ஞாயிறு, 31 அக்டோபர், 2010

சென்னை விமான நிலையத்தில் 20 லட்சம் மதிப்பிலான தங்கம் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் பறிமுதல் !

சென்னை விமான நிலையத்தில் இருபது லட்சம் ரூபாய மதிப்பிலான தங்கம் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை சுங்க இலாகாவினர் பறிமுதல் செய்தனர்.

இலங்கை தலை நகர் கொழும்புவிலிருந்து சென்னைக்கு தங்கம் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்ததையடுத்து சுங்க அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தனியார் விமானம் மூலன் இலங்கையிலிருந்து சென்னைக்கு வந்த ஒரு பயணி சுமார் ஒரு கிலோ தங்க கட்டிகள் கடத்தி வந்ததை அவர்கள் கண்டு பிடித்தனர். அவரை கைது செய்து அவரிடமிருந்த ரூ.17 லட்சம் மதிப்பிலான தங்கக் கட்டிகளை சுங்க இலாகாவினர் கைப்பற்றினர்.
இது குறித்து சுங்க வரித்துறை ஆணையர் பெரியசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், இரகசிய தகவல் கிடைத்ததன் அடிப்படையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த சுங்கத்துறையினர் நடத்திய சோதனையில் அப்துல்லா ஜியாவுதீன் என்ற பயணி 50 தங்க கட்டிகளை (மொத்தம் 970 கிராம்) தனது ஆசனவாய் வழியாக மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் கைது செய்ப்பபட்டு ரிமாண்ட் செய்யப்பட்டுள்ளார் என்று தெரிவித்தார்.
இது தவிர சரவணன் வித்யா ஆகிய பயணிகளிடமிருந்து 70 டிஜிட்டல் கேமராக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார். பெண் பயணியான வித்யா மிகவும் வித்தியாசமான வகையில் டிஜிட்டல் கேமராக்களை தனது ஜாக்கெடுக்குள்ளும், தொடை மற்றும் கால் பகுதிகளிலும் உடலோடு ஒட்டி கடத்தி வந்ததாக ஆணையர் பெரியசாமி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: