புதன், 20 அக்டோபர், 2010

வக்ஃப் வாரியத் தலைவர்களுடன் இந்து மகா சபை பேச்சுவார்த்தை!

பாபர் மஸ்ஜித் விவகாரம் குறித்து வக்ஃப் வாரியத் தலைவர்களுடன் வரும் 28-ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்போவதாக இந்து மகா சபை தேசிய தலைவர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், "ராம ஜென்மபூமி இந்துக்களுக்கு உரியது. 1949-ம் ஆண்டு இந்த விவகாரம் தொடர்பாக முதன் முதலாக வழக்கு தொடர்ந்ததும் இந்து மகா சபை தான்.

அயோத்தி பாபர் மசூதி இடத்தை மூன்றாகப் பிரித்திருப்பதை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியாது. அதை முழுமையாக இந்து மகா சபையிடம் ஒப்படைத்திருக்க வேண்டும்.

இந்தத் தீர்ப்பு எங்களுக்கு திருப்திகரமாக இல்லை. எனவே, இதை எதிர்த்து நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவிருக்கிறோம். ராம ஜென்மபூமி முழுவதுமாக எங்களுக்குக் கிடைத்தபிறகு ராமர்கோவில் கட்டும் பணி துவங்கும்.

இவ்விவகாரம் குறித்து வரும் 28ஆம் தேதி வக்ப்வாரியத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறோம். இதற்காக காஞ்சி ஜெயேந்திரசரஸ்வதி சுவாமிகள்,விஜயேந்திரசரஸ்வதி சுவாமிகளுடன் நானும் டெல்லி செல்ல உள்ளேன்.

அங்குள்ள மீனாட்சி கோவிலில் வைத்து தான் பேச்சுவார்த்தை நடத்தவிருக்கிறோம். இதில் ஏற்படும் உடன்பாட்டை பொருத்தே எங்கள் அடுத்தகட்டநடவடிக்கை இருக்கும்" என்றார்.

கருத்துகள் இல்லை: