புதன், 3 நவம்பர், 2010

ஈரோடு மாவட்ட தி.மு.க. செயலாளராக என்.கே.கே.பி.ராஜா மீண்டும் நியமனம் !

ஈரோடு மாவட்ட தி.மு.க. செயலாளராகவும், கைத்தறித்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்து வந்த என்.கே.கே.பி.ராஜா மீது  நில அபகரிப்பு மற்றும் ஆள்கடத்தல் புகார் எழுந்ததை அடுத்து அமைச்சர், மாவட்டச் செயலாளர் என அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலக்கப்பட்டு அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டார்.

சமீபத்தில் ஆள்கடத்தல் புகாரில் இருந்து ராஜா விடுவிக்கப்பட்டதை அடுத்து தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினராக பின்னர் சேர்க்கப்பட்டார். இந்நிலையில், மீண்டும் ஈரோடு மாவட்டச் செயலாளராக என்.கே.கே.பி.ராஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
இலஞ்சம் வாங்கிய தனது உறவினருக்கு ஆதரவாக பேசிய பூங்கோதை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு பின்னர் மேலிட ஆசியால் மீண்டும் அமைச்சர் பதவி வழங்கப்பட்டதைப் போல என்.கே.கே.பி.ராஜாவும் மீண்டும் மாவட்டச் செயலாளர் பதவியை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: