வெள்ளி, 29 அக்டோபர், 2010

ரயிலில் மும்பைக்கு பயணம் செய்த ராகுல்! !

காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி கடந்த‌ 18 ம் தேதியன்று கோரக்பூரில் இருந்து மும்பைக்கு ரயிலில் பயணம் செயதுள்ளார். மேலும் ராகுல் பயணம் குறித்து உ.பி., போலீசுக்கு எவ்வித அறிவிப்பும் கொடுக்கப்படவில்‌லை. பீகாரிலிருந்து கோரக்பூருக்கு சிறப்பு விமானம் மூலம் வந்த ராகுல் அங்கிருந்து கோரக்பூர் -லோக்மான்யா திலக் விரைவு எக்ஸ்பிரஸ் ரயிலில் மும்பைக்கு பயணம் செய்துள்ளார். மேலும் ரயிலில் ராகுல் பொதுப் பெட்டியில் 36 மணி நேரம் பயணம் செய்துள்ளார். இதன்மூலம் இளைஞர்கள், வேலையில்லாமல் தவிப்போரின் கனவு, ஆசைகள் குறித்து அறிய வாய்ப்பு கிடைக்கும் என்பதே ராகுலின் குறிக்கோளாகும். அக்டோபர் 20ம் தேதியன்று ராகுல்மும்பையை சென்றடைந்துள்ளார்.

கருத்துகள் இல்லை: