வெள்ளி, 22 அக்டோபர், 2010

காமன் வெல்த் போட்டியில் ரூ.8000 கோடி ஊழல்!

இந்தியாவையே அதிர வைத்துள்ள ரூ. 8000 கோடி காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஊழல் தொடர்பாக அமைச்சர்கள் எம்எஸ்கில் மற்றும் ஜெய்பால் ரெட்டி மத்திய அமைச்சரவையிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது.
சமீபத்தில் நடந்து முடிந்த காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் தொடர்பான ஏற்பாடுகளில் பெரும் அலட்சியம் காட்டியதாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் எம்.எஸ்.கில் மீது பிரதமர் மன்மோகன்சிங் கடும் கோபத்தில் உள்ளார். மேலும் போட்டி ஏற்பாடுகளை விரைந்து செய்ய அவருக்கு உதவவில்லை என்று ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஜெய்பால்ரெட்டி மீதும் பிரதமருக்கு கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இதுவரை ரூ 8000 கோடிக்கு பயங்கர ஊழல் நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. ஊழல் குறித்த முழு விவரமும் வெளியாகும்போது அவர்கள் இருவரின் பதவியும் பறிக்கப்படலாம் என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன....

கருத்துகள் இல்லை: