வியாழன், 3 மார்ச், 2011

தேசிய கட்சிக்கு வந்த சோதனை !

தேர்தல் தேர்தல் தேர்தல் இதுல என்ன அப்படி இருக்கு ?

தமிழகத்தை ஆன்ட ஜெயலலிதா ஒரு பக்கம் , ஆளும் கருணாநிதி ஒரு பக்கம் ,ஆழ வழி தேடும் விஜயகாந்த் ஒரு பக்கம் ,கொள்கையே இல்லாத ப ம க ஒரு பக்கம்,விடுதலை சிறுத்தை,கம்யுனிஸ்ட்டுகள் ஒரு பக்கம் இதை எல்லாம் தாண்டி நாங்கள் தான் தேசிய கட்சி என்று மார்தட்டும் காங்கிரஸ் ஒரு பக்கம் இதை நினைத்தாலே சிரிப்புதான் வரும்.

அதோடு மட்டும் இல்லை ஒவ்வொரு மதமும் அவரவர்களின் எண்ணிக்கைக்கு அதிகமாகவே சமுதாய அமைப்புக்களையும் கட்சியையும் ஒரு பக்கம் வைத்து அட்டை பூச்சியை போல ஒட்டிக்கொள்ள இடம் தேடும் காட்சியும் இங்கே அரங்கேறும் .

அதற்க்கு ஒரு படி மேலே சென்று நமது இஸ்லாமிய சமுதாய கட்சிகளும் மற்றும் அமைப்புக்களின் வீர வசனமும் ,வாய் சவடாலும் ,நாங்கள் அதை செய்வோம் ,இதை செய்வோம் என்று சொல்லும் காட்சியும் அவ்வப்போது அரங்கேரியும் கொண்டு இருக்கும் .

இதன் தொடர்கள் எல்லாம் முடிவுக்கு வர தேர்தலும் படு விமர்சையாக ஜனநாயகத்தை குழி தோண்டி புதைத்து விட்டு ராணுவம் ,காவலர்கள் ,அதிகாரிகள் என்று அணி வகுக்க பணனாயகத்தின் உச்சிக்கு சென்று நடப்பது தான் இன்றைய இந்திய தேர்தல் .

ஆனால் இதிலே இந்த முறை பெரிய குழப்பம் தான் நேருகிறது நாட்டை ஆளும் தேசிய கட்சிக்கு .

தேர்தலுக்கு தயாரான பெரிய கட்சிகள் எல்லாம் மவுனமாக இருக்க லட்டர் பேடுகளையும் குறைந்த அளவு மக்களையும் வைத்துக்கொண்டு இருக்கும் ஒரு சில கட்சிகளின் ஆராவாரம் இந்த நாடே தாங்காத அளவிற்கு இருக்கும் .அதே போல தான் இப்பவும் இருந்தது ஒரு வகையாக எல்லா சிறிய கட்சிகளையும் சரி செய்த திராவிட கட்சிகள் இன்னும் கூட்டணி முழுமை பெறாமல் தொங்கு பாலம் போல தொங்கும் காட்சியே இன்னும் நிலவுகிறது .

தி மு க கூட்டணியை பொறுத்தவரை தனக்கு சிறுபான்மையாக செயல் படும் முஸ்லிம் லீக் ,விடுதலை சிறுத்தை,கொள்கையை பற்றி கவலை படாத ப ம க ,விடுதலை சிறுத்தை மற்றும் நண்டு குஞ்சு என்று தங்களை தாங்களே புகழ்ந்துக்கொள்ளும் சிறு சிறு கட்சிகள் இன்னும் லட்டர் பேடுகளை எல்லாம் சரி செய்து விட்ட நிலையில்........

அ தி மு க கூட்டணியை பார்த்தோம் என்றால் இரண்டு கம்யுனிஸ்ட் ,அதை போன்று அவருக்கு கொள்கை பரப்பியாக இருக்கும் ம தி மு க , அரசியல் சாக்கடையை சுத்தம் செய்ய புறப்பட்ட ம ம க ,மற்றும் சிறிய சிறிய லட்டர் பேடுகள் போன்றவற்றை சேர்ந்த ஒரு கூட்டணி

எதற்கும் பிடி கொடுக்காமல் பேசிக்கொண்டு இருக்கும் விஜயகாந்த் ,
ஐவர் குழுவை வைத்து இரண்டு முறை பேசிப்பார்த்த காங்கிரஸ் இப்போ ஆசாத்தையும் அனுப்பி பேசிப்பார்க்க உங்களுடைய பேச்சுக்கள் எல்லாம் டெல்லியிலே மட்டும் தான் நான்தான் இங்கே அரசியல் சிங்கம் என்று கொடுப்பதை வாங்கிக்கொள்ளுங்கள் மத்ததை எல்லாம் தேர்தலுக்கு பிறகு பேசிக்கொள்ளலாம் என்று பேசும் கருணாநிதியில் பேச்சால் ஆடிப்போன ஆசாத் தனது விமான பயணத்தை விரைவாக வைத்து டெல்லி சென்றது தேசிய கட்சி .

இப்போ எந்த கூட்டணியில் நாம் சேரப்போகிறோம் என்று தெரியாமல் கேப்டனும் , எந்த கட்சி நம்மை சேர்த்துக்கொள்ளும் என்ற புலம்பலில் காங்கிரசும் இன்றைக்கு ஒரு முடிவிற்கு வராமலேயே எல்லா கட்சிகளையையும் நிமிர்ந்து பார்க்க வைத்துக்கொண்டு பூச்சாண்டி வேலைகளை செய்துக்கொண்டு வருகிறது.

மக்களின் எதிர்பார்ப்பு இருக்கும் கூட்டணி அப்படியே தொடருமா அல்லது பேசிய கூட்டணியில் மாற்றம் ஏற்படுமா ?
இல்லை மூணாவது அணி அமையுமா என்ற கேள்வியை தன்னை தானே கேட்டுக்கொண்டு முனுமுனுப்பது எல்லோரின் காதுலயும் விழ ஆரம்பிக்கிறது.

ஆறாவது முறையாக கருணாநிதி தான் முதல்வர் என்றும் ,

இந்த முறை ஜெயலலிதாதான் முதல்வர் என்றும் மாறி மாறி பேசிக்கொள்ளும் மக்கள் மாற்று ஆட்சி வருமா என்று எதிர் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் .இதற்க்கான முடிவை காங்கிரஸ் எப்போது வெளி இடும் என்ற எண்ணத்தில் மக்கள் எல்லாம் கண் விளித்து காத்துக்கொண்டு இருப்பதையும் நாம் அறியலாம் .

இதற்க்கு காலம் பதில் சொல்லுமா காங்கிரஸ் பதில் சொல்லுமா இல்லை இதற்க்கு மக்களாகியா நாங்கள் தான் பதில் சொல்ல முடியும் என்று மக்கள் தான் சொல்ல வேண்டுமா பொறுத்து இருந்து பார்ப்போம் .

கருத்துகள் இல்லை: