வெள்ளி, 15 அக்டோபர், 2010

லாட்டரியின் புகழ் இடம் தமிழகம்..........................

லாட்டரி சீட்டை தமிழ்நாட்டில் அரசு கெஜெட்டில் மட்டும் தான் தடை செய்வதாக எழுதி இருக்கிறதே தவிர பரவலாக அனைத்து மாவட்டத்திலும் சிறிய ஊர் முதல் பெருநகரம் வரை நாளுக்கு நாள் கோடி கட்டி விற்பனை ஆகும் தொழில் லாட்டரி விற்பனை தொழில். இந்தியாவில் உள்ள அனைத்து மாநில லாட்டரிகளும் இன்றைக்கு தமிழகத்தில் மிகவும் சிரமம் இன்றி அனைத்து ஊர்களிலும் கிடைக்கிறது....இந்த லாட்டரியை வாங்குபவர்களில் பெரும்பாலானவர்கள் நம் சமுதாய மக்கள் தான் இஹனை அந்தந்த ஊர் காவல் துறையும் கண்டுக்கொள்ளவில்லை..அவர்களுக்கு சேர வேண்டிய தொகை மிகசிறப்புடன் அவர்களை சென்று சேருகிறது... நாம் நம்முடைய ஊரில் இருக்கும் சமுதாய மக்களை நாம் காப்பாற்ற வேண்டுமானால் அவரவர் ஊரில் ஒரு குழு அமைத்து நம்மூரை தேடி வந்து விற்பனை செய்யும் வியாபாரிகளையும் நம் பகுதியில் இருக்கும் மொத்த விர்பனையாளரையும் அடையாளம் கண்டு மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் ஒப்படைக்க ஒரு சிறிய முயற்சியை நாம் ஏற்படுத்துவோம்..............

கருத்துகள் இல்லை: