ஞாயிறு, 31 அக்டோபர், 2010

மக்கா, மதீனாவில் உடல் நல பாதிப்பால் 29 இந்திய ஹஜ் யாத்ரீகர்கள் மரணம்!

ஹஜ் யாத்திரை சென்ற 29 இந்திய யாத்ரீகர்கள், பல்வேறு உடல் நல பாதிப்பு காரணமாக மக்காவிலும், மதீனாவிலும் மரணமடைந்துள்ளனர்.

அடுகத்த மாதம் ஹஜ் புனித யாத்திரை தொடங்குகிறது. இதற்காக உலகம் முழுவதிலும் இருந்து மக்காவுக்கும், மதீனாவுக்கும் யாத்ரீகர்கள் குவிந்து வருகின்றனர்.

இப்படி வந்துள்ள இந்தியர்களில் 29 பேர் இதுவரை இறந்துள்ளனர். அனைவரும் பல்வேறு உடல் நல பாதிப்புகளால் மரணமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரணமடைந்தவர்களில் 8 பேர் உ.பியைச் சேர்ந்தவர்கள் ஆவர். மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் குறித்த விவரம் தெரியவில்லை.

கருத்துகள் இல்லை: