ஞாயிறு, 31 அக்டோபர், 2010

கேரளா: வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக மாறிய SDPI.

திருவனந்தபுரம்,அக்.30:கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் ஐந்து பஞ்சாயத்து வார்டுகளில் இரண்டாவது இடத்தையும், 47 வார்டுகளில் மூன்றாவது இடத்தையும் பிடித்தது எஸ்.டி.பி.ஐ.எஸ்.டி.பி.ஐ போட்டியிட்ட 114 வார்டுகளில் 63 இடங்களில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கூட்டணிக் கட்சிகளின் வெற்றித் தோல்வியை நிர்ணயித்தது எஸ்.டி.பி.ஐ.

திருவனந்தபுரம் மாநகராட்சியில் போட்டியிட்ட 22 வார்டுகளில் பன்னிரெண்டு வார்டுகளில் எஸ்.டி.பி.ஐ இரு கூட்டணிகளின் வெற்றியைத் தீர்மானிக்கும் நிர்ணாயக சக்தியாக திகழ்ந்தது.
மாவட்ட பஞ்சாயத்திற்கு போட்டியிட்ட எஸ்.டி.பி.ஐ பெண் வேட்பாளர் நாஃபிலா 1362 வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

எஸ்.டி.பி.ஐ போட்டியிட்ட ஐந்து ப்ளாக் டிவிசனில் நான்கில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. திருவனந்தபுரம் மாவட்டத்தில் எஸ்.டி.பி.ஐயை தோற்கடிக்க இடதுசாரி-வலதுசாரி முன்னணிகள் பா.ஜ.கவுடன் கூட்டுச் சேர்ந்து விசித்திரமான கூட்டணியை உருவாக்கியதால் எஸ்.டி.பி.ஐ தோல்வியுறக் காரணமானது என எஸ்.டி.பி.ஐ தலைவர் எ.இப்ராஹீம் குட்டி தேஜஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

எஸ்.டி.பி.ஐயை தோற்கடிக்க சி.பி.எம்-காங்கிரஸ், சி.பி.எம்-பா.ஜ.க, காங்கிரஸ்-பா.ஜ.க என்ற விசித்திரமான கூட்டணி உருவானது. எஸ்.டி.பி.ஐ தோற்கடிக்க ஜமாஅத்தே இஸ்லாமியும் பல இடங்களில் இதரக் கூட்டணிகளுடன் சேர்ந்ததாகவும் இப்ராஹீம் குட்டி தெரிவித்தார். கொல்லம், கண்ணூர், காஸர்கோடு, மலப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் போட்டியிட்ட பல இடங்களிலும் எஸ்.டி.பி.ஐ குறிப்பிடத்தக்க வாக்குகளைப் பெற்று நிர்ணாயக சக்தியாக விளங்கியுள்ளது.

செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்...

கருத்துகள் இல்லை: