வியாழன், 14 அக்டோபர், 2010

குவைத் நாட்டில் டிரைவர்கள் வேலை-தமிழக அரசு அறிவிப்பு

குவைத் நாட்டில் டிரைவர்கள் வேலை-தமிழக அரசு அறிவிப்பு குவைத்தில் டிரைவர் வேலைக்கு ஆட்கள் எடுக்கப்படுவதாக தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து நிறுவனத்தின் தலைவரும், கூடுதல் தலைமைச் செயலாளருமான குத்சியா காந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: குவைத் நாட்டில் உள்ள முன்னணி நிறுவனத்திற்கு கனரக மற்றும் லகுரக வாகன ஓட்டுனர்கள் தேவைப்படுகிறார்கள். 45வயதுக்குள் இருக்க வேண்டும். குவைத்தில் 2 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்த அனுபவத்துடன் ஓராண்டுக்கு செல்லத்தக்க வகையில் அந்நாட்டு ஓட்டுனர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்ச கல்வித்தகுதி எஸ்.எஸ்.எல்.சி. தேர்ச்சி ஆகும். தகுதி உடையவர்கள் தேவையான சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களுடன் 2 போட்டோக்களை இணைத்து தலைவர் , அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம், 48, டாக்டர் முத்துலட்சுமி சாலை,அடையாறு, சென்னை -20என்ற முகவரிக்கு 20-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு நல்ல ஊதியத்துடன் குவைத் நாட்டின் சட்டதிட்டப்படி இதர சலுகைகள் வழங்கப்படும். இதுதொடர்பாக கூடுதல் விவரங்கள் அறிய 99403-93617 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். http://www.omcmanpower.com/

கருத்துகள் இல்லை: