புதன், 20 அக்டோபர், 2010

குவைத்தில் மஸ்கட் வங்கியின் சேவை தொடக்கம்!

வளைகுடா நாடுகளில் ஒன்றான ஓமனில் சிறந்த சேவை செய்து தலை சிறந்த வங்கியாக திகழும் பேங்க் மஸ்கட் தனது கிளையை குவைத்தில் நேற்று முதல் தொடங்கியுள்ளது.



நேற்று நடைபெற்ற விழாவில் குவைத் தலை நகர் ஆளுனர் ஷேக் அல் ஜாபர் அல் சபாஹ் அலி, குவைத் அரசு அதிகாரிகள், பேங்க் மஸ்கட் வங்கியின் தலைவர் ஷேக் அப்துல் மாலிக் பின் அப்துல்லாஹ் அல் கலிலி , தலைமை செயல் அலுவலர் அப்துர் ரசாக் அலி ஈசா மற்றும் பேங்க் மஸ்கட் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசிய பேங்க் மஸ்கட் வங்கியின் தலைவர் ஷேக் அப்துல் மாலிக் பின் அப்துல்லாஹ் அல் கலிலி '' மஸ்கட் வங்கி குவைத் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், இரு நாடுகளுக்கிடையேயான வணிக ரீதியிலான தொடர்புகளை ஊக்குவிக்கும் வகையிலும் செயலாற்றும் என்று தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: