திங்கள், 8 நவம்பர், 2010

நானோவிடம் மயங்கிய ஒபாமா!

Tata Nanoடாடா நானோவைக் கண்டு அதிசயித்த ஒபாமா, மிஷல் ஒபாமா

மும்பையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தபோது டாடா நானோ கார் குறித்து அறிந்து அதிசயித்தார் அதிபர் ஒபாமா. அவருடைய மனைவி மிஷல் ஒரு படி மேலே போய் எனக்கு உடனே நானோவைப் பார்க்க வேண்டும் போல உள்ளது என்று ரத்தன் டாடாவிடம் கூற அவரும் உடனடியாக ஒரு காரை வரவழைத்து ஒபாமா தம்பதிக்குக் காட்டி மகிழ்ந்தார்.

மும்பையில் முகாமிட்டிருந்தபோது ஒபாமா இந்திய தொழிலதிபர்கள் மத்தியில் பேசினார். அந்த கூட்டத்தின்போது அவரிடம் ரத்தன் டாடா அறிமுகப்படுத்தப்பட்டார். அப்போது தனது மனைவி மிஷலிடம், இவர்தான் உலகின் மிகச் சிறிய, விலை குறைந்த காரை அறிமுகப்படுத்தியவர் என்று ஒபாமா மகிழ்ச்சியுடன் கூறினார். அதைக் கேட்டதும் மிஷல், நான் நானோ காரைப் பார்க்க விரும்புகிறேன், முடியுமா என்று ரத்தன் டாடாவிடம் வேண்டுகோள் வைத்தார்.

கண்டிப்பாக நிறைவேற்றுவதாக உறுதியளித்த ரத்தன், கூட்டம் முடிந்ததும் அடுத்த நாள் காலையே ஒபாமா தம்பதியினர் தங்கியிருந்த தாஜ் மஹால் பேலஸ் ஹோட்டலுக்கு (இதுவும் டாடாவின் ஹோட்டல் என்பது குறிப்பிடத்தக்கது) நானோ காரை வரவழைத்து நிறுத்தினார். காலையில் நானோ கார் நிற்பதைப் பார்த்து மகிழ்ந்தார் மிஷல். பின்னர் ஒபாமா தனது மனைவியுடன் காருக்குள் ஏறி அமர்ந்து அதை ரசித்துப் பார்த்தார்.

இதுகுறித்து டாடா செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ஒபாமா தம்பதிக்கு நானோ காரைக் காட்டியது உண்மைதான். இருவரும் மகிழ்ச்சியுடன் காரைப் பார்த்தனர். ஏறி அமர்ந்து ரசித்தனர். காரின் தொழில்நுட்பம் குறித்து அறிந்து வியப்பும் அடைந்தனர் என்றார்.
President Barack Obama, who heads the world"s richest economy, checked out the world"s cheapest car-Nano, on Sunday. No sooner was the powerful US couple introduced to Ratan Tata, who heads the $72 billion conglomerate, President Obama told the First Lady Michelle that he was the person who created the $2,500 wonder car. Michelle immediately expressed a desire to see the car . After the discussion on Saturday evening, Tata organised a gleaming Nano along with a chauffeur, right at the porch of the luxurious Taj Mahal Palace hotel, where Obama and entourage had been camping since Saturday.

இப்படி ஒரு அரசியல்வாதி இல்லையே!-இந்தியர்களின் ஏக்கத்தை அதிகரித்த ஒபாமா வருகை!!

கடந்த 48 மணி நேரமாக இந்திய மீடியாக்களை ஒட்டுமொத்தமாக ஆக்கிரமித்துக் கொண்டுள்ளார் அமெரிக்க அதிபர் ஒபாமா. 24 மணி நேரமும் ஒபாமா குறித்த செய்திகளை ஆங்கில மீடியாக்கள் ஒளிபரப்பி வருகின்றன. அதேசமயம், மொழிச் சானல்கள் அந்த அளவுக்கு அலட்டிக் கொள்ளவில்லை.

ஒபாமாவின் வருகையால் இந்திய மக்களுக்கு என்ன லாபம் கிடைக்குமோ தெரியவில்லை. ஆனால் அவரது வருகையால், இந்திய அரசியல்வாதிகள் மீதான இந்தியர்களின் எரிச்சலும், கோபமும், ஆதங்கமும், எரிச்சலும் நிச்சயம் அதிகரிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. காரணம், ஒபாமாவின் செயல்பாடுகள் அப்படி.

ஒபாமாவும், அவரது மனைவி மிஷலும், மும்பையில் உள்ள ஹோலி நேம் பள்ளிக்குச் சென்று தீபாவளியை மாணவர்களுடன் கொண்டாடினர். சிறிய கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் நீட்டி முழக்கி யாரும் பேசவில்லை, இத்தனாவது வட்டத்தின் சார்பாக என்று கூறி யாரும் மாலை போடவில்லை. இது இந்தியாவுக்கு வினோதமானதாகும். இங்கெல்லாம் அரசியல்வாதிகளின் கூட்டம் எப்படி நடக்கும் என்பது உங்களுக்குத் தெரியாததில்லை.

பள்ளிக்கூட மாணவ, மாணவியருடன் சேர்ந்து மிஷல் ஆடிப் பாடினார். ஆனால் ஒபாமா சற்று சங்கோஜப்பட்டார். இருப்பினும் அவரது சங்கோஜம் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்கவில்லை. சீக்கிரமே அவரும் ஜோதியில் ஐக்கியமானார். சிறார்களுடன் சேர்ந்து அவரும் ஜாலியாக ஆடினார். உலக வல்லரசின் தலைவரான ஒபாமா மற்றும் அவரது மனைவியுடன் சேர்ந்து ஆடியதால் அந்தக் குழந்தைகளின் முகத்தில் தெரித்த நம்பிக்கை படு பிரகாசமாக இருந்தது. இந்தியாவின் எதிர்காலம் பிரகாசமாகத்தான் தெரிகிறது.

இந்த நேரத்தில் ட்விட்டரில் பறந்த செய்திகள் சிந்தனையைத் தூண்டுவதாக அமைந்துள்ளன. ஏன் நமது இந்தியத் தலைவர்கள் இப்படி மக்களோடு மக்களாக கலப்பதில்லை என்பதே அந்த செய்திகளின் மையக் கேள்வியாக அமைந்தது.

முன்பு இந்திரா காந்தி, ஆதிவாசி மக்களுடன் சேர்ந்து நடனமாடிய காட்சி அடங்கிய புகைப்படம் இந்த நேரத்தில் எனது மனதில் நிழலாடியது. ஏன், முன்னாள் பிரதமரான ராஜீவ் காந்தி கூட அப்படி சில நேரம் நடந்து கொண்டுள்ளார். ஆனால் அதெல்லாம் ராஜீவுடன் முடிந்து விட்டது. அதன் பிறகுஅப்படிப்பட்ட 'டான்ஸை' நம்மால் பார்க்க முடியவில்லை. ஆனால் அரசியல்வாதிகள், அவர்களது 'இசைக்கு' நம்மை 'ஆட்டுவித்து' வேடிக்கை பார்க்கும் சம்பவங்கள் நிறையவே நடக்கின்றன. அதற்குப் பஞ்சேமே இல்லை.

இந்த நிகழ்சசியை முடித்துக் கொண்ட பின்னர் மும்பையின் பெருமைமிகு செயின்ட் சேவியர் கல்லூரிக்குச் சென்றார் ஒபாமா. ஒபாமாவைக் காண மீடியாக்களும், மக்களும், பார்வையாளர்களும் பெரும் ஆர்வத்துடன் காணப்பட்டனர். மிஷல் ஒபாமா தொடக்க உரையாற்றினார். தனது பேச்சின்போது, சாதாரண கேள்விளை ஒபாமாவிடம் கேட்காதீர்கள், மாறாக பதில் சொல்லத் திணறும் வகையில் கடினமான கேள்விகளைக் கேளுங்கள் என்றும் கூறி கூட்டத்தினரை உற்சாகப்படுத்தினார் -கேள்விகள் கேட்க. மேலும் அந்த மேடையில் ஒபாமா மட்டுமே இருந்தார். இதுவும் இந்தியாவில் காண முடியாத ஒரு அரிய காட்சியாகும். யாராவது இப்படி ஒரு இந்தத் தலைவரைப் பார்த்து கடினமான கேள்விகளைக் கேளுங்கள் என்று அவரை வைத்துக் கொண்டு கூற முடியுமா?

செயின்ட் சேவியர் கல்லூரியில் நடந்ததை உன்னிப்பாகப் பாருங்கள். எட்டு கேள்விகள் வரை ஒபாமாவிடம் கேட்கலாம் எனக் கூறப்பட்டிருந்தது. ஆனால் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு ஒபாமா சளைக்காமல் பதிலளித்தார்.

இங்கும் இந்திய மக்களின் ஏக்கத்தைத் தூண்டி விட்டுள்ளது ஒபாமாவின் சளைக்காத பதில்கள். நமது இந்தியத் தலைவர்களிடம் இப்படிக் கேட்க முடியுமா?. இப்படியெல்லாம் கேள்வி கேட்பதை ஒருபோதும் விரும்பாதவர்கள் நமது தலைவர்கள். தேர்தலின்போது மட்டுமே அவர்கள் மக்களிடம் வருகிறார்கள். மேலும், மக்கள் தங்களது பிரச்சினைகளுக்காக தலைவர்களை அணுகுவது, அவர்களை கேள்வி கேட்பதெல்லாம் நடக்கவே முடியாத காரியங்கள்.

அதேபோல டவுன் ஹால் கூட்டத்தை முடித்துக் கொண்ட பின்னர் அங்கு கூடியிருந்த மக்களிடம் சென்று கை குலுக்கினார் ஒபாமா. அவரது பாதுகாவலர்கள் இரு தரப்புக்கும் இடையே தூரத்தை கடைப்பிடித்தனரே தவிர, ஒபாமா மக்களிடம் கை குலுக்குவதையோ, மக்களின் ஆர்வத்தை தடுக்கவோ அவர்கள் முயலவே இல்லை.

இந்திய பாதுகாப்பை இங்கு எண்ணிப் பாருங்கள். எங்காவது இந்திய அரசியல் தலைவர் யாராவது, இப்படி மக்களுடன் கை குலுக்கியுள்ளார்களா?. அல்லது நாம் கை குலுக்கப் போனால் பாதுகாவலர்கள் அதை அனுமதிப்பார்களா?. ஒருவேளை மேற்கத்திய மக்களைப் போல நமது மக்கள் பழக மாட்டார்கள் என அரசியல்வாதிகள் நினைக்கிறார்களோ என்னமோ.

மேற்கத்திய அரசியல்வாதிகளுக்கு நகைச்சுவை உணர்வு சிறப்பாக இருக்கும். அதை மக்களிடம் சுதந்திரமாகவும் வெளிப்படுத்துவார்கள். மும்பையில் நடந்த இந்திய தொழிலதிபர்கள் கூட்டத்தில் பேசியபோது ஒபாமா அதை சரியாக செய்தார்.

அவர் தனது பேச்சின்போது, தேர்தல் முடிவுகள் நமக்கு பாதகமாக இருந்தாலும் கூட ஜனநாயகத்தின் சிறப்புகள் மகத்தானவை என்று அவர் பேசியபோது அரங்கே சிரித்தது. அமெரிக்க இடைத் தேர்தலில் ஆளும் ஜனநாயகக் கட்சி தோல்வியைத் தழுவியதை மறைமுகமாக சுட்டிக் காட்டி அவர் பேசியதன் உள்ளர்த்தத்தை உணர்ந்து கூட்டத்தினர் சிரித்தனர். ஆனால் இப்படியெல்லாம் எதையுமே கேஷுவலாக எடுத்து, அதை நகைச்சுவை உணர்வுடன் சொல்லும் இந்திய அரசியல்வாதிகள் -கிட்டத்தட்ட இல்லை என்று கூறலாம். 'சிரிக்காமலேயே' இருந்த பிரதமரைப் பார்த்த நாடல்லவா இது!.

இப்படி இந்திய அரசியல்வாதிகளிடம் உள்ள எதிர்மறையான விஷயங்கள், எத்தனை ஒபாமாக்கள் வந்தாலும், நாளுக்கு நாள் அதிகரிக்குமே தவிர குறையும் என்று கூற முடியாது. ஆனால் அது மக்களைத்தான் பாதிக்குமே தவிர நிச்சயமாக அவர்களை பாதிக்கவில்லை, பாதிக்கவும் செய்யாது.

எது எப்படி இருந்தாலும், வாழ்க்கை வழக்கம் போலத்தான் நடக்கப் போகிறது - நமக்கும், நம்மைச் சுற்றியுள்ள அரசியல்வாதிகளுக்கும்.

இன்று நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் பேசுகிறார் அதிபர் ஒபாமா

டெல்லி: மும்பை பயணத்தை முடித்துக் கொண்டு டெல்லி வந்துள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இன்று நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் பேசுகிறார்.

18 முதல் 20 நிமிடம் வரை இந்த பேச்சு இடம்பெறவுள்ளது. இதில் லோக்சபா மற்றும் ராஜ்யசபா உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

நாடாளுமன்றத்திற்கு வரும் ஒபாமாவுக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது. நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் ஒபாமா பேசவுள்ளார்.

தனது பேச்சுக்கு டெலி பிராம்ப்டரை பயன்படுத்தவுள்ளார் ஒபாமா. நாடாளுமன்ற மைய மண்டபத்தில் உரை நிகழ்த்தும் நிகழ்ச்சிக்காக டெலி பிராம்ப்டர் பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.

நாடாளுமன்றத்திற்கு ஒபாமா மாலை 5.25 மணிக்கு வருகிறார். தனது பேச்சை 5.8 மணிக்கு தொடங்குவார். மொத்தம் ஒரு மணி நேரம் வரை அவர் நாடாளுமன்ற வளாகத்தில் இருப்பார்.

முன்னதாக நாடாளுமன்றத்திற்கு வருகை தரும் ஒபாமாவை குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, பிரதமர் மன்மோகன் சிங், லோக்சபா சபாநாயகர் மீரா குமார், நாடாளுமன்றத்துறை அமைச்சர் பவன் குமார் பன்சால் ஆகியோர் வரவேற்பார்கள்.

ஹமீத் அன்சாரி வரவேற்புரை நிகழ்த்துவார். மீரா குமார் நன்றியுரை நவில்வார்.

தனது நாடாளுமன்ற வருகையின்போது அங்கு வைக்கப்பட்டுள்ள பார்வையாளர் டயரியான கோல்டன் புக்கிலும் ஒபாமா கையெழுத்திடுவார்.

ஒபாமா வருகையைத் தொடர்ந்து நாடாளுமன்ற வளாகம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மைய வளாகத்திற்கு மிகப் பெரிய வரலாறு உண்டு. இந்த இடத்தில் வைத்துதான் 1947ம் ஆண்டு இங்கிலாந்து ஆட்சியாளர்கள், இந்தியாவிடம் ஆட்சியையும், நாட்டையும் ஒப்படைத்தனர். இந்த இடத்தில் உலகப் பெரும் தலைவர்கள் உரையாற்றியுள்ளனர். முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் 2000மாவது ஆண்டு இந்தியா வந்தபோது இங்கு உரை நிகழ்த்தியுள்ளார்.

பயணிகளை காத்த ரயில்வே ஊழியர்-பாராட்டிய ஒபாமா

Vishnuமும்பை: மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்திற்குள் 2008ம் ஆண்டு 26ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது அங்கு அறிவிப்பாளர் பணியில் இருந்தவர் விஷ்ணு ஷென்டே.

அவர் தாக்குதல் தொடங்கியவுடன் அங்கிருந்து ஓடிவிடாமல், தீவிரவாதிகளின் நடமாட்டததை தனது டவரி்ல் இருந்து கண்காணித்தபடி மக்களுக்கு பல அறிவுரைத் தந்தார்.

எந்த வழியாக தப்பியோடலாம் என்ற விவரத்தையும் ஒலிப்பெருக்கியில் தொடர்ந்து தந்து ஏராளமான உயிர்களைக் காப்பாறினார்.

மும்பை தீவிரவாதத் தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்த நேற்று தாஜ் ஹோட்டலில் ஒபாமா கலந்து கொண்ட நிகழ்ச்சிக்கு இவரும் அழைக்கப்பட்டிருந்தார்.

நிகழ்ச்சியின் போது ஒபாமா, விஷ்ணு ஷென்டேவை தனதருகே அழைத்து அவருடன் கைகுலுக்கி, `மிகச் சிறந்த முறையில் செயல்பட்டு பலரைக் காப்பாற்றியிருக்கிறீர்கள்' என்று பாராட்டினார்