வியாழன், 28 அக்டோபர், 2010

நாகர்கோவில் அருகே கெட்டுபோன அரிசியில் சத்துணவு: பட்டினி கிடந்த மாணவர்கள்!

நாகர்கோவில்: கெட்டுப் போன அரிசியில் சமைத்த சத்துணவை மாணவர்கள் [^] சாப்பிட முடியாமல் போனதால் அவர்கள் பட்டினி கிடக்க நேரிட்டது.

நாகர்கோவிலை அடுத்த விசுவாசபுரத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு சுமார் 50 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இந்த பள்ளியில் கடந்த சில தினங்களாக கெட்டுபோன அரிசியில் சமைத்த உணவு வழங்கப்பட்டது.

இது தொடர்பாக அதிகாரிகளிடம் பொதுமக்கள் புகார் [^] தெரிவித்தனர். இதையடுத்து கலெக்டர் அலுவலக அதிகாரிகள் பள்ளிக்கு சென்று பார்த்தனர். ஆனால் அரிசியை மாற்ற எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்த நிலையில் நேற்று கெட்டு போன அரிசியிலேயே உணவு சமைத்து குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் குழந்தைகள் சாப்பிட முடியாமல் அந்த உணவை வாங்கி அப்படியே பள்ளியின் எதிரிலேயே கொட்டினர்.

இது பற்றி அறிந்ததும் திருமலை நகர் அதி்முக கிளை செயலாளர் முருகன், சகாயநகர் ஊராட்சி துணை தலைவர் [^] முருகன் மற்றும் பொதுமக்கள் அங்கு வந்தனர். குழந்தைகளிடம் அந்த உணவை சாப்பிட வேண்டாம் என்று கூறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

கருத்துகள் இல்லை: