வியாழன், 28 அக்டோபர், 2010

சவூதி மன்னர் அப்துல்லாவுக்கு ராஜபக்சே விசேட கடிதம் !

இலங்கை ஜனாதிபதி  மஹிந்த ராஜபக்சே சவூதி அரேபியாவின் மன்னர் அப்துல்லா பின் அப்துல் அஸீஸுக்கு விசேட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக இலங்கை ராஜாங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

4 மாதமே நிறைந்த கைக்குழந்தை ஒன்றை கொன்றுவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள  இலங்கை பணிப்பெண் ரிஸானா நஃபீக் என்கிற 23 யுவதியை கருணை அடிப்படையில் விடுவிக்கும்படி இலங்கை அதிபர் அதில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


முன்னதாக,  ரிஸானா குடும்பத்தாரின் விசர் நிரம்பிய மேல் முறையீட்டை சவுதி அரேபிய உச்சநீதிமன்றம் நிராகரித்து விட்டிருந்தது.


சம்பவம் நடைபெற்ற போது ரிஸானா என்கிற அந்தப் பணிப்பெண்ணுக்கு 17 வயதே ஆகியிருந்தது.  பிறந்து 4 மாதமேயான கைக்குழந்தைக்க்கு பாட்டில் பால் புகட்டுகையில் அக்குழந்தை மூச்சுத்திணறி இறந்துபோனதும் 'தானே கொன்றுவிட்டதாக' அப்பணிப்பெண் வாக்குமூலம் அளித்திருந்தார்.


ஆனால் அது திறமையற்ற மொழிப் பெயர்ப்பாளரின் தவறே என்றும், அக்குழந்தை மூச்சுத் திணறி விபத்தாய் தான் இறந்தது என்றும் அந்த யுவதியின் தரப்பு இப்போது தெரிவித்துள்ளது.


ஹாங்காங்கிலிருந்து செயல்படும் ஆசிய மனித உரிமை ஆணையம் இதில் இலங்கை யுவதிக்கு ஆதரவாக ஊடகப் பிரச்சாரம் செய்துவருகிறது.


சவூதியில் ஐந்து முதல் ஆறு இலட்சம் இலங்கையர்கள் உள்ளதாகவும், அதில் பெரும்பாலோர் பணிப்பெண்களாகவும், ஓட்டுனர்களாகவும் உள்ளதாக கூறப்படுகிறது.


சில காலங்களுக்கு முன்பு, பிறிதொரு இலங்கை பணிப்பெண்ணின் உடலில் சவூதி முதலாளி ஆணி அடித்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டதிலிருந்து இரு நாடுகளுக்கிடையே சுமூக உறவு மோசமடைந்திருந்தது.

கருத்துகள் இல்லை: