ஞாயிறு, 24 அக்டோபர், 2010

குஜராத்தில் இளம்பெண் மீது திராவகம் வீச்சு!

மோடியின் தலைமையில் ஆட்சி நடந்து வரும் குஜராத் தலைநகர் அகமதாபாதில் சமீப காலமாக இளம்பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

சமீபத்தில் அகமதாபாத் நகரில் அமைந்துள்ள நேஷனல் டிசைன் இன்ஸ்டிடியூட்டின் பெண்கள் விடுதியில் நிர்வாண கோலத்தில் நுழைந்த ஒரு மனிதன் அங்கிருந்த இளம்பெண் ஒருவரை சரமாரியாக தாக்கியுள்ளான் இதனை தொடர்ந்து அவனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் 25 வயது நிரம்பிய பெண் ஒருவர் மீது திராவகம் வீசிய கொடூர சம்பவம் அங்கு நிகழ்ந்துள்ளது. அகமதாபாத் ஷாபூர் பகுதியை சேர்ந்த சுனிதா என்பவர், திருமணமான இவர் நேற்று ஷாகிபாக் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு முன்னால் வந்த மர்ம நபர் ஒருவர் கண்ணிமைக்கும் நேரத்தில் சுனிதா மீது திராவகத்தை வீசிவிட்டு தப்பியோடி விட்டார்.

கணநேரத்தில் நிகழ்ந்த இச்சம்பவத்தால் நிலைகுலைந்து முகம் வெந்து துடித்த சுனிதாவை அருகிலிருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். சுனிதாவுக்கு அறிகமுகமானவர் யாரோதான் திராவகம் வீசியுள்ளார், விரைவில் பிடித்து விடுவோம் என்று அகமதாபாத் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: