புதன், 1 டிசம்பர், 2010

Wikileaks - விக்கிலீக்கின் அடுத்த ரகசிய கசிவு எது?

இலண்டன்: உலகையே பரப்பாக்கியிருக்கும் விக்கி லீக்ஸ் ரகசிய கசிவு இனைய தளம், விரைவில் அமெரிக்க வங்கிகளின் செயல்பாடுகள் குறித்த ஆவனங்களை வெளியிட இருப்பதாக அதன் நிறுவனர் ஜூலியன் தெரிவித்துள்ளார்.
பிரபல அமெரிக்க பத்திரிக்கையான போர்ப்ஸ் இதழுக்கு அளித்த பேட்டியில், அமெரிக்காவின் புகழ்பெற்ற வங்கிகள் சில எவ்வாறு செயல்பட்டன, அதன் மேலாண்மை உயரதிகாரிகள் எவ்வாறெல்லாம் சுயநலமாக செயல்பட்டு முடிவுகளை எடுத்தார்கள் என்பது குறித்த ஆவனங்களை அடுத்த வருட ஆரம்பத்தில் வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளார்.
சில நாட்களுக்கு முன் விக்கிலீக்ஸ் இனைய தளம், அமெரிக்காவின் வெளியுறவு தொடர்பான ஆவனங்கள்,ஆப்கன் யுத்தம் மற்றும் இராக் யுத்தம் குறித்த தகவல் பரிமாற்றங்களை இனையத்தில் வெளியிட்டு அமெரிக்க அரசாங்கத்திற்கு இக்கட்டான நிலையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அமெரிக்காவின் நம்பகத்தன்மை உலக நாடுகளிடம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது.  இந்த ஆவனங்களில் அமெரிக்கா, பிற நாடுகளின் தலைவர்கள், உயரதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளை உளவு பார்த்த தகவலும் வெளியாகியுள்ளன என்பதால் அமெரிக்க அரசு, இந்தியா, சீனா, இங்கிலாந்து உட்பட அனைத்து நட்பு நாடுகளுக்கும் வெளியாகும் ஆவனங்கள் குறித்து முன் எச்சரிக்கை விடுத்தது குறிப்பிடத்தக்கது.

எங்கே நிம்மதி! எங்கே நிம்மதி!

எங்கே நிம்மதி! எங்கே நிம்மதி! அங்கே எனக்கோர் இடம் வேண்டும்....
என்றான் முந்தைய நாட்களில் ஒரு கவிஞன்.
எங்கே நிம்மதி! எங்கே நிம்மதி! அதை நான் தேடிப் பார்த்தேன் அது எங்கேயும் இல்லை.
இது இந்நாளில் வாழும் ஒரு கவிஞனின் வார்த்தை.
கடலின் ஆழத்திற்கு நீந்திச் சென்று, அங்குள்ளவற்றை படம் எடுத்து பாமரனுக்கும் காட்டு
அறி யலாளர்களாலும் எங்கே நிம்மதி என்பதை சொல்ல முடியவில்லை. வானத்தின் உயரே செவ்வாய்க் கிர கத்து காட்சிகளை பூமியில் இருந்தே கண்டு வியக்கும் விஞ் ஞானிகளாலும் எங்கே நிம்மதி என்று கண்டுபிடித்துச் சொல்ல இயலவில்லை.
வெண்ணையைக் கையிலே வைத்துக் கொண்டு, நெய்க்கு அலைந்தானாம் - முட்டாள் களைப் பார்த்து தமிழில் கூறும் பழமொழி இது. இந்தப் பழமொழியை உண் மைப்படுத்துவது போலவே
இன்றைய மனிதனின் நிலை உள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.
ஒவ்வொருவரும் வெவ்வேறு வழியில் நிம்மதியைத் தேடி அலை கிறார்கள். பல்வேறு வழிமுறை களை தேர்வு செய்கிறார்கள். விளைவு ....
புகைப்பழக்கம்
""சற்றே இளைப்பாறுங்கள் சார்மினார் புகையுங்கள்'' என்றும், ""ஊக்கமுள்ளோருக்கு பரம திருப்தி - ஒரே ஒரு சிசர்ஸ் சிகரெட்'' என் றும் விளம்பரம் செய்யப் படுவதைப் பார்த்து விட்டு, புகைப் பிடித்தலின் மூலம் நிம்மதியை தேடுபவர்கள் ஏராளம். புண்பட்ட மனதை புகைவிட்டு ஆற்றுவோம் என்று கூறிக் கொண்டே, நுரையீரலையும், கல்லீ ரலையும் புண்ணாக்கிக் கொண்டு - இருமலோடும், காச நோயோடும் போராடிக் கொண்டு இருக்கிற நிம்மதியையும் தொலைத்தவர்ளே ஏராளம்.
போதை
மது, கஞ்சா, அபின் போன்றவை மூலம் போதையில் மிதக்கலாம். அதன் மூலம் தன்னிலை மறக்கலாம். தற்காலிகமாவது சற்றே நிம்மதி யைப் பெறலாம் என்று எண்ணி மயங்கியவர்கள் ஏராளம். முடிவு நிம்மதியை மட்டும் அல்லாமல், மானத்தையும், வருமானத்தையும் இழந்து வாழ்வில் அல்லல் படுபவர்களே ஏராளம்.
உழைப்பு
உழைப்பே உயர்வு தரும் என்று வேலையில் முழுமையாக கவனம் செலுத்துபவர்களுக்காகவது நிம்மதி கிடைத்ததா? என்றால் இல்லை. முதலாளி தரும் ஊதி யத்தை வைத்துக் கொண்டு என்ன செய்ய முடியும் என்று அங்க லாய்த்துக் கொண்டு நிம்மதியைத் தேடும் தொழிலாளர்கள்
தொழிலாளிகள் பிரச்சனை பெரும் பிரச்சனை என்று கூறிக் கொண்டே முதலாளிகளும் நிம்மதி இழந்து தவிக்கிறார்கள். நிம்மதியைத் தேடி ஓடுகிறார்கள்.
வீட்டில்...
தொழில் நிறுவனங்களில் நிம் மதி இல்லை. வீட்டுக்குச் செல் வோம், மனைவி மக்களோடு சற்று நேரம் நிம்மதியாக இருப் போம் என்று வீட்டுக்கு வந்தால், வாடகை பாக்கி, கரண்ட் பில், ரேசன் பிரச் சனை, பள்ளிக்கூடம் பீஸ் கட்ட வேண்டும், மளிகைக் கடையில் பாக்கி என்று பல்வேறு பிரச்சனை கள் தலைவிரித்து ஆடிக் கொண்டு இருக்கின்றன. வீடு பலருக்கும் சுடுகாடு போல தோற்றம் அளிக் கிறது.
கடை வீதி
அலுவலகத்திலும் நிம்மதி இல்லை, வீட்டிலும் நிம்மதி இல்லை, சிறிது நேரம் காலாற நடந்துவிட்டு வருவோம். அதன் மூலம் கொஞ்சம் நிம்மதி கிடைக் கும் என்று கடை வீதிகளில் நடந் தால், அவசரம் அவசரமாக செல் லும் மக்கள் கூட்டம், சப்தம், கூச் சல், நெரிசல், சுட்டெரிக்கும் வெயில் ஒருபுறம், போக்குவரத்து இடையூறு மறுபுறம்... சில நேரங்களில் சாவு கிராக்கி வீட்டில் சொல்லிவிட்டு வந்து விட்டாயா? என்று சபிக்கும் ஆட்டோ, பஸ் டிரைவர்களின் சாபம்... எங்குமே நிம்மதியில்லை என்று புலம்ப வைக்கிறது.
கடற்கரை
கடை வீதிகளைத் தாண்டி கடற் கரைக்கும் செல்வோம், நிம்மதியாக கடல் அலைகளைப் பார்த்துக் கொண்டே காற்றை அனுபவிக்க லாம் என்று முடிவெடுத்து, கற்கரை மணலில் காலை வைத்தால் அங்கும் சுனாமி பீதி, சுண்டல்காரன் தொல்லை, காதலர் சேட்டை, காமுகர் வேட்டை என்றும் கடல் உள்வாங்கி விடுமோ என்ற பீதியும் மனதை அலைபாய வைக்கிறது. நிம்மதியை கெடுக்கிறது.
கிராமங்கள்
நகர்ப்புற வாழ்வு நரக வாழ்வாக உள்ளது. எனவே நான் கிராமத்திற்கு சென்று "செட்டில்' ஆகிவிடப் போகிறேன். கிராமப்புற வாழ்வில் மட்டுமே நிம்மதி கிடைக்கும் என்ற முடிவெடுத்து கிராமத்தில் குடியேறி னால் அங்கும் மதக் கலவரம், சாதிக் கலவரம், அரிவாள் கத்தி, கம்பு என்று தூக்கிக் கொண்டு அலை கிறார்கள். பயங்கர மான வாழ்க் கையாக கிராம வாழ்க்கை ஆகிவிட் டது என்பதில் எவருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது.
விண்ணில்
நகர்ப்புறத்திலும் நிம்மதியாக நடக்க முடியவில்லை, கிராமப்புறத் திலும் பயமற்ற வாழ்வு இல்லை, நிம்மதி என்பது வானத்திலாவது கிடைக்குமா என்று பார்த்தால் - அங்கும் விண்கலம், சேட்டிலைட் தொந்தரவு தாங்க முடியவில்லை. அவனவன் அணுகுண்டு வெடித்து பயமுறுத்திக் கொண்டிருக்கும் நிலை. ஓசோன் என்னும் வளி மண்டலத்தில் ஓட்டை விழுந்து விட்டது என்று கூப்பாடு வேறு.
வலியவன் - எளியவன்
இருவேளை உணவு உருப்படி கிடைக்காத ஏழைகள், வசதி உள்ளவன் மாட மாளிகையில் குளிர்சாதன அறையில் நிம்மதியாக இருக்கிறான். நமக்கு அந்த பாக்கியம் கிடைக்குமா? என்று ஏங்கிக் கொண்டு இருக்கிறான். பண வசதி படைத்தவனோ, குளிர் சாதன அறையில் பட்டு மெத்தை யில் படுத்தும் கூட மாத்திரை இல்லாமல் வாழ முடியவில்லையே, வாழ்க்கையில் எங்குதான் நிம்ம தியோ என்று ஏக்கப் பெரு மூச்சில் தூக்கம் வராமல் தவிக்கிறான். இரும்புப் பெட்டியில் உள்ள பணத்தை பாதுகாக்கவே அவனுக்கு நேரம் போதவில்லை.
பிரபல்யங்கள்
பாமரர்களும், பரம ஏழைகளும் நிம்மதி இன்றி தவிக்கிறார்கள், பிரபல்யமானவர்களாவது நிம்மதி யாக இருக்கிறார்களா? என்று பார்த்தால், பதில் இல்லை என்பது தான். இந்தியாவிலேயே இவர்தான் சூப்பர் ஸ்டார் என்று மற்றவர்க ளால் புகழப்படுபவர்களும் கூட இமயமலை உச்சியிலாவது நிம்மதி கிடைக்குமா? என்று ஏங்கும் நிலை.
ஆட்சியாளர்கள்
குடிமக்களுக்குத்தான் நிம்மதி இல்லை, குடிமக்களை ஆளுகின்ற ஆட்சியாளர்களுக்காவது நிம்மதி கிடைத்ததா? என்றால் இல்லை. ஆட்சியாளர்களால் பயமின்றி சுதந்திரமாக நடமாடவே முடிய வில்லை. குண்டு துளைக்கும் காரில் செல்ல வேண்டி உள்ளது, சுதந்திர தினத்தைக் கூட சுதந்திரமாக கொண்டாட முடியாத அவல நிலை.
காட்டில்
ஆசாபாசங்களும், சொந்த பந் தங்களும் தான் நிம்மதி கெடுவதற் குக் காரணம். ஆசாபா சங்களையும், நாடு நகரங்களையும் துறந்து, துற வறம் மேற்கொண்டு, காட்டுக்குச் சென்று விடுவோம். அங்குள்ள இலை தலைகளை அணிந்து காய் கனிகளை சாப்பிட் டுக் கொண்டு நிம்மதியாக வாழ்வோம் என்று எண்ணி காடுகளுக்குள் சென்றால், அங்கும் நிம்மதி இல்லை. ஏனெனில் காடு கள் என்பது பயங்கரவாதி களின் பதுங்கும் இடமாகவும், தீவிரவாதி களின் பயிற்சிப் பாசறைகளாகவும் மாறிவிட்டது.
மயானம்
கூச்சல் குழப்பம் எதுவும் இல் லாத நிலையை "மயான அமைதி' என்பார்கள். அந்த மயானத்தி லாவது சற்று நேரம் நிம்மதியாக இருக்கலாம் என்று நினைத்து மயா னத்தை நோக்கினால், அது பேய், பிசாசு கதைகளுக்கான ஊற் றுக் கண்ணாடியாகவும், சாராய சாம் ராஜ்யவாதிகளின் கூடாரமாக வும் திகழ்வதையே பார்க்க முடி கிறது.
எங்கே நிம்மதி?
உண்மையிலே நிம்மதி என்பது தேடி அலையக்கூடிய ஒன்றா, எல்லை இல்லை. சில வகையான பயிற்சிகளின் மூலமாகவும், தியா னங்களின் மூலமாகவும் தான் மனதிற்கு நிம்மதி கிடைக்கும் என்று பிரல்யமான மனோதத்துவ நிபுணர் களும் யோகா பயிற்சியாளர்களும் கூறுகின்றனர். இன்றைய அறிவியல் உலகமும் அதனை சரிகண்டுள்ளது.
இஸ்லாம்
இறை மார்க்கமான இஸ்லாம், தியானத்தின் மூலமும், சில பயிற்சி யின் மூலமாகவும் தான் நிம்மதியை அடைய முடியும் என்று 1400 ஆண்டுகளுக்கு முன்பாகவே தெளிவுபடுத்தி விட்டது.
அல்லாஹ் கூறுகிறான்...
அல்லாஹ்வை நினைவு கூர்வதால் (திக்ரு செய்வதால்) அவர்களுடைய உள்ளங்கள் அமைதியைப் பெறுகின்றன என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
அல்குர்ஆன் 13:28


இந்த வேதத்தில் இருந்து உமக்கு அறிவிப்பட்டதை எடுத்து ஓதுவீராக. இன்னும் தொழுகையை நிலைநாட்டு வீராக. நிச்சயமாக தொழுகை மானக் கேடானவற்றை விட்டும், தீமையை விட்டும் விலக்கும். நிச்சயமாக அல் லாஹ்வை நினைவு கூர்வது (திக்ரு செய்வது) மிகவும் பெரியதாகும்.
அல்குர்ஆன் 29:45

நீங்கள் தொழுகையை முடித்துக் கொண்டதும், நின்ற நிலையிலும், அமர்ந்த நிலையிலும், படுத்த நிலையிலும், அல்லாஹ்வை நினைவு கூர்ந்து (திக்ரு செய்யுங்கள்)
அல்குர்ஆன் 4:103

மனிதர்கள், அல்லாஹ்வை (திக்ரு செய்வது) நினைவு கூர்வதை விட்டும், தொழுகையை முறையாக நிறைவேற்று வதை விட்டும், ஜகாத் கொடுப்பதை விட்டும், அவர்களது வியாபாரங்களோ, கொடுக்கல் வாங்கலோ பாராமுகம் ஆக்காது. உள்ளங்களும், பார்வைகளும் தடுமாறக் கூடி யஅந்த (மறுமை) நாளை மட்டும் அஞ்சுவார்கள்.
அல்குர்ஆன் 24:37

(அல்லாஹ்வுடைய அடியார்களாகிய) அத்தகையோர், நின்ற நிலையிலும், இருந்த இருப்பிலும், தங்களது விலாப்புறங்கள் மீது சாய்ந்த நிலையிலும் அல்லாஹ்வை நினைவு கூர்(ந்து திக்ரு செய்)கிறார்கள். வானங்கள் பூமி ஆகியவற்றின் படைப்பை சிந்தித்து, ""எங்கள் ரட்சகனே! இவற்றை எல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை. நீ மகாதூய வன், நரக நெருப்பின் வேதனையில் இருந்து எங்களைக் காப்பாற்றுவாயாக (என்று பிரார்த்தனை செய்வார்கள்)
அல்குர்ஆன் 3:191

நிம்மதிக்கு வழி
மேற்கண்ட குர்ஆன் வசனங்கள், இறை நினைவு மூலமாகத்தான் ஒரு மனிதனுக்கு நிம்மதி கிடைக்கும் என்பதை தெளிவாகக் கூறுகிறான். அதிலும் குறிப்பாக திக்ரு, தொழுகை, பிரார்த்தனை செய்வது தான் சிறந்த இறை நினைவு என்பதை இதன் மூலம் நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
""அறிந்து கொள்ளுங்கள் அல்லாஹ்வை நினைவு கூர்வதால் மட்டுமே உங்கள் அமைதி பெறுகின்றன.'' (அல்குர்ஆன் 13:28)

ராசாவை காப்பாற்றுதன் மூலம் தலித்களை கருணாநிதி அவமானப்படுத்துகிறார்: தா.பாண்டியன்

திருச்சி: 2ஜி ஊழலில் ஈடுபட்டுள்ள முன்னாள் மத்திய அமைச்சர் அ. ராசாவை காப்பாற்ற முதல்வர் கருணாநிதி ஜாதிப் பெயரைப் பயன்படுத்துவது கண்டனத்திற்குரியது என்று கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார். கருணாநிதியின் இந்த செயல் தலித்களை இழிவுபடுத்துவதாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இது குறித்து தா. பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது,

ரூ. 1. 76 லட்சம் கோடி ஊழலில் ஜாதி எங்கிருந்து வந்தது. இந்த ஊழலில் கிடைத்த ஒரு ரூபாய் கூட தலித்களுக்குப் பயன்படவில்லை. ராசா ஒரு தலித் என்பதால் அனைவரும் அவரையே குறிவைக்கின்றனர் என்று கருணாநிதி அன்மையில் தெரிவித்திருந்தார். ராசாவை காப்பாற்ற முயல்வதன் மூலம் கருணாநிதி தமிழகத்தில் உள்ள தலித்களை அவமானப்படுத்துகிறார்.

தேர்தலுக்கு முன் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். திமுக மற்றும் காங்கிரஸுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

கடும் அமளிக்கு மத்தியில் நிதி மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்-ஒத்திவைப்பு

டெல்லி: எதிர்க்கட்சியினரின் கடும் அமளிக்கு மத்தியில் லோக்சபாவில் இன்று நிதி ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டது. அதன் பின்னர் லோக்சபாவும், முன்னதாக ராஜ்யசபாவும் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக ஜேபிசி விசாரணை நடத்தக் கோரி எதிர்க்கட்சியினர் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் போராடி வருகின்றனர். தற்போது தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையர் விவகாரத்தையும் அவர்கள் கையில் எடுத்துள்ளனர்.

இந்த விவகாரம் காரணமாக கடந்த 13 நாட்களாக இரு அவைகளும் நடத்த முடியாமல் முடங்கிப் போயுள்ளது. இந்த நிலையில் இன்று 14வது நாளாக அமளி தொடர்ந்தது.

காலை கூடிய லோக்சபாவும், ராஜ்யசபாவும் தொடர் அமளி காரணமாக பிற்பகல் 12 மணிக்கு ஒத்திவைக்கப்பட்டன. பின்னர் ராஜ்யசபா 12 மணிக்குக் கூடியபோது அமளி தொடரவே இன்று முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

லோக்சபா 12 மணிக்குக் கூடியபோதும் அமளி தொடர்ந்தது.இருப்பினும் நிதி ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றும் நடவடிக்கைகளில் ஆளும் கட்சி இறங்கியது. அமளியைப் பொருட்படுத்தாமல் நிதி ஒதுக்கீடு மசோதாவை நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்தார். பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் அது நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் மீரா குமார் அறிவித்தார்.

அரசு தங்களைப் பொருட்படுத்தாமல் நிதி ஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்ததால் வெகுண்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சபாநாயகர் மீரா குமார் இருக்கையை சுற்றிலும் நின்று கடுமையாக கோஷமிட்டனர். ஆனால் அதை சபாநாயகரும், ஆளுங்கட்சித் தரப்பும் பொருட்படுத்தவில்லை. மசோதா நிறைவேறியதும் அவை நாள் முழுமைக்கும் ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்.

கடந்த 14 நாட்களாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கிப் போயிருப்பதால் எம்.பிக்களுக்காக அரசு செலவிடும் மக்கள் வரிப்பணம் பல கோடி அளவுக்க விரயமாகி வருவது குறிப்பிடத்தக்கது.

புதுக் கட்சி தொடங்கி அதிமுகவுடன் கூட்டணி வைக்க விஜய்க்கு ரசிகர்கள் கோரிக்கை!

சென்னை: புதிய அரசியல் கட்சி தொடங்கும்போது அக்கட்சியை, அதிமுக கூட்டணியில் இணைத்து தேர்தலை சந்திக்க வேண்டும் என நடிகர் விஜய்யை அவரது ரசிகர்கள் வலியுறுத்தியுள்ளனராம்.

நடிகர் விஜய் அரசியலில் குதிக்கவிருப்பது கிட்டத்தட்ட உறுதியாகி வருகிறது. தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை அழைத்து சென்னை வட பழனியில் உள்ள தனக்குச் சொந்தமான ஜே.எஸ். கல்யாண மண்டபத்தில் வைத்து தீவிர ஆலோசனை நடத்தியுள்ளார் விஜய்

அப்போது ரசிகர்களிடம் அரசியல் பிரவேசம் குறித்த கருத்துக்களைக் கேட்டுள்ளார். ரசிகர்களும் கண்டிப்பாக அரசியலில் குதிக்கலாம். புதுக் கட்சி தொடங்க இதுதான் சரியான நேரம் என்று விஜய்யிடம் கூறினார்களாம்.

மேலும் புதிய கட்சி தொடங்குவதை பொங்கலுக்கு முன்பே செய்து விட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். அப்போதுதான் வருகிற சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு நமது பலத்தை பரீட்சித்துப் பார்க்க முடியும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

பெரும்பாலான நிர்வாகிகள், புதிய கட்சி தொடங்கிய பி்ன்னர் நாம் அதிமுக கூட்டணியில் சேர வேண்டும் என்று கருத்து தெரிவித்தார்களாம். இதைக் கேட்டு சற்று புருவம் உயர்த்தினாராம் விஜய். முதலி்ல நமது அரசியல் பிரவேசம் குறித்துப் பேசுங்கள், பிறகு கூட்டணி குறித்து யோசிக்கலாம் என்று கூறினாராம்.

கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருமே அரசியலில் புகலாம் என்று ஏகோபித்த குரலில் கூறியதால் சரி என்ற ரீதியில் பேசி அவர்களை அனுப்பி வைத்துள்ளாராம் விஜய். அனேகமாக பொங்கலுக்கு முன்பாகவே தனது கட்சி குறித்த அறிவிப்பை விஜய் வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் நடித்த சமீபத்திய படங்கள் வரிசையாக பெரும் தோல்வியைச் சந்தித்து வருகின்றன. நிலையான நடிகராக இன்னும் அவர் தன்னை நிலை நிறுத்திக் கொள்ளாமல் உள்ளார். இந்த நிலையில் அவரை அரசியல் தலைவர் என்ற புதிய கோணத்தில் தமிழக மக்கள் எப்படிப் பார்ப்பார்கள் என்பது மிகப் பெரிய கேள்வியாக உருவெடுத்துள்ளது.

சிண்டுமுடியும் ஊடகங்கள் : கருணாநிதி!

திமுகவுக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே பூசலை உண்டாக்கி கூட்டணியைத் துண்டிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் சில ஊடங்கள் செயல்படுவதாகவும் அவர்களது எண்ணம் நிறைவேறாது எனவும் முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

அண்மையில் வேலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் தனது உரையின் ஒரு பகுதியை மறைத்து சில பத்திரிகைகள் செய்திகள் வெளியிட்டது குறித்து தமிழக முதல்வர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார்.

பேச்சின் முதல் பகுதியை சில பத்திரிகைகள் பெரிதாக வெளியிட்டு, இரண்டாவது முக்கியமான பகுதியை அப்படியே மறைத்துள்ளன என்று கருணாநிதி குற்றம் சாட்டினார்.

தமிழகத்தில் கூட்டணிக்குத் திமுக தலைமை வகிப்பது சிலருக்கு பிடிக்கவில்லை. அதனால் சில விஷமிகளின் தூண்டுதலின் பேரில், திமுக உடனான உறவை கெடுக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள். இந்த உறவை துண்டித்தால், துண்டிக்கின்றவர்களுக்கும் துண்டிக்கப்படுகின்றவர்களுக்கும் சேர்த்து இரண்டு பேருக்கும் நஷ்டம். இரு சக்திகளும் மதவாத சக்திகளை எதிர்க்கின்ற சக்திகள் என்று பேசியிருந்தேன்.

ஆனால் இந்த பேச்சின் பின் பகுதியை மறைத்துவிட்டு, காங்கிரசுக்குத்தான் இழப்பு என்று பேசியதைப்போல இரண்டு கட்சிகளுக்குமிடையே பூசலை உண்டாக்க எண்ணுகிறார்கள். அந்த எண்ணம் நிறைவேறாது.

ஏழை - எளிய மக்களுக்காக காங்கிரீட் வீடுகள், ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி, 108 அவசர சிகிக்சை ஊர்தித் திட்டம், புதிய தலைமைச் செயலக வளாகம், உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு, ஆசியாவிலேயே மிகப்பெரிய அண்ணா நூற்றாண்டு நூலகம், செம்மொழிப் பூங்கா ஆகிய சாதனைகளையெல்லாம் ஒரு சில பத்திரிகையாளர்களால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

நீரா ராடியா உரையாடல் - விசாரணை நடைபெறுகிறது: சிதம்பரம்!

அரசியல்வாதிகள், தொழில் அதிபர்கள் மற்றும் பத்திரிகையாளர்களுடன் அரசியல் தரகர் நீரா ராடிய நடத்திய தொலைபேசி உரையாடல்கள் வெளியானது குறித்து மத்திய நேரடி வரிகள் வாரியம் விசாரணை நடத்தி வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

மத்திய அரசு விசாரணைக்கான உத்தரவு எதனையும் பிறப்பிக்கவில்லை. ஆனால் நேரடி வரிகள் வாரியம் (CBDT) இது குறித்து விசாரணை நடத்தி வருகிறது என்று புதுடில்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சிதம்பரம் கூறினார்.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதியை அடுத்து சிலரின் தொலைபேசி உரையாடல்கள் குறிப்பிட்ட சில நாள்களில் பதிவு செய்யப்பட்டன.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கை விசாரித்து வரும் சிபிஐ தரப்பில் நீரா ராடியா தொலைபேசி உரையாடல்கள் குறித்து  கருத்து கேட்டபோது, சுமார் 5000 தொலைபேசி அழைப்புகளை தாங்கள் ஆய்வு செய்து வருவதாகக் கூறியுள்ளனர்.

இதுவரை 104 தொலைபேசி உரையாடல்கள் இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

ஒரே நாளில் 234 தொகுதிகளுக்கும் தேர்தல்-கட்சிகள் கோரிக்கை!

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளுக்குமான வாக்குப் பதிவை ஒரே நாளில் நடத்த வேண்டும் என்றும், வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திடம் பல கட்சிகளும் கோரிக்கை விடுத்துள்ளன.

வரவிருக்கும் சட்டசபைத் தேர்தல் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரநிதிகளுடன் தேர்தல் ஆணையம் இன்று சென்னையில் தனித்தனியே சந்தித்து ஆலோசனை நடத்தியது.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பூர்வாங்கப் பணிகளை தேர்தல் ஆணையம் துவங்கியுள்ளது.

முதல் கட்டமாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தியது. இன்று காலை திமுக, அதிமுக, பாமக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட ஒன்பது கட்சிகளின் பிரதநிதிகளுடன் தேர்தல் ஆணையத்தின் துணைச் செயலாளர் ஜே.பி.பிரகாஷ், சட்ட ஆலோசகர் மென்ட்டிரட்டா ஆகியோர் தனித்தனியே சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இந்தக் கூட்டம் புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள பழைய தலைமைச் செயலகத்தில் நடந்தது.

பாஜக சார்பில் தமிழிசை சவுந்தர்ராஜன், திருமலைசாமி ஆகியோர் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றனர். அப்போது தமிழக சட்டசபை தேர்தலை ஒரே நாளில் நடத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மகேந்திரன் எம்.எல்.ஏ., ஆறுமுகநயினார், இந்திய கம்யூனிஸ்டு சார்பில் ராஜ்மோகன், வீரபாண்டியன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

அவர்கள் வாக்காளர்கள் அனைவருக்கும் வாக்காளர் அட்டை வழங்க வேண்டும். வாக்கு எந்திரத்தில் ஓட்டு போடும்போது யாருக்கு ஓட்டு போடப்பட்டது என்பதற்கான அத்தாட்சி தரப்பட வேண்டும். ஒரே கட்டமாக தேர்தல் நடத்த வேண்டும். ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தினர்.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, பீட்டர் அல்போன்ஸ் எம்.எல்.ஏ., கராத்தே தியாகராஜன் ஆகியோர் காங்கிரஸ் சார்பில் தேர்தல் அதிகாரியை சந்தித்து கருத்து தெரிவித்தனர்.

திமுக சார்பில் அமைச்சர் பொன்முடி, கல்யாண சுந்தரம், சண்முகசுந்தரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையன், ஜெயக்குமார், பொள்ளாச்சி ஜெயராமன், மனோஜ் பாண்டியன் ஆகியோர் பங்கேற்று நேர்மையான முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும், ஓட்டு எந்திரத்தில் யாருக்கு ஓட்டு போடப்பட்டது என்பதற்கு சான்று அளிக்க வேண்டும், ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்க வேண்டும் என்று வற்பறுத்தினர்.

பாமக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் வேலு, முத்துக்குமார் ஆகியோர் தேர்தல் அதிகாரியை சந்தித்து ஓட்டு வாங்க பணம் வினியோகத்தை தடுக்க வேண்டும் என்று கோரினர்.

பெரும்பாலான கட்சிகளின் பிரதிநிதிகள், சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவை ஒரே நாளில் நடத்த வேண்டும் என்றும், இதன்மூலம் கள்ள ஓட்டைத் தடுக்க முடியும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

சாதாரண தொலைபேசி இணைப்பு வைத்திருப்பவர்களுக்கு எஸ்.டி.டி. வசதியில் புதிய சலுகையை !

பி.எஸ்.என்.எல். தொலைத்தொடர்பு நிறுவனம் சாதாரண தொலைபேசி இணைப்பு வைத்திருப்பவர்களுக்கு எஸ்.டி.டி. வசதியில் புதிய சலுகையை புதன்கிழமை (டிசம்பர் 1) முதல் அமல் செய்கிறது.

சாதாரணத் தொலைபேசி வைத்திருக்கும் பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர் நாட்டில் எந்த ஊரிலும் உள்ள வேறொரு சாதாரண தொலைபேசிக்கு எஸ்.டி.டி. மூலம் தொடர்பு கொண்டால் மூன்று நிமிடங்களுக்கு ஒரு யூனிட் என்ற அடிப்படையில் கட்டணம் கணக்கிடப்படும். எந்த நிறுவனத்தின் சாதாரண தொலைபேசியாக இருந்தாலும் இதே கட்டணம்தான் வசூலிக்கப்படும்.
வாடிக்கையாளர் பயன்படுத்தும் தொலைபேசி கட்டண திட்டத்துக்கு ஏற்ப இது ரூ.1 அல்லது ரூ.1.20 ஆக இருக்கும்.
இப்போது இரண்டு நிமிடங்களுக்கு ஒரு யூனிட் என்று அடிப்படையில் கட்டணம் கணக்கிடப்படுகிறது. புதிய சலுகையால் பி.எஸ்.என்.எல். சாதாரண தொலைபேசி வாடிக்கையாளருக்கு எஸ்.டி.டி. வசதியில் 50 சதவீதம் கூடுதல் சலுகை கிடைக்கிறது.
தொலைபேசித் துறையில் போட்டிகள் அதிகரித்துள்ள நிலையில், பி.எஸ்.என்.எல். சாதாரணத் தொலைபேசியை திரும்ப ஒப்படைப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதைத் தடுப்பதற்காக நிறைய திட்டங்களை அந் நிறுவனம் அளித்து வருகிறது.
 சென்னையில் சாதாரணத் தொலைபேசி இணைப்பு வைத்திருப்போர் விரும்பினால் அதே கடைசி 5 அல்லது 4 எண்களைக் கொண்ட பி.எஸ்.என்.எல். செல்போன் சிம் கார்டு வழங்கும் திட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 கட்டணங்கள் பெருமளவு சரிந்துள்ள நிலையில், பி.எஸ்.என்.எல். கூடுதல் சலுகைத் திட்டத்தை இப்போது அறிவித்துள்ளது.
நாட்டில் 3.51 கோடி சாதாரண தொலைபேசி இணைப்புகள் பி.எஸ்.என்.எல். மூலம் இயங்குகின்றன. தொலைபேசி வாடிக்கையாளர்களில் 85 சதவீதம் பேர் பி.எஸ்.என்.எல். நிறுவன சேவையைப் பயன்படுத்துகின்றனர்.
இத் துறையின் வருவாயில் 92 சதவீதம் பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்குதான் கிடைக்கிறது. 602 மாவட்டங்களில், 7330 நகரங்கள், 5.6 லட்சம் கிராமங்களை பி.எஸ்.என்.எல். நிறுவனம் தொலைபேசி மூலமாக இணைக்கிறது.  -  தினமணி.

பெண்களுக்கு எதிராக நடக்கும் 99 சதவீதக் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்

அஸ்ஸலாமு அலைக்கும்,,,


பாலியல் தொழிலுக்காகப் பெண்கள் மற்றும் சிறுமிகள் கடத்தப்படுவது குறித்து தேசிய பெண்கள் ஆணையம் சமீபத்தில் நாடு முழுவதும் ஆய்வு நடத்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 
அந்த அறிக்கையில்,  இந்தியாவில் 378 மாவட்டங்களில் பாலியல் தொழிலுக்காகப் பெண்கள் மற்றும் சிறுமிகளை கடத்தும் அவலநிலை தொடர்வதாக தேசிய பெண்கள் ஆணையம் கவலை தெரிவித்துள்ளது.  மேற்கண்டத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பது:  இந்தச் சமூக அவலநிலையானது தென் மற்றும் கிழக்கு மாநிலங்களில்தான் அதிகமாக அரங்கேறுகிறது. கேரளம், ஆந்திரம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் அனைத்து மாவட்டங்களிலும் பாலியல் தொழிலுக்காகப் பெண்களையும், சிறுமிகளையும் கடத்தும் நிலை தொடர்கிறது.  தமிழகத்தில்...:  இதையடுத்து தமிழகத்தில்தான் பெண்களும், சிறுமிகளும் அதிகம் கடத்தப்படுகின்றனர். இங்கு 93.33 சதவீத மாவட்டப் பகுதிகளில் இருந்து பெண்களையும் சிறுமிகளையும் சப்தமில்லாமல் கடத்திச் சென்று பாலியல் தொழிலில் ஈடுபடுத்துகின்றனர். இதைத்தொடர்ந்து ஒரிசாவில் 86.66 சதவீத மாவட்டப் பகுதிகளிலும், பிகாரில் 86.48 சதவீத மாவட்டப் பகுதிகளிலும் பெண்களையும், சிறுமிகளையும் கடத்தும் அவலம் நீடிக்கிறது.
 
இதுதவிர்த்து, பிற மாநிலங்களிலும் குறிப்பிட்ட சதவீதத்திலான பெண்களும், சிறுமிகளும் பாலியல் தொழிலுக்காகக் கடத்தப்படும் கொடுமை நடந்தேறுகிறது.  28 லட்சம் பெண்கள்...  இந்தியா முழுவதும் 28 லட்சம் பெண்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இத்தொழில் ஈடுபடும் பெண்களில் 2.4 சதவீதம் பேர் 15-35 வயதுக்கு இடைப்பட்டவர்கள். 43 சதவீதம் பேர் சிறுமிகள்.  இந்தத் தொழிலில் குறிப்பிட்ட சதவீதத்தினர் வலுக்கட்டாயமாகக் கடத்தப்பட்டு ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்றால், மற்றொரு குறிப்பிட்ட சதவீதத்தினர் தங்களது குடும்ப நபர்களாலேயே வலுக்கட்டாயமாக இத்தொழிலுக்கு தள்ளப்படுகிறார்கள்.  அந்தவகையில், 22 சதவீதப் பெண்கள் தங்களது குடும்பத்தாரின் வற்புறுத்தலின் பேரில் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். 8 சதவீதம் பெண்கள் தங்களது கணவரின் நெருக்குதலின் பேரிலும் 18 சதவீதம் பேர் தங்களது நண்பர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினரின் சூழ்ச்சி வலையிலும் சிக்கி இத்தொழிலில் ஈடுபட்டுள்ளனர். காரணம் என்னபெரும்பாலும் பின்தங்கிய பகுதியில்தான் பாலியல் தொழில் அதிகம் நடக்கிறது. வறுமையும், ஏழ்மையும்தான் அப்பாவிப் பெண்களை இத்தொழிலுக்கு இட்டுச் செல்லும் முக்கியக் காரணிகளாக உள்ளன.  பின்தங்கிய வேலைவாய்ப்பற்றப் பகுதியில்தான் பெண்களுக்கு எதிராகப் பிற அநீதிகளும் அதிகம் அரங்கேறுகின்றன.  பெண்களுக்கு எதிரான அநீதிக்கு பாலினப் பாகுபாடும் முக்கியக் காரணமாக உள்ளது. பெண்களுக்கு இழைக்கப்படும் கொடுமையைத் தடுக்க சட்டங்கள் உள்ளன. ஆனால் அவை அனைத்தும் சரியாக அமல்படுத்தப்படுவதில்லை. இதுவும் பெண்களுக்கு எதிராக துணிச்சலாக அநீதி இழைக்கப்படுவதற்கு காரணம்.  தீர்வு என்ன? பெண்கள் இதுபோன்று பாலியல் தொழிலில் ஈடுபடுவதற்கு பொருளாதாரச் சூழ்நிலைதான் முக்கியக் காரணம். இதனால் அவர்களை முதலில் பொருளாதார ரீதியாகச் சுதந்திரமாக்க வேண்டும். அதேபோல, பெண்களுக்கு எதிரான அநீதியைத் தடுக்க நடைமுறையில் உள்ள சட்டத்தைத் திறன்படச் செயல்படுத்த வேண்டும். பெண்களுக்கு எதிராக அநீதி இழைப்பவர்களுக்கு கடுமையானத் தண்டனை வழங்கத் தயங்கக்கூடாது. இதையெல்லாம்விட பெண்கள் என்பவர்கள் சமுதாயத்தில் மதிக்கப்படக்கூடியவர்கள் என்ற மனநிலையை அனைவர் மத்தியிலும் உருவாக்க முயலவேண்டும். இவ்வாறு செய்தாலே பெண்களுக்கு எதிராக நடக்கும் 99 சதவீதக் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிடலாம்.  

இந்தியா சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. எனினும் பெண்களுக்கு எதிரான அநீதியை மட்டும் இன்னும் தடுத்து நிறுத்த முடியவில்லை. வியாபாரப் பொருள்களாய் பெண்கள் கருதப்படும் அவலநிலை இன்றும் நீடிக்கிறது. இந்த நிலை என்று மாறும்? என்பதே சமூக ஆர்வலர்களின் ஆதங்கமாகவும், கேள்வியாகவும் உள்ளது. இதற்கு அரசு நடவடிக்கை மட்டும் போதாது. பெண்கள் விஷயத்தில் மக்களும் தங்களின் தவறான மனநிலையை மாற்றிக் கொள்ள முன்வரவேண்டும். 


------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களும் ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாக இருக்கின்றனர்; அவர்கள் நல்லதைச் செய்ய துண்டுகிறார்கள்; தீயதை விட்டும் விலக்குகிறார்கள்; தொழுகையைக் கடைப்படிக்கிறார்கள்; (ஏழை வரியாகிய) ஜகாத்தை (முறையாகக்) கொடுத்துவருகிறார்கள்; அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் வழிப் படுகிறார்கள்; அவர்களுக்கு அல்லாஹ் சீக்கிரத்தில் கருணை புரிவான் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான் 9:71