வியாழன், 3 மார்ச், 2011

மேற்கு நாடுகள் தலையிட்டால் லிபியாவில் ரத்த ஆறு ஓடும்; கடாபி எச்சரிக்கை

லிபியாவில் அரசுக்கு எதிராக போராடும் மக்கள் மீது ராணுவ தாக்குதல் நடத்துவதால் ஐ.நா. சபை அதிபர் கடாபிக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளது. இதே போல அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளும் எச்சரித்து உள்ளன.
பொதுமக்கள் மீது குண்டு வீசும் விமானங்களை சுட்டு வீழ்த்துவோம் என்று இங்கிலாந்து எச்சரித்தது.
அமெரிக்கா லிபியாவில் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் 2 விமானம் தாங்கி போர் கப்பல்களை லிபியாவை சுற்றி நிறுத்தி உள்ளது. இதனால் அதிபர் கடாபி கடும் கோபம் அடைந்துள்ளார்.
மேற்கு நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்து உள்ளார். அவர் கூறியதாவது:-
லிபியாவில் நடக்கும் பிரச்சினைகள் குறித்து ஐ.நா.சபைக்கு தவறான தகவல்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. எனவே லிபியாவுக்கு எதிராக ஐ.நா. நடந்து கொள்கிறது. ஐ.நா. சபையோ அல்லது மேற்கு நாடுகளோ லிபியா விவகாரத்தில் தலையிட்டால் நிலைமை விபரீதமாகி விடும்.
அவர்கள் எங்கள் மண்ணுக்குள் கால் வைத்தால் லிபியாவில் ரத்த ஆறு ஓடும். எங்களுக்கு எதிராக இருக்கும் கடைசி மனிதரையும் கொல்வோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

கருத்துகள் இல்லை: