வியாழன், 28 அக்டோபர், 2010

ஆர்எஸ்எஸ்ஸை தீவிரமாக கண்காணிக்க வேண்டும்: காங்கிரஸ்!

புதுதில்லி, அக்.28: ஆஜ்மீர் குண்டுவெடிப்பு விசாரணையில் ராஜஸ்தான் பயங்கரவாத எதிர்ப்பு போலீசார் கண்டுபிடித்த தகவல்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியுள்ளது என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.


ஆஜ்மீர் குண்டுவெடிப்பு வழக்கு ஆர்எஸ்எஸ் அமைப்பை தடைசெய்ய பொருத்தமானது என காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் மணீஷ் திவாரி தெரிவித்தார். எனினும் ஆர்எஸ்எஸ் மீது என்ன மாதிரியான நடவடிக்கை எடுப்பது அவசியம் அல்லது அவசியமில்லை என்பதை அரசுதான் தீர்மானிக்க வேண்டும் என்றார் அவர்.

கருத்துகள் இல்லை: