வெள்ளி, 29 அக்டோபர், 2010

ஆளுநர் பதவியிலிருந்து பர்னாலாவை நீக்க வலியுறுத்தல்!

தமிழக ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவை ஆளுநர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என சிரோன்மணி அகாலிதளம் கோரியுள்ளது.

அக் கட்சியின் மாநிலச் செயலாளர் தல்ஜித் சிங் சீமா கூறுகையில், பஞ்சாப் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் குறித்து பர்னாலா தனது பதவிக்கு பொருத்தமில்லாத வகையில் கருத்து கூறியுள்ளார்.

தனது ஆளுநர் பதவியைப் பயன்படுத்தி தனது குடும்பத்தினர் பஞ்சாப் மாநில அரசியலில் செல்வாக்கு பெறும் வகையில் செயல்பட்டு வருகிறார். எனவே, அவரை ஆளுநர் பதவியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்றார்.

பர்னாலா முன்பு சிரோன்மணி அகாலி தளத்தில் இருந்தவர் என்பதும், இப்போது அவரது மனைவி தனிக் கட்சி நடத்தி வருவதும், அவரது மகன் ககன்ஜித் சிரோன்மணி அகாலி தளம் கட்சியிலிருந்து கடந்த ஆண்டு நீக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: