ஞாயிறு, 24 அக்டோபர், 2010

மும்பையில் விமானங்கள் மோதல்! பயணிகள் மயிரிழையில் உயிர் தப்பினர்!!

மும்பை ‌விமான ‌நிலைய‌த்‌தி‌ல் இர‌ண்டு ‌தனியார் விமான‌ங்க‌ள் ஒ‌ன்றோடு ஒ‌ன்று மோ‌தி‌க் கொ‌ண்ட ‌நிக‌ழ்‌வில் 100க்கும் அதிகமான பயணிகள் மயிரிழையில் உயிர்தப்பிய சம்பவம் அங்கு பரபர‌ப்பை ஏ‌ற்படு‌த்‌‌தியு‌ள்ளது.

‌மும்பையில் உள்நாட்டு முனையத்தில் கி‌ங்‌பிஷ‌ர் ‌நிறுவன‌த்‌தி‌ற்கு சொ‌ந்தமான ‌விமான‌ம் ஒ‌ன்று ‌விமான ‌நிலைய‌த்‌தி‌ல் சர‌க்குகளை இற‌க்‌கி‌க் கொ‌ண்டிரு‌ந்தது. அப்போது மு‌ம்பை‌யி‌ல் இரு‌ந்து ம‌ஸ்க‌ட் செ‌ல்லு‌ம் ஜெ‌ட் ஏ‌ர்வே‌‌‌ஸ் ‌விமான‌ம் ஒ‌ன்று ‌கி‌ங்‌ஃபிஷ‌ர் ‌விமான‌ம் ‌நி‌ன்று கொ‌ண்டிரு‌ந்த தட‌த்தி‌ல் மஸ்கெட் புற‌ப்பட தயாரா‌கி ஓடுபாதையில் வேகமாக வந்து கொ‌ண்டிரு‌ந்தது.

அ‌ப்போது ‌ ஓடுபாதையி‌ல் கிங்ஃபிஷரின் பி‌ன்‌புறமாக வ‌ந்த ஜெ‌‌ட் ஏ‌ர்வே‌ஸ் ‌விமான‌த்‌தி‌ன் இற‌க்கைக‌ள் ‌நி‌ன்று கொ‌ண்டி‌ரு‌ந்த கிங்ஃபிஷர் சர‌க்கு ‌விமான‌த்‌தி‌ன் ‌பி‌ன்புற‌ம் உர‌சி உ‌ள்ளது. இதனா‌ல் இர‌ண்டு ‌விமான‌ங்களு‌ம் பய‌ங்கர ச‌த்த‌த்துட‌ன் அ‌தி‌ர்‌ந்து‌ள்ளது. ஜெ‌‌ட் ஏ‌ர்வே‌ஸ் ‌‌விமான‌ம் ‌கி‌ங்ஃ‌பிஷ‌ர் ‌விமான‌த்துட‌ன் இடித்த ‌சி‌றிது நேர‌த்‌தி‌லேயே ‌நிறு‌த்த‌ப்‌ப‌ட்டதா‌ல் பெ‌ரிய அள‌வி‌ல் ‌நிகழவிரு‌ந்த விபத்து த‌வி‌ர்‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.

மேலு‌ம் ஜெ‌ட் ஏ‌ர்வே‌ஸ் ‌விமான‌த்‌தி‌‌‌‌ன் இற‌க்கைக‌ள் இலேசாக சேத‌ம் அடை‌ந்து‌ள்ளது. ‌உடனடியாக ஜெ‌ர் ஏ‌ர்வே‌ஸ் விமான‌த்‌தி‌ற்கு‌ள் இருந்த சுமா‌ர் 100 பய‌ணிக‌ள் மற்றும் விமான ஊழியர்கள் அனைவரும் பாதுகா‌ப்பாக ‌‌கீழே இற‌க்க‌ப்ப‌ட்டன‌ர். இச்சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள் இல்லை: