புதன், 20 அக்டோபர், 2010

எங்கே சுதந்திரம்? யாருக்கு சுதந்திரம்?

இந்திய திரு நாடு சுதந்திரம் 1947 இல் பெற்றதாக நம்பப்படுகிறது.ஆனால் யாருக்கு எங்கே சுதந்திரம் என்பது இப்போ கேள்வி குறியாக இருக்கிறது.நாம் வாழும் இந்திய தேசம் ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் என ஆகிக்கொண்டு இருக்கும் சூழலில் போய்கொண்டு இருக்கும் தேசமாக சுதந்திரம் பெற்ற 63 ஆண்டுகள் கடந்த நிலையிலும் இங்கு வாழும் நம் இஸ்லாமிய சமுதாயம் சுதந்திரமாக இருக்கிறதா என்ற பல கேள்விகளை உருவாக்கும் நிலைமையில் நாம் இன்று இருக்கிறோம்..நம்மை அளிக்க வேண்டும் என துடி துடித்துக்கொண்டு இருக்கின்ற ஹிந்துத்துவாக்களின் நடுவே நாம் இன்றைய நிலையில் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறோம்..ஆனால் இந்திய அளவில் இருக்கும் இஸ்லாமிய அமைப்புக்களின் நிலையோ இன்றைக்கு யார் பெரியவர் யார் எந்த இஸ்லாமிய அமைப்பை அழிக்கலாம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு இருக்கும் நிலையை நாம் பரவலாக பார்க்கமுடிகிறது..அதிலே தமிழ்நாட்டில் மிகவும் மும்முரமாக செயல் படுவதைபோல் நாம் அண்மைய காலமாக பார்த்து வருகிறோம்.அதன் வரிசையிலே தான் தமிழகத்தில் இருக்கும் சில அமைப்புகள் இன்று மக்கள் மத்தியிலே மிகவும் கேவலமாக நடந்துக்கொள்ளும் விதத்தை நாம் பார்த்து வருகிறோம். இதனால் யாருக்கு என்ன பயன் ? இன்று நம்மை அளிக்க நினைக்கும் ஹிந்துத்துவாக்களை நாம் குறை சொல்வதோடு நம்மில் இருக்கும் சமுதா அமைப்புகளின் தலைவர்கள் இதற்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக தமிழகத்தில் இருக்கும் தங்களின் உறுப்பினர்களை கட்டுபடுத்துவார்கள் என இந்த சமுதாய மக்களின் வினா வாக பரவலாக இருக்கிறது.அதே சமயம் சமுதாய தலைவர்கள் செய்யும் தவறையும் தாங்களே திருத்திக்கொள்ளவும் தாங்கள் முயற்சிக்கும் நோக்கம் வரவேண்டும் என்பதும் மக்களின் அவா.....இதை நடத்துவார்களா?

கருத்துகள் இல்லை: