செவ்வாய், 26 அக்டோபர், 2010

அ.தி.மு.க.வில் மீண்டும் ராதாரவி!

பிரபல நடிகரும் சைதாப்பேட்டை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ராதாரவி அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் சந்து மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.

நடிகர் ராதரவி டில்லியில் கடந்த 22ஆம் தேதி காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் ராகுல் காந்தியை சந்தித்து பேசினார். தமிழ்நாட்டு அரசியல் நிலவரம் குறித்து ராகுல் காந்தியுடன் பேசியதாக பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

என்னை காங்கிரசில் சேரும்படி அவர் அழைத்துள்ளார். ஒரு வாரத்திற்குள் எனது முடிவை தெரிவிப்பேன் என்றும் அவர் கூறி இருந்தார்.

எனவே, ராதரவி காங்கிரஸ் கட்சியில் சேருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் திடீர் திருப்பமாக நடிகர் ராதாரவி, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் சந்தித்து, மீண்டும் தன்னை அ.தி.மு.க.வில் இணைத்துக்கொண்டார்.

கருத்துகள் இல்லை: