புதன், 2 மார்ச், 2011

அதிகாரி அணி தாவல்: திசை திரும்பும் ஸ்பெக்ட்ரம் வழக்கு

சிபிஐ அதிகாரியின் அணி தாவல் தற்போது அரசியல்வாதிகளிடையே பெரும் சர்ச்சையை உண்டுபண்ணியுள்ளது. நாடுமுழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பிய 2ஜி ஸ்பெக்டரம் ஊழல் வழக்கு விசாரைணை சுப்ரீம் கோர்ட்டின் நேரடி பார்வையில் நடைபெற்று வருகிறது. 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கு குறித்து விசாரித்து சிபிஐ தன்னுடைய முதல் தகவல் அறிக்கையை வரும் 31-ம் தேதிக்குள் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளது.இந்நிலையில் சிபிஐ பிரிவில் <இணைஇயக்குனராக பதவி வகித்து வந்த ஒய்.பி.சிங் என்பவர் சிபிஐயிலிருந்து தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டுஅதிலிருந்து விலகி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுக்கு (ஐ.சி.சி.,)அணி தாவியுள்ளார். இந்த அணி தாவல் தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. காரணம் ஐ.சி.சி.,யில் <உறுப்பினராக உள்ள பார்லி எம்.பி., ஷாகித் பால்வா என்பவர் 2ஜி ஸ்பெக்டரம் ஊழல் வழக்கில் சிக்கியிருப்பதே காரணம். ஸ்பெக்ட்ரம் ஊழல்வழக்கில்முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நிறுவனங்களில் ஒன்றான டி.பி.குரூப்பின் தலைமைப்பொறுப்பு வகிக்கிறார்ஷாகித் பால்வா. இந்த டி.பி குரூப் நிறுவனம் அரேபிய நாட்டைசேர்ந்த எடிசாலட் என்ற நிறுவனத்திற்கு கோடிக்கணக்கான மதிப்பில் அலைக்கற்றையை விற்பனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஐ.சி.சி.,யின் இந்திய பிரிவு வக்கீலான வேணுகோபால் என்பவர் ஒய்.பி.சிங்.,அணிதாவலால் 2ஜி ஸ்பெக்டரம் வழக்கு விசாரணை யில் பின்னடைவு ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் வழக்கு முடியும் தருவாயில் உள்ள நிலையில் அணி தாவுவது என்பது வழக்கை திசை திருப்பும் செயலாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.ஒய்.பி.,சிங்கின் அணி தாவல் குறித்து சரத் பவார் மற்றும் சீதாராம் யெச்சூரி ஆகியோரும் ஆதரித்தும் எதிர்ப்பு தெரிவித்தும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: