ஞாயிறு, 5 டிசம்பர், 2010

தஞ்சை வங்கியில்14 கிலோ தங்க நகைகள் திருட்டு!

தஞ்சாவூரை அடுத்த பள்ளியகரம் என்ற கிராமத்தில் உள்ள தனியார் வங்கியிலிருந்து சுமார் 2.5 கோடி ரூபாய் மதிப்புள்ள 14 கிலோ தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக காவல் துறையினர் கூறியுள்ளனர்.

தஞ்சாவூர் பள்ளியகரத்தில் உள்ள கொங்கு வங்கி என்ற அந்தத் தனியார் வங்கியில் இருந்து வெள்ளிக் கிழமை இரவு இச்சம்பவம் நடைபெற்றுள்ளது என்றும் திருடர்கள் வங்கியில் இருந்த பணத்தை எடுக்கவில்லை என்றும் சில நகைகளை மட்டும் எடுக்காமல் விட்டுச் சென்றுள்ளனர் என்றும் காவல் துறையினர் கூறியுள்ளனர்.

சனிக்கிழமை காலையில் வங்கிக்கு வந்த ஊழியர்கள் கொடுத்த தகவலை அடுத்து, அந்த வங்கியின் பங்குதாரர்களில் ஒருவரான துரைசாமி என்பவர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்
.

கருத்துகள் இல்லை: