புதன், 27 அக்டோபர், 2010

காஷ்மீர் விவகாரம் - பாஜகவிற்கு எதிராக ஜெத்மலானி கருத்து !

புது டில்லி:காஷ்மீர் விவகாரம் குறித்து  மூத்த வழக்கறிஞரும், பாஜகவின் ராஜ்யசபா உறுப்பினருமான ராம் ஜெத்மலானியின் கருத்தால் பாஜகவிற்கு தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
காஷ்மீர் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கத்தில் மத்திய அரசு மூன்று நடுநிலையாளர்களை நியமித்துள்ளது. அந்த உறுப்பினர்களில் ஒருவரான திலீப் பட்கோன்கார், பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் பாகிஸ்தானின பங்கும் இருக்க வேண்டும் என்ற கருத்திற்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.  பாஜகவின் இக்கருத்திற்கு எதிராக பேசிய ராம் ஜெத்மலானி, திலீப் கூறியது சரியே என்றும், நிரந்தர அமைதிக்கு பாகிஸ்தானின் பங்கும் அவசியம் என்பதை 1972 ஆண்டின் சிம்லா ஒப்பந்தம் வகை செய்கிறது என கூறியுள்ளார்.
இதற்கு பதிலளித்த பாஜக பேச்சாளர், ராம் ஜெத்மலானி கூறியிருப்பது அவரின் சொந்த கருத்தும் என்றும், கட்சிக்கும் அந்த கருத்துகும் சம்மதம் இல்லை என்றார். எனினும் மூத்த தலைவர் ஒருவரே கட்சிக்கு எதிராக முக்கியமாக விஷயத்தில் கருத்து தெரிவித்துள்ளது தேசிய அளவில் கட்சிக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: