செவ்வாய், 7 டிசம்பர், 2010

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு!

தமிழகத்தை புயல் தாக்கக்கூடும் எனச் செய்தி வந்துள்ளதால், மின் விபத்தை தவிர்க்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் தகுந்த நபர்களை கொண்ட குழு அமைத்து, அவசரத் தேவைக்கு உதவி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விபத்து நிகழா வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தேவையான மின்மாற்றி மற்றும் மின் பாதைகளில் மின் தடை மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், துணை மின் நிலையம் மற்றும் பிரிவுகளில், தகுந்த கவனத்துடனும் விபத்து நிகழா வண்ணம் எச்சரிக்கையுடன் இருக்க ஊழியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

புயல் மற்றும் மழைக்காலங்களில் பொதுமக்கள் மின் விபத்தினை தவிர்க்க அறுந்து கிடக்கும் மின் கம்பிகளையும் மற்றும் மின்சாரப் புதை வடங்களையும் தொடவோ அல்லது அப்புறப்படுத்தவோ கூடாது. வீட்டிலுள்ள மின் தளவாடங்களை ஈரமான பொருட்களை பயன்படுத்தி, கையாள வேண்டாம். மின் மாற்றி மற்றும் மின் பகிர்மான பெட்டிகள், மின்கம்பங்கள், இழுவைக் கம்பிகள் மற்றும் பிற மின் சாதனங்களை தொடுவதை தவிர்க்கவும். வீட்டில் மின் சாதனத்தில் மின் அதிர்ச்சியை உணர்ந்தால், உடனே மெயின் சுவிட்சுகளை உலர்ந்த ரப்பர் காலணிகளை அணிந்து கொண்டு அணைத்து விட்டு, அருகிலுள்ள மின்சார அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்கவும். மேலும், தண்ணீர் தேங்கியுள்ள இடங்களில் நிற்பதையும், செல்வதையும் தவிர்க்கவும். மின்சார விபத்துகள் தொடர்பாக 044- 2852 1949 / 2859 4234/2852 1109 / 155333 ஆகிய எண்களில் தெரிவித்து, உதவி பெறலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


--
முஃமினான ஆண்களும் முஃமினான பெண்களும் ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாக இருக்கின்றனர்; அவர்கள் நல்லதைச் செய்ய துண்டுகிறார்கள்; தீயதை விட்டும் விலக்குகிறார்கள்; தொழுகையைக் கடைப்படிக்கிறார்கள்; (ஏழை வரியாகிய) ஜகாத்தை (முறையாகக்) கொடுத்துவருகிறார்கள்; அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் வழிப் படுகிறார்கள்; அவர்களுக்கு அல்லாஹ் சீக்கிரத்தில் கருணை புரிவான் - நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான் 9:71

__._,_.___

தமிழகத்தில் தலித் முதல்வராவார்: ப.சி. நம்பிக்கை!

தமிழ்நாட்டிலும் காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சி பொறுப்பை ஏற்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார், மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்.

காங்கிரஸ் கட்சியின் சார்பில் அம்பேத்கர் நினைவேந்தல் பொதுக்கூட்டம் சென்னை மயிலாப்பூர் அம்பேத்கர் பாலம் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டம் கொட்டும் மழையிலும் திரண்டிருந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பேசுகையில், "டிசம்பர் 6-ந் தேதி அம்பேத்கர் நினைவு நாள். அன்று நாடாளுமன்ற கூட்டம் நடக்கிறது. அன்று நான் கூட்டத்திற்கு செல்லாமல் இருக்க முடியாது. நாடாளுமன்றம் காலை 11 மணிக்கு தொடங்கி 11-05 மணிக்கு முடிந்தாலும், முடியாவிட்டாலும் நான் சென்னையில் இருக்க முடியாது.
தலித் மக்கள் விடுதலைக்காக உரிமைக்காக அம்பேத்கர் போல யாரும் பாடுபடவில்லை. மகாத்மா காந்தி தீண்டாமை ஒழிந்துவிட்டது என்று கூறினார். ஆனால் தீண்டாமை ஒழியவில்லை என்று அம்பேத்கர் அழுத்தம் திருத்தமாக கூறினார்.
தீண்டாமை கிராமத்தில் மட்டுமல்ல நகர்ப்புறத்திலும் தீண்டாமை கொடுமை இருக்கிறது. இரட்டை தம்பளர் முறை இன்னும் இருக்கிறது.
காங்கிரஸ் கட்சியில் நேற்றைய தலைமுறைக்கு தலைவர்களை அடையாளம் காட்டியதுபோல இன்றைய தலைமுறைக்கு சோனியாகாந்தியை அடையாளம் காட்டியதுபோல அடுத்த தலைமுறைக்கு ராகுல் காந்தியை அடையாளம் காட்டியுள்ளோம். அவரது அறிவுரையை ஏற்று ஏராளமான இளைஞர்கள் இன்றைக்கு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து இருக்கிறார்கள்.
காங்கிரஸ் கட்சியில் படித்த இளைஞர்கள் அதிகமான பேர் சேரவேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இளைஞர்களுக்கு வழிவிடவேண்டிய காலம் வந்துவிட்டது. கட்சியில் மட்டும் அல்ல ஆட்சியிலும் இளைஞர்களுக்கு பொறுப்புகள் வழங்கும் காலம் வந்துவிட்டது. இந்த கருத்தை நான் வலியுறுத்தி சொல்ல விரும்புகிறேன்.
அம்பேத்கருக்கு கல்விதான் மிகப்பெரிய தகுதியை தந்தது. இது அனைத்து தலைவர்களுக்கும் பொருந்தும். ஆகவே கல்வியை புறக்கணிக்காதீர்கள். கல்வித்தகுதியை பெற்று இந்த கட்சியில் பொறுப்புகளை ஏற்றுக்கொள்ள வாருங்கள். கட்சி பொறுப்பை ஏற்று ஆட்சி பொறுப்பை ஏற்றுக்கொள்ளவும் வாருங்கள் என்று உங்களை நான் அழைக்கிறேன்.
காங்கிரஸ் கட்சி ஒன்றுதான் கக்கனை உள்துறை அமைச்சராக ஆக்கியது. இந்தியாவில் எந்த கட்சியாவது தலித் மக்களை உள்துறை அமைச்சராக ஆக்கி இருக்கிறதா?
நான் உறுதியாக நம்புகிறேன். தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சி பொறுப்பை ஏற்கும் வாய்ப்பு எதிர்காலத்தில் கிடைக்காமல் போகாது. தமிழ்நாட்டிலும் காங்கிரஸ் கட்சிக்கு ஆட்சி பொறுப்பை ஏற்கும் வாய்ப்பு கிடைக்கும். இந்தியாவிலும் ஆட்சி பொறுப்பை ஏற்கும் வாய்ப்பு காங்கிரசுக்கு தொடர்ந்து கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.
தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி ஆட்சி பொறுப்பை ஏற்கக்கூடிய வாய்ப்பு வரும் நேரத்திலே தலித் ஒருவர் உள்துறை அமைச்சராக வருவார். தலித் ஒருவர் நிதி அமைச்சராக வருவார். தலித் ஒருவர் தமிழ்நாட்டிலே முதல்வராகவும் வருவார் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
  
கல்வி நமக்கு மிகப்பெரிய ஆயுதம். அந்த ஆயுதத்தை கையிலே ஏந்தி, கட்சியில் ஆட்சியில் பொறுப்புகளை ஏற்று தீண்டாமை வன்கொடுமை என்று அனைத்து கொடுமைகளையும் ஒழித்து இந்தியாவிலே அனைத்து மக்களும் சமமாக வாழக்கூடிய ஒரு சமத்துவ சமுதாயத்தை உருவாக்குங்கள்," என்றார் ப.சிதம்பரம்.

ரூ.1.76 லட்சம் கோடி ஊழலை நம்புவதா? - கருணாநிதி

பேசா படத்தில், திரைக்கு முன்னே படம் தெரிந்தால் கூட, நாம் அமர்ந்திருக்கின்ற இடத்திற்கு பின்னால் ஒருவன் கையிலே மெகாபோனை வைத்துக் கொண்டு, திரையில் என்ன நடக்கிறது என்று சொல்லிக்கொண்டே இருப்பான்.
''அதோ பார், பீமசேனன் வருகிறான், அதோ பார், பகாசூரன் வருகிறான், பீமசேனன் கீசகனை வதைக்கிறான்'' என்பதை வர்ணித்துக் கொண்டே ஒருவன் இருப்பான். ''பீமசேனனைப் பார், பகாசூரனைப் பார், பல்லுக்குப் பல் இருகாதம்; பல்லிடுக்கு முக்காதம்''- என்று வர்ணிப்பான். படம் பார்க்கின்ற யாருக்கும் ''பல்லுக்குப் பல் இருகாதம்'' என்கின்றானே, எப்படி அது? காதம் என்றால் பத்து மைல் அல்லவா? இருகாதம் என்கிறபோது இருபது மைல் அல்லவா? பல்லுக்குப் பல் இருகாதம்; பல்லிடுக்கு முக்காதம் என்றால் முப்பதும் இருபதும் ஐம்பது மைல் அல்லவா? ஒரு பல்லுக்கும் இன்னொரு பல்லுக்கும் இடையே ஐம்பது மைல் அகலம் என்றால், வாய் எவ்வளவு அகலம் இருந்திருக்கும்? இப்படி ஒருவர் இருந்திருக்க முடியுமா-பகாசூரன் என்று? அன்றைக்கு யாரும் கேட்டதில்லை. இன்றைக்கு கேட்கிறார்களா என்ன?
ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரத்து முன்னூற்று ஐம்பத்திரண்டு கோடி ரூபாய் ஊழல் என்று சொன்னால், ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரத்து முன்னூற்று ஐம்பத்திரண்டு கோடி ரூபாய் என்று சொல்லும்போது, அது எவ்வளவு பெரிய தொகை, அந்த தொகையை ஒருவர் ஊழல் செய்திருக்க முடியுமா? யாராவது ஒருவர் அதை அபகரித்திருந்தால் இவ்வளவு பெரிய கணக்கை-ஒரு தாளிலே எழுதிக்காட்டினால், அதை எப்படி இன்றைக்கு நம்புகிறோமோ, படித்தவர்கள் நிறைந்த, அறிவு பரவியிருக்கிற, சட்டம் தெரிந்த, நாணயத்தின் மதிப்பை உணர்ந்த இந்தக் காலத்திலே கூட ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூபாய் என்றால் அதை நம்புகின்ற நாம்-அன்றைக்கு ''பல்லுக்குப் பல் இருகாதம்; பல்லிடுக்கு முக்காதம்'' என்று அவனுடைய வாயே முப்பதாயிரம் மைல் என்று பகாசூரனை வதைத்தபோது, அதை ஆனந்தமாக கேட்டுக்கொண்டுதான் படத்தை பார்த்தோம். அப்படி படம் பார்த்த ஏமாளிகளிலே ஒருவனாக நான் அன்றைக்கு இருந்தேன்.
படம் பார்த்தவர்களுடைய ஏமாளித்தனம் அப்படி இருந்தது. எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். ஆனால், இன்றைக்கு ஒரு மனிதன் அந்த காரியத்தை செய்கிறான் என்றால், அவன் விஞ்ஞான ரீதியாகத்தான் செய்ய முடியும்.