறி விட்டது. கோவையில் இருந்து 70 கி.மீ., தூரத்தில் உள்ள உடுமலை அருகே பி.ஏ.பி., கால்வாயில் புத்தகப்பை மிதக்கிறது என்ற தகவல், விபரீதம் நிகழ்ந்திருப்பதை சுட்டிக்காட்டியது.போலீசாரின் வாகன சோதனையில் குற்றவாளி சிக்கினான். "பணத்துக்காக கடத்தினேன். மாட்டிக்கொள்வோம் என்ற அச்சத்தில், கால்வாய்க்குள் குழந்தைகளை தள்ளிவிட்டேன்' என "பகீர்' தகவலை அந்த கொடூரன் சொல்ல, அலறியடித்தபடி கால்வாயில் தேடியது போலீஸ். தள்ளிவிட்ட இடத்தில் இருந்து70 கி.மீ., தூரத்தில் சிறுமியின் உடல் மீட்கப்பட்டது. இன்னொரு பிஞ்சின் உடல் நேற்று பொள்ளாச்சி கெடிமேடு அருகே மீட்கப்பட்டது.சம்பவம் அறிந்ததும், கோவை மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். முதல்நாள் சம்பவம் கேள்விப்பட்டதும், "பணத்துக்காக கடத்தியிருப்பர். குழந்தைகள் எப்படியும் மீட்கப்படும்' என்றுதான் எண்ணியிருந்தனர். அவர்களின் பெற்றோரைப்போலவே, கோவை மக்களும் பதைபதைத்துக் காத்திருந்தனர். ஆனால், நிதர்சனம் வேறாக இருந்தது. எவரது பிரார்த்தனையும் பலிக்கவில்லை. குழந்தைகள் இறந்தது, இறந்ததுதான்.இறுதி ஊர்வலத்தில் இளகிய இதயங்கள்: சிறுமி முஸ்கின் சடலம் முன்னதாகவே மீட்கப்பட்டதால், நேற்று காலை முஸ்கினின் இறுதி ஊர்வலம் நடந்தது. கோவை ரங்கேகவுடர் வீதியில், முஸ்கின் குடும்பத்தினரின் வசிப்பிடத்தில் துவங்கிய இறுதி ஊர்வலம் ஒப்பணக்கார வீதி, உக்கடம், கரும்புக்கடை வழியாக ஆத்துப்பாலம் மயானத்தை சென்றடைந்தது.முஸ்கின் மரணம் கோவை மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்ததால், இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டனர். 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர். வழிநெடுக இருமருங்கிலும் மக்கள் திரண்டு நின்று கண்ணீருடன், முஸ்கின் சடலத்தை வழியனுப்பினர்.வாகனங்களில் சென்றவர்கள், அலுவலகம் சென்றவர்கள் என ஊர்வலம் சென்ற வழியில் இருந்த பொதுமக்கள் முஸ்கினுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். காலை 9.00 மணிக்கு துவங்கிய இறுதி ஊர்வலம், மதியம் 12.40 மணி வரை நடந்தது. கண்களில் கண்ணீர் திரள பொதுமக்கள் பங்கேற்ற காட்சி, காண்போரின் உள்ளத்தை உருக்குவதாக இருந்தது. நேற்று காலை வரை முஸ்கின் சடலம் மட்டுமே கிடைத்திருந்தது. இதனால், உறவினர்கள் ரித்திக் உயிருடன் இருப்பதாகவே நம்பினர். "நிச்சயம் உயிருடன் வீடு திரும்புவான் ரித்திக்' என, உடைந்த குரலில் திரும்பத் திரும்ப கூறியபடி இருந்தனர்.  குற்றவாளி மோகன்ராஜுக்கு எதிராக பொதுமக்கள் கொந்தளித்தனர். குற்றவாளியை தூக்கிலிட வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். "கோர்ட், வழக்கு என இழுத்தடிக்காமல் உடனடியாக தூக்கு தண்டனை நிறைவேற்ற வேண்டும் என, பொதுமக்கள் ஆவேசமாக கோஷமிட்டனர்.கொடுஞ்செயலுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை பொதுமக்கள் ஏந்திச் சென்றனர். "கொலை செய்வதை தவிருங்கள்; என் குழந்தை எனக்கு வேண்டும்' என்ற வாசகம் அடங்கிய பதாகை பலரின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது. மனித நேய மக்கள் கட்சி சார்பில், கொலைகாரனை தூக்கிலிட வலியுறுத்தி கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்தன. மக்கள் வெள்ளத்தில் மிதந்த முஸ்கின் உடல், ஆத்துப்பாலம் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

முதல்வர் வீட்டு வாசலுக்குவந்த பிரச்னை: ஜெ., அறிக்கை

சென்னை :மத்திய தகவல் தொடர்பு அமைச்சர் ராஜாவைத் திரும்பப் பெறும் எண்ணம் முதல்வர் கருணாநிதிக்கு இல்லை என்று, அ.தி.மு.க., பொதுச் செயலர் தன் அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.
அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை: மத்திய அமைச்சர் ராஜாவுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கும் வகையில், "ராஜா இன்னமும் மத்திய தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பதவியில் எப்படி செயல்படுகிறார்' என, சுப்ரீம் கோர்ட் அண்மையில் கேள்வி எழுப்பியுள்ளது.கடந்த 2008ம் ஆண்டு அரவிந்த் குப்தா என்பவர் தாக்கல் செய்த பொது நல வழக்கை விசாரித்த டில்லி ஐகோர்ட், 2 ஜி அலைவரிசை ஒதுக்கீடு சினிமா டிக்கெட் போல் விற்பனை செய்யப்பட்டது என்று கருத்து தெரிவித்த போதே தன்னுடைய பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும்.டில்லி ஐகோர்ட் தனி நீதிபதியின் தீர்ப்பை எதிர்த்து, தொலை தொடர்புத் துறை மேல்முறையீடு செய்த வழக்கை விசாரித்த டில்லி ஐகோர்ட் தலைமை நீதிபதி ஏ.பி.ஷா தலைமையிலான கோர்ட் அமர்வு, 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு சட்டவிரோதமானது என்று தெரிவித்தது.

டில்லி ஐகோர்ட் தனி நீதிபதியின் ஆணையை 2009ம் ஆண்டு டிசம்பரில் உறுதி செய்த போதே, ராஜா தனது பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும்.ராஜா மீது துரித நடவடிக்கை எடுக்க கூட்டணி தர்மத்தின் கட்டாயம் தடுக்கிறது என பிரதமர் மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் திரும்பத் திரும்ப சுட்டிக் காட்டி  உள்ளனர். எனவே, தற்போது இப்பிரச்னை கடைசியாக முதல்வர் கருணாநிதியின் வீட்டு வாசலில் வந்து நிற்கிறது.இந்தியாவுக்கு ஒரு லட்சத்து 90 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பை ஏற்படுத்தியுள்ள  ராஜாவை மத்திய அமைச்சர் பதவியிலிருந்து திரும்பப் பெற கருணாநிதிக்கு மனம் வரவில்லை.இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

முக்கிய சூழலில் காங்., கூட்டம் ; காங்., காரிய கமிட்டியில் தமிழகத்தை சேர்ந்தவருக்கு இடம் கிடைக்குமா?


புதுடில்லி: சோனியா மீண்டும் தலைவராக தேர்வு செய்யப்பட்ட பின்னர் நடக்கும் முதல் கூட்டத்தில் காங்., முக்கிய நிர்வாகிகள் ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். டில்லியில் உள்ள தல்கோத்ரா ஸ்டேடியத்தில் இன்று காலையில் கூடிய காங்,. கமிட்டி கூட்டத்தில் காங்., காரிய கமிட்டிக்கு புதிய உறுப்பினர்களை சோனியா இன்று அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் தமிழகத்தை சேர்ந்தவருக்கு இடம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கார்கில் வீடு ஒதுக்கீட்டு முறைகேடு புகாரில் சிக்கியுள்ள மகாராஷட்டிர முதல்வர் அசோக்சவான் , காமன்வெல்த் ஊழலில் சிக்கிய கல்மாடி ஆகியோரும் பங்கேற்றுள்ளனர். இந்தக்கூட்டத்தில் சோனியா ஊழல் விவகாரம் தொடர்பாக என்ன பேசுவார் என்றும் நிர்வாகிகள் எதிர்நோக்கி இருக்கின்றனர்.

வரும் 9ம் தேதி பார்லி., கூட்டம் நடக்கவுள்ள நிலையில் எதிர்கட்சிகள் இந்த விவகாரத்தை எழுப்பும் பட்சத்தில் எப்படி சமாளிப்பது. இதற்கு முன்னதாக எதிர்கட்சியினர் வாய்க்கு பூட்டு போடுவது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்படும்.

காங்., 125 வது ஆண்டு விழா கொண்டாட்டம் தொடர்பாகவும் இன்றை‌ய கூட்டத்தில் விவாதிக்கப்படுகிறது. கார்கில் விவகாரத்தில் சிக்கிய மகாராஷ்ட்டிர முதல்வர் அசோக்சவான் மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில் இந்த விவகாரத்தில் சோனியா என்ன முடிவு எடுப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக காங்கிரஸ் காரியகமிட்டிக்கு பாதிபேர் தேர்வு செய்யப்பட்டாலும் பாதிபேர் சோனியாவிற்கு வேண்டப்பட்டவர்கள் அவரால் நியமனம் செய்யப்படுவர். இதனால் இந்த காரியகமிட்டியில் புதியவர்கள் யார் இடம்பெறுவர் என காங்., நிர்வாகிகள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். காரியகமிட்டி காங்கிரஸ் கட்சியின் முக்கிய முடிவுகள் எடுக்கும் அதிகாரம் கொண்டது.

இதில் மாநில வாரியாக சோனியா ஆடகளை தேர்ந்தெடுத்து நியமிப்பார். இந்த கமிட்டி மற்றும் மத்தியஅமைச்சர் நீக்கல் , சேர்ப்பு குறித்தும் ஆலோசிக்கப்படும். ராகுலின் ஆதரவு பெற்றவர்களுக்கும், சோனியா ஆதரவுக்கரம் தெரிவிப்பார் என காங்., வட்டாரம் தெரிவிக்கிறது. இன்றைய கூ‌ட்டத்தில் ஆந்திராவில் மறைந்த  முதல்வர் ராஜசேகரரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி புறக்கணிப்பார் என்று கூறப்படுகிறது.

அமெரிக்கா தகவல் தந்தது, ஆனால் ஹெட்லி பெயர் இல்லை-ப.சிதம்பரம்

P Chidambaramடெல்லி: மும்பை தீவிரவாத தாக்குதல்  தொடர்பான தகவல்களை, தாக்குதலுக்கு முன்பும், பின்னரும் அமெரிக்கா கொடுத்தது. ஆனால் ஹெட்லியின் பெயர் அதில் இடம் பெறவில்லை. அதேசமயம், இதை பெரிய பிரச்சினையாக்கத் தேவையில்லை என்று கூறியுள்ளார் உள்துறை அமைச்சர்  ப.சிதம்பரம்.

சில நாட்களுக்கு முன்பு செய்தியாளர்களைச் சந்தித்த ஜி.கே.பிள்ளை, ஹெட்லி குறித்த தகவல்களை முன்கூட்டியே அமெரிக்கா தரவில்லை. தந்திருந்தால் அவன் இந்தியா வந்திருந்தபோதே மடக்கிப் பிடித்திருக்கலாம், மும்பை தாக்குதல் சம்பவத்தையும் தவிர்த்திருக்கலாம் என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த ப.சிதம்பரம், மும்பைத் தாக்குதல் தொடர்பான தகவல்களை அமெரிக்கா கொடுத்திருந்தாலும், அதில் ஹெட்லியின் பெயர் இடம் பெறவில்லை என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், ஜி.கே.பிள்ளை கூறிய தகவல்களை மீடியாக்கள் தேவையில்லாமல் ஊதிப் பெரிதாக்கியுள்ளன. இது தேவையற்றது.

அமெரிக்கா அனைத்துத் தகவல்களையும் இந்தியாவிடம் தெரிவித்திருந்தது. மும்பைத் தாக்குதலுக்கு முன்பாகவே அனைத்துத் தகவல்களையும் நமக்கு அவர்கள் தெரிவித்திருந்தனர். மும்பைத் தாக்குதலுக்கு முன்பாகவே உளவுத் தகவல்கள் தரப்பட்டிருந்தன.

தற்போது ஹெட்லி குறித்த பல விவரங்களை அமெரிக்கா பரிசீலனை செய்து வருகிறது. அவை முடிந்தவுடன் அவற்றை நம்மிடம் பகிர்ந்து கொள்வார்கள்.

ஹெட்லி விவகாரத்தைப் பெரிதுபடுத்தத் தேவையில்லை என்பது எனது கருத்து. ஹெட்லியின் பெயரை அமெரிக்கா குறிப்பிட்டிருக்காவிட்டாலும் கூட மும்பைத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக அவர்கள் கொடுத்த பல தகவல்கள் நமக்கு உதவிகரமாகவே இருந்தது.

ஹெட்லியின் பெயரை 2009ம் ஆண்டு அக்டோபர் மாதம்தான் அமெரிக்கா நம்மிடம் தெரிவித்தது.

ஹெட்லியை நாடு கடத்துவது என்பது ஒரு சாத்தியக் கூறாகவே உள்ளது. ஹெட்லி மீது குற்றப்பத்திரிக்கை பதிவு செய்வது என்பது குறித்து தேசிய புலனாய்வு ஏஜென்சிதான் முடிவெடுக்க வேண்டும் என்றார் ப.சிதம்பரம்.

ஒரு பெண் டிஜிபியாக இருப்பதைப் பொறுக்க முடியவில்லையே-கருணாநிதி சாடல்

Karunanidhiசென்னை: பெண்களுக்கு உரிமை; பெண்களுக்கு வாய்ப்பு வழங்கியுள்ள ஆட்சி இந்த ஆட்சி ஆகும். காவல் துறையிலே மாத்திரமல்ல; தமிழகத்தைக் காக்கும் துறையான தலைமைச் செயலகத் துறையிலேயே ஒரு பெண்மணிதான் இன்றைக்குத் தலைமைச் செயலாளராக இருக்கிறார். தலைமைப் பொறுப்பிலே உள்ள அதிகாரிகள் இரண்டு பேரில் - ஒரு பெண்மணி தலைமைச் செயலாளராகவும், இன்னொரு பெண்மணி காவல் துறைக்குத் தலைமை இயக்குநராகவும் இருப்பதை எண்ணி எண்ணி நாமெல்லாம் மகிழலாம். மகிழ முடியாதவர்கள் வேண்டுமானால் கோர்ட்டுக்குச் செல்வார்கள் என்று கூறியுள்ளார் முதல்வர் கருணாநிதி  .

வள்ளுவர் கோட்டம் சாலையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் மகளிர்க் சுய உதவிக்குழுக்களுக்காக புதிதாக கட்டப்பட்டுள்ள அன்னை தெரசா மகளிர் வளாக திறப்பு விழாவில் மகளிர் சுய உதவிக்குழுக்களின் கைவினைப்பொருட்கள் கையேட்டினை முதல்வர் கருணாநிதி வெளியிட்டார்.

விழாவில் முதல்வர் பேசியதாவது...

இந்த வளாகத்திற்கு என்ன பெயர் வைப்பது என்ற வினா எழுந்தபோது, எனக்கு நினைவுக்கு வந்தது “அன்னை தெரசா” அவர்களுடைய பெயர் என்பதை தம்பி ஸ்டாலின் இங்கே எடுத்துச் சொன்னார். அந்த நினைவுகூட எனக்கு எப்படி வந்தது என்றால்;

அன்னை தெரசாவினுடைய நூற்றாண்டு விழாவை - தமிழகத்திலே நம்முடைய கழக அரசின் சார்பில் கொண்டாட வேண்டுமென்று நானும், அருமை நண்பர் பீட்டர் அல்போன்ஸ் அவர்களும் பேசிக் கொண்டிருந்த மறுநாளைக்கு மறுநாள் - இந்தக் கட்டிடத்திற்கான திறப்பு விழா பற்றிய செய்தி வந்த காரணத்தால், அந்தப் பேச்சின் தொடர்ச்சியாக, இந்தக் கட்டடத்திற்கு ஏன் அன்னை தெராசாவினுடைய பெயரையே வைக்கக்கூடாது என்று எழுந்த ஆவலின் காரணமாக, இந்தப் பெயர் இன்றைக்கு அமைந்திருக்கிறது என்பதை நான் மட்டற்ற மகிழ்ச்சியோடு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

இந்த விழா, சென்னை மாநகரில் - ஒரு பெரிய கட்டடத்தை அமைத்திருக்கிறோம் என்ற அந்த பெரும் உணர்ச்சியோடு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்பதில் இருவேறு கருத்துக்கு இடமில்லை.

என்னைப் பொறுத்தவரையில், இங்கே தம்பி தயாநிதி மாறன்  எடுத்துக் காட்டியதைப்போல், மறைந்த கழகத்தினுடைய மாமேதைகளிலே ஒருவராகத் திகழ்ந்த தம்பி முரசொலி மாறன் - மகளிர் சுயஉதவிக் குழுக்களை நாம் அமைக்க வேண்டுமென்று எடுத்துச் சொன்னதன் காரணமாக, 1989 ஆம் ஆண்டு தருமபுரியிலே இந்தச் சுயஉதவிக் குழுவிற்கான தொடக்க விழா நடைபெற்று - இன்றைக்கு இங்கே எடுத்துக் காட்டியதைப்போல, ஏறத்தாழ 4 இலட்சத்து 74 ஆயிரத்து 874 மகளிர் சுய உதவிக் குழுக்கள் செயல்படுகின்ற அளவிற்கு வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றோம்.

இந்தக் குழுக்களிலே இருக்கின்ற ஏழை மகளிர் எத்தனை பேர் என்பதை எண்ணும்போது, பெருமையாக இருக்கிறது. 73 இலட்சத்து 60 ஆயிரம் ஏழை மகளிர் குழுக்களிலே உறுப்பினர்களாக இன்றைக்கு இருக்கின்றார்கள்.

இவர்கள் உற்பத்தி செய்யும் பொருள்களின் விற்பனையை மேம்படுத்திடவும், சென்னை மாநகரில் ஒரு நிரந்தரமான விற்பனை வளாகத்தை அமைத்திட வேண்டும் என்ற நோக்கத்திலும், அன்னை தெரசா மகளிர் வளாகம் உருவாக்கப்பட்டு - உள்ளாட்சி மன்றங்களின் நாளான இந்நாளில் இந்த மாளிகை திறந்து வைக்கப்பட்டுள்ளது என்பது மகிழ்ச்சிக்குரிய ஒரு செய்தியாகும்.

இந்த மன்றங்கள் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதை அவ்வப்போது, அரசுப் பொறுப்பிலே இருக்கின்ற நம்முடைய துணை முதலமைச்சர் அவர்கள் சிந்தித்து, செயலாற்றி, இத்தகைய பெருவளர்ச்சியை இந்த மகளிர் சுயஉதவிக் குழுக்கள் பெறுவதற்குக் காரணமாக இருந்து இதனை வளர்த்திருக்கிறார்.

சுருக்கமாகச் சொல்லவேண்டுமேயானால், தமிழகத்திலே இன்றைக்கு ஆல்போல் தழைத்திருக்கின்ற மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்குக் காரணமாக - இதற்கு அடிப்படையாக அமைந்திருப்பது இன்றைய துணை முதலமைச்சருடைய உழைப்புதான் என்பதை நான் சொல்ல விரும்புகிறேன்.

கழக ஆட்சி மகளிர் முன்னேற்றத்திற்கு - மகளிர் உரிமைகளுக்கு எப்படியெல்லாம் துணை நிற்கும் - துணை நின்றது என்பதை எனக்கு முன்னாலே இங்கே பேசியவர்கள் குறிப்பிட்டிருக்கிறார்கள்.

1973 ஆம் ஆண்டில், கழக ஆட்சியில் தமிழகக் காவல் துறையில் முதன்முதலாக பெண் காவலர்கள் நியமனம் செய்யப்பட்டார்கள். அப்போது அருள் அவர்கள் ஐ.ஜி-யாக இருந்தார்.

அந்த நேரத்திலேதான் பெண்களைக் காவல் துறையிலே சேர்க்க வேண்டும்; அவர்களைப் பயன்படுத்திட வேண்டும் என்று எண்ணம் கொண்டு; அதற்கு ஐ.ஜி. அருள் அவர்களும் தன்னுடைய ஆதரவைத் தந்து, முயற்சி மேற்கொண்டு - அப்போது தமிழகக் காவல் துறை பெண்களை உள்ளடக்கியதாக அமைந்தது. அதனுடைய வளர்ச்சி இன்றைக்கு எங்கே வந்திருக்கிறது என்றால், அந்தத் துறையினுடைய தலைமை இயக்குநராக (டி.ஜி.பி.) ஒரு பெண்மணியே பொறுப்பேற்றிருக்கின்றார்கள்.

அந்த அளவிற்குக் காவல் துறையிலே பெண்களுக்குச் சுதந்திரம்; பெண்களுக்கு உரிமை; பெண்களுக்கு வாய்ப்பு வழங்கியுள்ள ஆட்சி இந்த ஆட்சி ஆகும்.

காவல் துறையிலே மாத்திரமல்ல; தமிழகத்தைக் காக்கும் துறையான தலைமைச் செயலகத் துறையிலேயே ஒரு பெண்மணிதான் இன்றைக்குத் தலைமைச் செயலாளராக இருக்கிறார்.

உள்ளபடியே தமிழகத்தில் இது போற்றத்தக்க, புகழத்தக்க ஒரு சம்பவம். தலைமைப் பொறுப்பிலே உள்ள அதிகாரிகள் இரண்டு பேரில் - ஒரு பெண்மணி தலைமைச் செயலாளராகவும், இன்னொரு பெண்மணி காவல் துறைக்குத் தலைமை இயக்குநராகவும் இருப்பதை எண்ணி எண்ணி நாமெல்லாம் மகிழலாம். மகிழ முடியாதவர்கள் வேண்டுமானால் கோர்ட்டுக்குச் செல்வார்கள்.

அது பெண் மக்கள் முன்னேற வேண்டும் என்கின்ற கருத்துடையவர்களால் செய்யப்படுகின்ற காரியமா என்பதை - அவர்களை ஆதரிக்கின்ற இதழாளர்கள், ஏட்டாளர்கள் எண்ணிப் பார்க்க வேண்டுமென்று, மகளிருக்கான வளாகத்தை - மாளிகையைத் திறந்து வைத்திருக்கின்ற இந்த நேரத்தில் நான் குறிப்பிட விரும்புகின்றேன்.

இந்தியாவிலேயே முதன்முதலாக - மற்றவர்கள் யாரும் வருத்தப்படக் கூடாது -இந்தியாவிலேயே முதன்முதலாக என்றால், பீட்டர் அல்போன்ஸ் அவர்களுக்குக் கோபம் வந்தாலும் வரும்.

ஏனென்றால், ஒரு சிறந்த தேசிய கட்சியைச் சேர்ந்த ஒரு பெருந் தொண்டர் அவர்; திறமை மிக்க முன்னணி வீரர் அவர். அதனால்தான் சொல்கின்றேன். இந்தியாவிலேயே கழக ஆட்சியில்தான் முதல்முறையாக பெண்களுக்குச் சம சொத்துரிமை வழங்கப்பட்டது. வழங்கியது மாத்திரமல்ல; அதற்கென ஒரு தனிச் சட்டம்  நிறைவேற்றி, பெண்களுக்கு ஒரு தனிச் சிறப்பை வழங்கியது.

அதுமாத்திரமல்ல; இந்தியாவிலேயே முதல் முறையாக அரசுப் பணிகளில் பெண்களுக்கு 30 விழுக்காடு  இட ஒதுக்கீடு வழங்கும் திட்டம் கழக ஆட்சியிலே நடைமுறைப்படுத்தப்பட்டு; பல்லாயிரக்கணக்கான பெண்கள் அரசு வேலைவாய்ப்பினைப் பெற வழிவகுக்கப்பட்டது என்பதையும் மறந்து விடக்கூடாது.

1996 ஆம் ஆண்டு கழக ஆட்சியில்தான், இந்தியாவிலேயே முதல் முறையாக உள்ளாட்சி அமைப்புகளிலே மகளிர்க்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கி அடித்தளம் அமைத்தோம் என்பதையும் - ஏறத்தாழ 40 ஆயிரம் மகளிர், தமிழக உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்புகளை ஏற்று ஜனநாயகக் கடமைகளை ஆற்றி வருகின்றார்கள் - அரசியல் விழிப்புணர்வையும் பெற்றுவருகின்றார்கள் என்பதையும் நான் சுட்டிக்காட்டக் கடமைப்பட்டிருக்கின்றேன்.

அந்த வகையிலே, இந்த மகளிர் குழுக்கள் எல்லா விதமான பெருமைகளையும் பெற்றுள்ள குழுக்களாகும். நான் இங்கே தரப்பட்ட மலரைப் புரட்டிப் பார்த்தேன். புரட்டிப் பார்த்துவிட்டு, துணை முதலமைச்சர் தம்பி ஸ்டாலினிடத்திலே அதிலேயுள்ள சில படங்களைச் சுட்டிக்காட்டி - “இந்தப் படம் மிக அருமையாக இருக்கிறது;

அது மரத்தால் செய்யப்பட்ட - மகளிர் உழைப்பால் - மகளிர் திறமையால் செய்யப்பட்ட சில படங்கள் - சில கட்டிடங்கள்; சில பொம்மைகள். இவைகளெல்லாம் மகளிருடைய திறமையால், மகளிருடைய உழைப்பால் செய்யப்பட்டவை” - என்று சொல்லிவிட்டு - “மரத்தால் செய்யப்பட்ட இந்தக் கட்டிடத்தினுடைய பொம்மை ஒன்றை நம்முடைய புதிய சட்டப் பேரவைக் கட்டிடத்திலே வைக்க வேண்டும்” (என்றும் நான் தம்பி ஸ்டாலினிடத்திலே சொல்லியிருக்கின்றேன். அவ்வளவு நேர்த்தியாக - அவ்வளவு அழகானதாக - அவ்வளவு மேன்மையுள்ளதாக - அந்தச் சிற்பங்களை அவர்கள் செய்திருப்பதைப் பார்க்கும்போது, நான் உள்ளபடியே வியப்படைகின்றேன்.

இந்தச் சிற்பிகள் பெண்களாக - அதிலும், இந்த மகளிர் குழுக்களைச் சேர்ந்த பெண்களாக இருப்பதை எண்ணும்போது, நான் மிகுந்த மகிழ்ச்சியோடு என்னுடைய வாழ்த்துக்களை அவர்களுக்கெல்லாம் தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றேன்.

இப்போது ஏறத்தாழ 73 இலட்சம் பேர் தமிழகத்திலே இந்தக் குழுக்களிலே செயல்படுகிறார்கள் என்றால், இந்த 73 இலட்சம் பேரும் சாதாரணமானவர்கள் அல்ல; சாதாரண, சாமான்ய மக்களைச் சார்ந்தவர்கள் என்றாலும்கூட, அவர்கள் இந்தக் குழுவிலே இருக்கிறார்கள் என்பதை எண்ணிப் பார்க்கும்போது, அவர்களைத் தனித்தனியாக மகளிர் என்று யாரும் கருதாமல், அவர்களெல்லாம் ஒரு பெரும் சேனை; பெரிய பட்டாளம்; பெரும் படை.

அந்தப் படை தமிழ்நாட்டில் பெண்களுடைய முன்னேற்றத்திற்கு - பெண்களுடைய எழுச்சிக்கு - பெண்களுடைய எதிர்காலத்திற்கு ழிவகுக்கக்கூடிய - எத்தகைய இடையூறுகள் வந்தாலும், அவற்றை வென்று நிற்கக்கூடிய - வலிமை பொருந்திய சேனை என்பதை யாரும் மறுத்து விட முடியாது. அப்படிப்பட்ட படை வலிமையால், இன்றைக்கு இந்த மகளிர் குழு - இவ்வளவு பெரிய அளவிற்கு வளர்ந்திருக்கிறது என்பதையும் - இந்த வளர்ச்சிக்குக் காரணமான தம்பி ஸ்டாலின் உட்பட மற்ற அனைவரையும் நான் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாம் பெண்களை மதிப்பவர்கள்; பெண்களைப் பாராட்டுகின்றவர்கள்; பெண்களுக்கு எல்லாவிதமான உரிமைகளையும் தரக்கூடியவர்கள்; அவர்களுக்கு வணக்கம் தெரிவிக்கக்கூடியவர்கள்; அவர்களை வாழ்த்தக் கூடியவர்கள் என்பதற்கு அடையாளம்தான்; மகளிர் சமுதாயத்திற்காக - பெண்கள் சமுதாயத்திற்காக என்று மாத்திரமல்ல; ஆண்களும் உள்ளிட்ட ஏழையெளியோர் சமுதாயத்திற்காக - நலிவடைந்த மக்களுக்காக - அவர்களுடைய நலனை அடிப்படையாக வைத்து நாளும் தொண்டாற்றிய - மறைந்தும் மறையாத மாதரசு அன்னை தெரசா அவர்களுடைய பெயரால் - அவருடைய நூற்றாண்டு விழாவைக் கொண்டாடுகின்ற நேரத்தில் - அந்த நூற்றாண்டு நாள் விழா தமிழக அரசின் சார்பாகவே கொண்டாடப்படும் என்பதையும் நான் இங்கே தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றேன்.

அன்னை தெரசா ஒரு தாய்தான். அவர் இந்தியாவிலே பிறக்காத ஒரு தாயாக இருக்கலாம். வெளிநாட்டிலே பிறந்து - இந்திய மக்களுக்குப் பாடுபட்ட ஒரு தாயாக இருக்கலாம். எங்கே பிறந்தாலும், தாய் தாய்தான்.

அப்படிப்பட்ட அன்னைக்கு நாம் ஆற்றவேண்டிய கடமையை ஆற்றுவோம்; ஆற்றுகின்ற நேரத்திலே அவர் வழிநின்று நடப்போம் என்ற சூளுரையை மேற்கொள்வோம் என்பதை இங்கே எடுத்துக் காட்டி; “அன்னை தெரசா வாழ்க! அவருடைய பெயரால் இங்கே அமைக்கப்பட்டுள்ள இந்தக் கட்டிடத்தில் நல்ல பல காரியங்கள் விளைந்திடுக! அந்தக் காரியங்கள் விளைந்திட ஊக்கத்தோடு செயலாற்றிடுக என்றார் கருணாநிதி.

கடத்தல்காரர்கள் அட்டகாசம் அதிகரிப்பு-பட்டப் பகலில் கத்திமுனையில் மாணவன் கடத்தல்

சென்னை: கோவையில் அக்காள், தம்பியான சிறுவன், சிறுமி கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவத்தின் சுவடு மறைவதற்குள் சென்னையில் பட்டப் பகலில் கத்தி முனையில் மாணவன் ஒருவன் கடத்தப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை அண்ணா நகரைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் கிரானைட் பிசினஸ் செய்து வருகிறார். இவரது மகன் 14 வயதான கீர்த்திவாசன். டிஏவி பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறான் கீர்த்தி வாசன்.

நேற்று மாலை வழக்கம் போல பள்ளிக்கூடம்  முடிந்ததும் காரில் ஏறுவதற்காக கீர்த்திவாசன் வெளியில் வந்துள்ளான். கார் கிளம்பி கலெக்டர் நகர் சிக்னலில், சிக்னலுக்காக நின்றது. அப்போது திடீரென 2 பேர் காரை மறித்தனர். கார் டிரைவர் கோவிந்தராஜ் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி கீழே தள்ளி விட்டனர். பின்னர் காரை எடுத்துக் கொண்டு மின்னல் வேகத்தில் கிளம்பினர்.

பொதுமக்கள் நிறைந்திருந்த அந்தப் பகுதியில், மிகவும் துணிகரமாக சிறுவனைக் கடத்திய சம்பவத்தைப் பார்த்து அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் யாருமே அந்த கடத்தலைத் தடுக்க முன்வரவில்லை. கோவிந்தராஜ் பலமுறை காப்பாற்றுமாறு அலறியும் யாரும் எந்த உதவிக்கும் வரவில்லை. இதைப் பயன்படுத்திக் கொண்டு கடத்தல்காரர்கள் தப்பி விட்டனர்.

பதறி அடித்துப் போன கோவிந்தராஜ், ரமேஷுக்குத் தகவல் தந்தார். இதையடுத்து ரமேஷ் தனது மனைவியுடன் பள்ளிக்கு விரைந்து வந்தார். பின்னர் போலீஸில் புகார் கொடுத்தார்.

கோவைச் சம்பவத்தின் விளைவு போலீஸாரைத் தொற்றிக் கொண்டது. போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் காரை மடக்கிப் பிடிக்க உத்தரவுகள் பிறப்பித்தார். சென்னை நகர எல்லைகள் அனைத்தும் உஷார்படுத்தப்பட்டன.

இந்த நிலையில், சிறுவனை 2 பேர் கொண்ட கும்பல் கடத்திய கார் பாடி பகுதியில் அனாதரவாக நிறுத்தப்பட்டிருந்தது. அந்தக் காரை போலீஸார் கைப்பற்றினர். அதில் சிறுவனின் பள்ளிக்கூடப் பை இருந்தது. அந்தக் காரை விட்டு விட்டு வேறு ஒரு காரில் கடத்தல் கும்பல் தப்பியுள்ளது.

கடத்தல் கும்பலில் மேலும் பலர் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. கடத்தல்காரர்கள் ஆவடி வழியாக தப்பியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

கடத்தல்காரர்கள் கீர்த்திவாசனின் பெற்றோரைத் தொடர்பு கொண்டு ரூ. 50 லட்சம் தருமாறு மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது.

கடத்தல் தொடர்பான எந்தத் தகவலையும் போலீஸார் வெளியிடவில்லை. கீர்த்திவாசனின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினரும் எதுவும் தெரிவிக்க மறுத்து விட்டனர். தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டிருப்பதாக காவல்துறை கூறியுள்ளது.

சொத்துப் பிரச்சினை தொடர்பாக கடத்தல் நடந்திருக்கலாம் என்ற சந்தேகமும் காவல்துறைக்கு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும் கூட ஒரு நடவடிக்கைதான் : ப.சிதம்பரம்

பிரபல எழுத்தாளர் அருந்ததி ராய் தேசவிரோதமாகப் பேசியதாகக் கூறப்படுவதற்கு அவர் மீது டில்லி காவல் துறை நடவடிக்கை எடுக்காதது சட்டத்திற்குட்பட்டதுதான் என மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

காஷ்மீர் மாநிலத்திற்கு சுதந்திரம் அளிக்க வேண்டும் என்று அண்மையில் டில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய எழுத்தாளர் அருந்ததி ராய் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திடம் செய்தியாளர்கள் கேட்டபோது, நடவடிக்கை எடுக்காமல் இருப்பதும் கூட ஒரு நடவடிக்கைதான் என்று பதில் அளித்தார்.

ஐபிசி 124ஏ பிரிவில் நேரடியாக ஒரு வன்முறையைத் தூண்டும் வகையில் பேசாத வரை, அவர்கள் மீது சகிப்புத் தன்மையைக் காட்டி நடவடிக்கை எடுக்காமல் இருக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

எனவே டில்லி காவல்துறையினர் அருந்ததி ராய் மீது சட்டத்திற்குட்பட்டே நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் ப.சிதம்பரம் கூறினார்.