வெள்ளி, 4 மார்ச், 2011

பாபர் மசூதி இடிப்பு வழக்கு: அத்வானிக்கு நோட்டீஸ்!

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி பால் தாக்ரேவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பாபர் மசூதியை இடிக்க சதி செய்ததாக அத்வானி உள்ளிட்ட 19 பேர் மீது சிபிஐ குற்றம்சாட்டியது. ஆனால் 2001 ல் சிபிஐ முறையீட்டை ரேபரேலி நீதிமன்றம் நிராகரித்தது. இதனையடுத்து இந்த குற்றச்சாட்டு ஐகோர்ட்டிலும் தள்ளுபடியானது. இந்நிலையில் இதுகுறித்து சிபிஐ உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. சிபிஐ முறையீட்டை ஏற்று அத்வானி, தாக்கரே மற்றும் உமா பாரதிக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் வழங்கியுள்ளது.

கருத்துகள் இல்லை: