திங்கள், 1 நவம்பர், 2010

ராமர் கோயிலை மத்திய அரசே கட்ட வேண்டும் : சிவசேனா!

அயோத்தியில் பிரச்சனைக்குரிய பாபர் மசூதி-ராம் ஜென்பூமி இடத்தில் ராமர் கோயிலை மத்திய அரசே கட்டித் தர வேண்டும் என்று சிவசேனா கோரியுள்ளது.

சோம்நாத் கோயிலைப் போன்று அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்டுவதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்தக் கோயிலில் வழிபாடு நடத்தும் உரிமையை நிர்மோகி அகாராவுக்கு வழங்க வேண்டும். செலவுகளைக் கணக்கிட்டு உரிய அதிகாரிகளை அந்தக் கோயிலுக்கு மத்திய அரசே நியமிக்க வேண்டும் என்று சிவசேனாவின் உத்திரப் பிரதேச மாநிலத் தவைலர் உதய் பாண்டே அயோத்தியில் செய்தியாளர்களிடம் கூறினார்.

அயோத்தியைச் சுற்றி 14 கிலோ மீட்டர் தூரத்திற்கு மசூதி கட்டப்படக் கூடாது என்பதை பாபர் மசூதி - ராமர் கோயில் பிரச்சனையில் பேச்சுவார்த்தையின் மூலம் சுமுக தீர்வு காண முயல்வோர் உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கூறினார்.

அயோத்தியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கோயிலுக்கு வரும் பக்தர்களிடம் இருந்து வசூலிக்கப்பட்ட தொகை குறித்த விவரங்களை விசுவ இந்து பரிஷத் தரவேண்டும் என்று கூறிய பாண்டே, வசூலிக்கப்பட்ட பணத்திற்கு விசுவ இந்து பரிஷத் கணக்கு காட்ட முன்வராதது துரதிருஷ்டவசமானது என்றும் கூறினார்.

கருத்துகள் இல்லை: