ஞாயிறு, 31 அக்டோபர், 2010

பேஸ் புக் விளையாட்டு - குழந்தையை கொன்ற தாய்!

பேஸ் புக்கில் விளையாடிக் கொண்டு இருந்த போது  குழந்தை அழுது  இடையூறு ஏற்படுத்தியதால்  கோபத்தில் தன் மூன்று மாத குழந்தையை கொலை செய்ததாக குற்றம்சாட்டப் பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ளார் தோபியாஸ்.

புளோரிடாவை சேர்ந்த தோபியாஸ் சம்பவ தினத்தன்று பேஸ் புக்கில் farmville எனும் விளையாட்டை அதிக ஆர்வத்துடன் விளையாடிக் கொண்டு இருக்கையில் தன் குழந்தை அழுததால் அதை தூக்கிப் போட்டுள்ளார். மீண்டும் ஒரு முறை தோபியாஸ் குழந்தையை தூக்கி போட்டுள்ளார் அதன் காரணமாக குழந்தையின் தலையில் அடிபட்டு இருக்கலாம் என செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த குற்றத்திற்காக தொபியாசுக்கு 25 முதல் 50 வருடங்கள் வரை சிறைத் தண்டனை வழங்கப்படலாம் எனத் தெரிகிறது.....

கருத்துகள் இல்லை: