புதன், 27 அக்டோபர், 2010

ராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளிகள் பட்டியலில் இருந்து பிரபாகரன் பெயர் நீக்கம் : தடா கோர்ட்டு உத்தரவு !

ராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளிகள் பட்டியலில் இருந்து பிரபாகரன் பெயர் நீக்கம் : 
தடா கோர்ட்டு உத்தரவு
ராஜீவ்காந்தி கொலைக் குற்றவாளிகள் பட்டியலில் இருந்து பிரபாகரன், பொட்டு அம்மான் ஆகியோரது பெயர்கள் நீக்கி தடா கோர்ட்டு நீதிபதி உத்தரவிட்டார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 1991-ம் ஆண்டு மே 21-ந் தேதி தேர்தல் பிரசாரத்திற்காக சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூர் வந்தபோது படுகொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்து விசாரித்தது. இந்த வழக் கின் முதல் குற்றவாளியாக விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனும், 2-வது குற்றவாளியாக அந்த இயக்கத்தின் உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மானும் சேர்க்கப்பட்டிருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சிறப்பு கோர்ட்டு, நளினி, அவரது கணவர் முருகன் உள்பட 26 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் சிவராசன் உள்பட 12 பேர் விசாரணை நடந்து கொண்டிருந்த போதே இறந்துவிட்டனர். பிரபாகரன் உள்பட 4 பேர் தலைமறைவு குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட நளினி அனுப்பிய கருணை மனுவை ஏற்றுக் கொண்டு அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அவர் சிறைதண்டனை அனுபவித்து வருகிறார்.

இதற்கிடையே, 2009-ம் ஆண்டு மே 18-ந் தேதி இலங்கையில் நந்திக்கடல் கழிமுகப் பகுதியில் நடந்த சண்டையில் பிரபாகரன் இறந்துவிட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. இருந்தாலும், பிரபாகரன் மரண சான்றிதழ் இந்தியாவிற்கு அனுப்பப்படவில்லை. 1981-ம் ஆண்டு இலங்கை தமிழ் அரசியல்வாதி அமிர்தலிங்கம் கொலை செய்யப்பட்ட வழக்கில் இலங்கை போலீசார், கோர்ட்டில் ஒரு அறிக்கை தாக்கல் செய்தன......

கருத்துகள் இல்லை: