சனி, 5 மார்ச், 2011

காங்கிரஸ் நெருக்கடி - பாமகவுக்குத் தொகுதிகள் குறைப்பா?

திமுக -   காங்கிரஸ் தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தையில் ஏற்பட்ட இழுபறியைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் குலாம் நபி ஆசாத் சென்னை வந்து பேச்சு வார்த்தை நடத்தினார். இந்த பேச்சு வார்த்தையிலும் சுமூகமான உடன்பாடு எட்டப்படவில்லை. இதனிடையே நேற்று நடைபெறவிருந்த பேச்சுவாரத்தையை ரத்து செய்து விட்டு குலாம் நபி ஆசாத் டெல்லி விரைந்தார்.
தொகுதி எண்ணிக்கை விசயத்தில் காங்கிரஸ் கட்சி பிடிவாதமாக இருந்து வருவதால் கூட்டணி பேச்சுவார்த்தையில் இதுவரை  எந்த முன்னேற்றமும் ஏற்பட வில்லை. ஏற்கனவே பாமக,விடுதலைச் சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கொங்கு நாடு முன்னேற்றக் கலக்கம், மூவேந்தர் முன்னேற்றக் கழகம்  ஆகிய கட்சிகளுக்கு 52 தொகுதிகளை ஒதுக்கி விட்ட நிலையில் மீதமுள்ள 182 தொகுதிகளையே பிரித்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை.
காங்கிரசும் தொகுதி எண்ணிக்கை விசயத்தில் இறங்கி வராத நிலையில்  காங்கிரஸ் கூட்டணியை இழக்க விரும்பாத திமுக 60 தொகுதிகளை விட்டுத் தரத் தயாராக இருப்பதாக திமுக வட்டாரச் செய்திகள் தெரிவிக்கின்றன. காங்கிரசுக்கு 60 தொகுதிகளை ஒதுக்கினால் திமுக 122 தொகுதிகளில் மட்டுமே போட்டிட முடியும். எனவே பாமகவுக்கு வழங்கப் பட்ட தொகுதிகளில் 31 தொகுதிகள் குறையக் கூடும் என்றும் தொகுதிகளை குறைத்துக் கொள்ள பாமக நிறுவனர்  ராமதாஸ் சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் உறுதி செய்யப் படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை: