வியாழன், 28 அக்டோபர், 2010

இஸ்லாம் மீதான தாக்குதல் கலாச்சார மோதலுக்கு வழிவகுக்கும்! - அரபு நாடுகள் எச்சரிக்கை!

இஸ்லாத்திற்கு எதிராக திட்ட மிட்டு தொடுக்கப்படும் தாக்குதல்களை தடுக்க மேற்கத்திய நாடுகள் தயாராக வில்லை என்றால் அது சர்வதேச பாது காப்பிற்காக அச்சுறுத்தலை தோற்றுவித் திடும் என்று அரபு நாடுகள் எச்சரித்துள் ளன.
ஐ.நா. மன்றத்தின் பொதுச் சபையில் உரையாற்றம் போதுதான் அரபு நாடுகள் மேற்கத்திய உலகின் "இஸ்லாமிய பீதி''க்கு எதிராக எச்சரிக்கை விடுத்தன.  மேற்கத்திய உலகிற்கும், முஸ்லிம்களுக்கும் இடையே பிளவு அதிகரித்துக் கொண்டே வருவது கலாச்சாரங்களிடையேயான மோதல்களுக்குத்தான் இட்டுச் செல்லும் என்றும் அவர்கள் எச்சரித்தனர்.
அமெரிக்க தேவாலயத்தின் குர்ஆனை கொளுத்துவோம் என்ற மிரட்டல், செப்டம்பர் 11 தாக்குதல் நிகழ்ந்த இடத்தின் அருகே கட்டப்படும் பள்ளிவாசலுக்கு எதிராக தூண்டப்படுகின்ற எதிர்ப் புக் கிளர்ச்சிகள், ஐரோப்பிய நாடுகளில் இஸ்லாமிய சின்னங்கள் தாக்கப்படுவது போன்ற அராஜகங்கள், ஃபர்தா எதிர்ப்பு சட்ட மசோதாக்கள் போன்ற அத்து மீறல்கள் ஆகியவற்றையும் அரபு நாடுகளின் தலைவர்கள் தங்களது உரைகளில் சுட்டிக் காட்டினர்.
செப்டம்பர் 11 நிகழ்விற்குப் பின் பயங்கரவாத எதிர்ப்புப் போர் என்ற பெயரில் அமெரிக்கா நடத்திக் கொண்டிருக்கின்ற அநியாய அக்கிரமங்களை கத்தார் நாட்டின் அமீர் ஷேக் ஹமது பின் கலீஃபா அல்தானி கடுமையாக விமர்சித்தார்.
பயங்கரவாதத்தை இஸ்லாம் மீது சுமத்துவதை நாங்கள் ஒப்புக் கொள்ள மாட்டோம். அது தவறானது என்பது மட்டுமல்ல, நிகழ்கால சான்றுகளையும் கூட வேண்டுமென்றே புறக்கணிக்கின்ற வரலாற்று ரீதியானதோர் மாபெரும் அநீதியாகும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

கருத்துகள் இல்லை: