சனி, 23 அக்டோபர், 2010

பீகார் முதல்வர் மீது செருப்பு வீச்சு!

சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பீகார் மாநிலத்தில் அம்மாநில முதல்வர் நிதீஷ்குமார் மீது ஒருவர் செருப்பு வீசியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பீகார் மாநில சட்டமன்ற தேர்தல் 6 கட்டமாக நடைபெறுகிறது. இதன் முதல் கட்ட தேர்தல் வியாழக் கிழமையன்று நடைபெற்று முடிந்தது. இரண்டாவது கட்டத் தேர்தல் நடைபெற உள்ள லைவுரியா தொகுதியில் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பிரதா சிங்கிற்கு ஆதரவு திரட்ட, மேற்கு சாம்பரான் மாவட்டத்தில் கட்சி நிர்வாகிகளின் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் நிதீஷ் குமார் கலந்து கொண்டு பேசினார். அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் பிரதா சிங்கை நோக்கி செருப்பை வீசினார். உடனே நிதிஷ் குமார் பேச்சை முடித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார். இதனால் அங்கு சலசலப்பு நிலவியது. செருப்பை வீசியவரை போலீசார் கைது செய்தனர்....

கருத்துகள் இல்லை: