ஞாயிறு, 31 அக்டோபர், 2010

தனியார் பள்ளி கட்டண நிர்ணயக் குழுத் தலைவராக ரவி ராஜ பாண்டியன் நியமனம்!

தனியார் பள்ளி கட்ட நிர்ணயக் குழுவின் புதிய தலைவராக ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி ரவி ராஜ பாண்டியனை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள தனியார் பள்ளிகளின் கட்டணத்தை முறைபடுத்த கடந்த மே மாதம் நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் ஒரு குழு அமைக்கப் பட்டது. அந்த குழு வெளியிட்ட கட்டண நிர்ணயத்தின் படியே தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்ட நிலையில் தனியார் பள்ளிகள் அந்த உத்தரவை மதிக்காமல் கட்டணங்களை அதிகமாக வசூல் செய்து வருகின்றன.

இந்நிலையில் இது குறித்த வழக்கு உயர்நீதி மன்றத்தில்  விசாரணைக்கு வந்த போது மேல்முறையீடு செய்த 6400 பள்ளிகளை மீண்டும் ஆய்வு செய்து 4 மாதங்களுக்குள் முடிவு எடுக்க நீதிபதிகள் அரசை கேட்டுக்   கொண்டனர். பெற்றோர்களின் தொடர் போராட்டம் காரணமாக தனியார் பள்ளிகளின் கட்டண விவரம் அரசு இணைய  தளத்தில் வெளியிடப் பட்டது.

கட்டண விவரம் வெளியிடப் பட்ட அடுத்த நாளே நீதிபதி கோவிந்தராஜன் தன் உடல்நிலை காரணமாக குழுத் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாகத் தெரிவித்தார். கோவிந்தராஜனின் ராஜினாமா குறித்த செய்திகளை தமிழக அரசு இது நாள் வரை மறுக்கவோ ராஜினாமாவை ஏற்றுக் கொண்டதாகவோ தேர்விக்காத நிலையில் ஓய்வு பெற்ற முன்னாள் நீதிபதி ரவி ராஜ பாண்டியனை கட்டண நிர்ணயக் குழு தலைவராக நியமித்து இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

கருத்துகள் இல்லை: