ஞாயிறு, 31 அக்டோபர், 2010

இந்தியா- சீனா இடையேயான உறவை பலப்படுத்த உறுதி: பிரதமர் மன்மோகன் சிங் பேட்டி!

இந்தியா- சீனா இடையேயான உறவை பலப்படுத்த உறுதி: பிரதமர் மன்மோகன் சிங் பேட்டிஜப்பான், மலேசியா, வியட்நாம் ஆகிய 3 நாடுகளில் ஒரு வார கால சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மன்மோகன் சிங் நேற்று டெல்லி திரும்பினார்.

தன்னுடன் விமானத்தில் வந்த நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

பாகிஸ்தானுடனான பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவே இந்தியா விரும்புகிறது. ஆனால் எப்போது பேச்சுவார்த்தை தொடங்கும் என்று என்னால் சொல்ல முடியாது.

சீனாவுடனான பிரச்சினைகள் குறித்து அந்த நாட்டின் பிரதமர் வென் ஜியாபோவுடன் பேசினேன்.

இரு நாடுகளுக்கும் இடையேயான எல்லை பிரச்சினைக்கு நியாயமான வழியில் இரு தரப்புக்கும் திருப்தி அளிக்கும் வகையில் தீர்வு காண்பது என்றும், அவநம்பிக்கைகளை போக்கி பரஸ்பர உறவை பலப்படுத்துவது என்றும் தீர்மானித்து இருக்கிறோம்.

இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.

கருத்துகள் இல்லை: