வெள்ளி, 4 மார்ச், 2011

பார்வையற்ற தமிழ்ப் பெண் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி!

ஐ.ஏ.எஸ். முதன்மைத் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த பார்வையற்ற பெண் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.

திண்டிவனத்தைச் சேர்ந்தவர் ஜெ.சுஜிதா (24). பார்வையற்ற மாணவியான இவர் பி.ஏ. ஆங்கிலம், பி.ஏ. ஹிந்தி பட்டப் படிப்புகளை படித்துள்ளார். இவருடைய தந்தை நகைக் கடை உரிமையாளர்.

பட்டப் படிப்புகளை வெற்றிகரமாக மேற்கொள்ள சுஜிதாவுக்கு தொடர்ந்து ஊக்கமளித்து வந்த அவருடைய தாய், ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதவும் ஊக்கமளித்துள்ளார்.

இதனால் இந்திய குடிமைப் பணிகளில் ஆர்வம் ஏற்பட்டு, பயிற்சிக்காக சுஜிதா சென்னை வந்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள "எக்ùஸல் கேரியர் இந்தியா' பயிற்சி மையத்தில் சேர்ந்து தீவிர பயிற்சி மேற்கொண்ட அவர், முதல் முயற்சியிலேயே ஐ.ஏ.எஸ். முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார். அதன் பிறகு, முதன்மைத் தேர்வுக்காக மனிதநேயம் ஐ.ஏ.எஸ். இலவச கல்வியகத்தில் பயிற்சி மேற்கொண்டு, அதிலும் இப்போது தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்.

தனது முயற்சி குறித்து சுஜிதா கூறியதாவது: தாயின் தொடர் ஊக்குவிப்பே என்னுடைய தொடர் வெற்றிக்கு காரணம். பயிற்சி மையங்களில் மற்றவர்களைப் போலவே பயிற்சிகளை மேற்கொள்வேன்.

ஆனால், பார்வையற்றவர்களுக்கென பிரத்தியேகமாக உருவாக்கப்பட்டுள்ள ஆடியோ பாடங்கள் தொடர்பாக வீட்டில் கம்ப்யூட்டர் மூலம் தீவிர பயிற்சி மேற்கொண்டேன்.

ஆர்வமும், தன்னம்பிக்கையும் இருந்தால் தேர்வில் நிச்சயம் வெற்றி பெறலாம். நாள் ஒன்றுக்கு 8 மணி நேரம் முதல் 10 மணி நேரம் வரை பயிற்சிகளை மேற்கொண்டேன்.

நேர்முகத் தேர்விலும் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்றார்.

கருத்துகள் இல்லை: