வெள்ளி, 11 மார்ச், 2011

ஊழல் இந்தியாவை ஊழலற்ற இந்தியாவாக மாற்ற வேண்டாமா?

ஊழலும் அராஜகமும் மலிந்து கிடக்கும் இந்திய திருநாட்டின் ஒரு பகுதியான தமிழ் நாட்டில் இன்றைக்கு ஆட்சி மாற்றத்தையும் நல்ல ஆட்சியையும் எதிர்நோக்கும் மக்களுக்கு எப்படி நல்லாச்சி அமையும் என்பதில் சந்தேகம் வரத்தொடங்கி உள்ளது .ஆண்டோர்களும் ஆளுபவர்களும் ஊழலிலும் அராஜகத்திலும் உனக்கு நானும் எனக்கு நீயும் சளைத்தவர்கள் இல்லை என்று சொல்லும் அளவிற்கு போட்டி போட்டுக்கொண்டு ஒரே அளவுகோலை கொண்டுள்ளனர் .

அப்படி இருக்கும் போது எப்படி இவர்களால் நல்லாட்சியும் ஊழல் அற்ற ஜனநாயக ஆட்சியையும் ஏற்படுத்த முடியும் என்ற சந்தேகம் நாளுக்கு நாள் வலுப்பெறுகிறது.சிறுபான்மை மக்களுக்கும் தலித் மக்களுக்கும் பாதுகாப்பற்ற சூழலும் இவர்களின் ஆட்சியிலும் குறைந்த பாடில்லை .சிறுபான்மை மற்றும் தலித் மக்கள் இல்லை என்றால் யாரும் ஆட்சி ஆழ முடியாது என்பது தான் நிதர்சனமான உண்மை .ஆனால் நம்மை ஆட்சியாளர்கள் கிள்ளுக்கீரையாகவே பயன்படுத்திக் கொள்கிறார்கள் .நம்மை ஓட்டு வங்கியாகவும் இவர்களின் சொல்லை கேட்க்கும் ஒரு அடிமையாக வும் பயன் படுத்திக்கொண்டு வருகிறார்கள் .சிறுபான்மை சமுதாயத்திலும் தலித்திலும் படித்தவர்கள் இன்றைக்கு அதிகமாகவே உள்ளனர் .அவர்களை நாம் அடையாளம் காண வேண்டும் .இந்தநாட்டில் சுடுகாடு முதல் விண்வெளி வரை இன்றைக்கு எதுவாக இருந்தாலும் ஊழலாக தான் காண முடிகிறது.
இந்த தமிழ்நாடே இன்றைக்கு போதையில் தள்ளாடுவது போல டாஸ்மாக் வருமானத்திலே தான் நாட்டின் வருமானமும் ஓடி வருகிறது .இதை போன்ற அவல நிலை இன்னும் நமது நாட்டிலே தொடர வேண்டுமா சிந்திப்பீர் செயல் படுவீர் .தூங்கிக்கொண்டிருக்கும் இளைஞர்களே வாருங்கள் கைகோர்ப்போம் .நாமும் இந்த நாட்டை ஆளப்பிறந்தவர்கள் தான்.நாம் வெறும் வோட்டு வங்கியாகவே இருந்து விடக்கூடாது .நமது வாக்குகளை இன்னொருவருக்கு அளித்து அவர்கள் செய்யும் சவாரிக்கு நாம் குதிரையாக இருக்க கூடாது . நாமே சவாரி செய்பவராக இருக்க வேண்டும் .இனி ஒவ்வொரு நாளும் நாம் தாமதித்தால் இந்த நாடே ஊழிலில் அடமானம் பட்டுவிடும் சூழலை நாம் தினம் தினம் பார்த்து வருகிறோம்.தூங்கியது போதும் விழித்துக்கொள்ளுங்கள் .வாருங்கள் அரசியல் களத்திற்கு காட்டுங்கள் நாம் யார் என்று அரசியல் வாதிகளுக்கு .

சிந்திப்பீர் செயல்படுவீர் !!

சமுதாய பலம் இதுவே முதல் படி!

தமிழகத்தை பொறுத்தவரை இஸ்லாம் சமுதாயத்திற்கு அரசியல் எட்டாக்கனியாகவே இருந்துவருகிறது. காலம் காலமாய் நமது முன்னோர்கள் தமிழகத்திலே இருக்கக்கூடிய திராவிடகட்சிகளுக்கு அடிபணிந்தே இருந்துசமுதாய பலம் இதுவே முதல் படி !
வருகிறார்கள். இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு அரசியல் அறிவு இல்லாமல் இருப்பது திராவிட கட்சிகளுக்கும் தன்னை தேசிய கட்சி என்று பிரகடன படுத்திக்கொண்டு இருக்கும் சில கட்சிகளுக்கும் மிகப்பெரிய லாபமாகவே உள்ளது .தமிழகத்தை பொறுத்தவரை நம் சமுதாயம் யாரை அடையாளம் காட்டுகிறதோ அவர்கள்தான் ஆட்சி பொறுப்பில் வரமுடியும் என்பதை நமது சமுதாய மக்கள் புரியாமல் இருப்பது தான் ஏன் என்று தெரிய வில்லை? அரசியலை பார்த்து நமது சமுதாய மக்கள் பயந்து வருவதும் நமது சமுதாய மக்களை பயமுறுத்துவதுமே நாம் அரசியலுக்கு அடி எடுத்து வைக்க தயங்குவதில் ஒரு காரணம் என நான் நினைக்கிறேன் ..அதே நேரத்தில் அரசியலில் நாங்களும்
இருக்கிறோம் என்று சிறிய சிறிய குழுக்களாக குருவி கூடுகளை போன்று நமது நாட்டில் நமது சமுதாயமும் அரசியலை ஒரு வியாபாரமாக சிலர் செய்து வரும் காட்சியையும் நாம் பார்க்க முடிகிறது.நமக்கு ஏற்ற பிரதிநிதித்துவத்தை தரமறுக்கும் அரசியல் கட்சிகளை இனியும் நம்பினால் நமது சமுதாயத்திற்கு பின்னடைவே தவிர. நமக்கு வளர்ச்சி என்பது கிடையாது. இவர்களிடம்இருந்து நம்மையும் நம் சமுதாயத்தையும் இறைவனால் மட்டுமே காப்பாற்ற முடியும்.அதனால் தான் நம்மாலும் அரசியல் செய்ய முடியம் என்பதை உணர்த்த தூங்கிக்கொண்டிருக்கும் நமது சமுதாய சகோதரர்களை தட்டி எழுப்பவே நாம் இனி முனைப்போடு தேர்தல் களம் காண வேண்டும். அதற்கு முதல் படியாய் நான் அரசியல் அடி எடுத்து வைக்கிறேன். ஜனநாயக இந்தியா வை பண நாயகமாக மாற்றிய  அரசியல் வாதிகளுக்கு இடையில் நாம் போராட நினைப்பது சிரமம் என்றாலும் அதை நாம் கண்டிப்பாக போராடி தான் நமது உரிமையை பெற வேண்டிய காலகட்டத்தில் இருந்து வருகிறோம் எத்தனையோ தொகுதிகளை நாம் நிர்ணயம் பண்ண முடிந்தும் நாம்
அரசியலை கண்டு ஒளிந்து கொண்டு இருப்பது இனியும் நாம் செய்யும் தவறாக
இருக்ககூடாது.அரசியலில் இருக்கும் பண முதலைகளையும், ஊழலையும் ஒழிக்க வேண்டுமானால் நாம் வீரமும் துடிப்பும் நல்ல சிந்தனையும் உள்ள இளைஞர்களை களம் இறக்குவதில் முனைப்பு காட்ட வேண்டும் .பண நாயகநாடு இல்லை இது ஜனநாயக நாடு தான் என்று சொல்லும் அளவிற்கு நாம் நமது மக்களை மாற்றவேண்டும் .இஸ்லாமியர்களும்
தலித்துகளும் ஒன்றே சேர்ந்து அரசியலில் பலத்தை காட்டினால் மேல் தட்டு மக்கள் நமது அரசியல் எழுச்சியை கண்டு அதிரும் நிலையை நாம் இன்ஷா அல்லாஹ் இந்த நாட்டிலே உருவாக்க முடியும் .நாம் அனைவரும் சகோதர பாசத்தோடு தலித்துகளையும் மற்றும் ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களையும் ஒன்று சேர்த்து அரசியல் பிரதிநிதித்துவத்தை வென்றெடுக்க வேண்டும் இன்ஷா அல்லா .நாம் வாழும் இந்திய திருநாட்டிலே மதவெறி சக்தியை ஒடுக்க வேண்டும் .அதற்கு அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களும் ஒன்று சேர்ந்து களம் கண்டால் தான் அதனை நாம் வென்றெடுக்க முடியும்.
சிறுபான்மை மக்களுக்கும் அரசியல் பண்ண தெரியும் என்பதை நாம் இந்த தேர்தல் களத்திலே வீரியமாக காட்ட வேண்டும் .இன்ஷா அல்லாஹ் அதன் முதல் படியாக நான் பாபநாசம் சட்டமன்ற தொகுதியை அடையாளம்
கண்டு மக்களின் ஆதரவோடு இறைவனின் துணையோடு மக்களுக்காக உழைக்க நம் சமுதாயமும் தலித் மக்களும்மற்றும் அனைத்து ஒடுக்கப்பட்ட மக்களும் முன்னேற்ற பாதையில் செல்ல ஒரு முறை தாங்கள் என்னை ஆதரிக்க வேண்டுமென அனைத்து தரப்பு மக்களையும் கேட்டுக்கொள்வதோடு என்னை போல் இன்னும் நிறைய சகோதரர்களை நாம் அரசியலுக்கு வரச்செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறேன்.