திங்கள், 15 ஆகஸ்ட், 2011

சுதந்திரம் !

இது யாருக்கு கிடைத்தது ?

யாருக்கு யார் கொடுத்தது ?
...
சுதந்திரம் என்றால் என்ன ?

பசி, பட்டினி, கொலை , கொள்ளை ,பலாத்காரம் ,ஆகியவை நிறைந்த இந்த நாட்டிலே யாருக்கு கிடைத்தது சுதந்திரம் ?

ஏதாவது தனி சமுதாயம் இந்த நாட்டிலே சுதந்திரமாக வாழ்வதாக வரலாறுகள் உண்டா ?

பள்ளிக்கூடங்களில் படிக்கும் பிள்ளைகளுக்கு மிட்டாய் கொடுத்து கொடி ஏற்றி விடுமுறை விடுவதா சுதந்திரம் ?

மேல் ஜாதி மக்கள் ஆதிக்கம் செலுத்தி சில ஜாதியினரை வளர விடாமல் தடுக்க கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கும் இந்த நாட்டிலா சுதந்திரம் கிடைத்தது ?

சாதியின் பெயரால் சண்டை இட்டு ,டீக்கடையில் சாதியத்தை வளர்க்கும் இந்த நாட்டிலா சுதந்திரம் கிடைத்தது ?

மேல் ஜாதி கீழ் ஜாதி என்று சாதிய வர்க்கத்தின் பெயரால் சண்டையை மூட்டும் அரசியல் வாதிகள் இருக்கும் இந்த நாட்டில நாம் சுதந்திரம் பெற்றோம் ?

இஸ்லாமியர்கள் இந்த நாட்டில் சுதந்திரமாக உள்ளார்களா ?

கருத்துகள் இல்லை: