செவ்வாய், 9 நவம்பர், 2010

கோவையில் 2 குழந்தைகளை கடத்தி கொடூரமாக கொன்ற கொலையாளி என்கவுன்டரில் சுட்டுக் கொலை

 

Tamil news paper, Tamil daily news paper, Tamil news, Tamil movie news, Tamil news paper online, political news, business news, financial news, sports news, today news, India news, world news, daily news update
கோவை: கோவையில் பள்ளி குழந்தைகள் முஸ்கான், ரித்திக்கை கடத்தி சென்று கால்வாயில் தள்ளி கொலை செய்த வேன் டிரைவர் மோகன்ராஜ் இன்று காலை சுட்டுக் கொல்லப்பட்டார். விசாரணைக்காக வேனில் அழைத்து சென்றபோது, எஸ்.ஐ.க்களை சுட்டுவிட்டு தப்ப முயன்றபோது போலீசார் நடத்திய என்கவுன்டரில் மோகன்ராஜ் பலியானார். கோவை ரங்கே கவுடர் வீதியில் துணிக்கடை நடத்தி வருபவர் ரஞ்சித். இவரது மகள் முஸ்கான்(11), மகன் ரித்திக்(8). காந்திபுரம் சுகுணா ரிப்வி மெட்ரிக் பள்ளியில் முஸ்கான் 5ம் வகுப்பும், ரித்திக் 3ம் வகுப்பும் படித்து வந்தனர். தினசரி மாருதி வேனில் பள்ளிக்கு செல்வது வழக்கம். கடந்த 29ம் தேதி (வெள்ளி) காலை டிரைவர் மோகன்ராஜ் வேனில் முஸ்கானையும், ரித்திக்கையும் அழைத்து சென்றார்.

பள்ளிக்கு செல்லாமல், குழந்தைகளின் தந்தை ரஞ்சித்திடம் பணம் பறிக்கும் நோக்கத்துடன் இருவரையும் கடத்தி சென்றார். பொள்ளாச்சி அங்கலகுறிச்சியில் உள்ள தனது நண்பன் மனோகரனையும் அழைத்துக்கொண்டு உடுமலையில் இருந்து 12 கிமீ தொலைவில் உள்ள சர்க்கார்புதூர் பிஏபி வாய்க்கால் பகுதிக்கு சென்றனர். ரஞ்சித்துடன் போனில் பேச முயன்றுள்ளனர். ஆனால் தொடர்பு கொள்ள முடிய வில்லை. பின்னர் சர்க்கார்புதூர் பிஏபி வாய்க்கால் பாலத்தில் இருந்து முஸ்கானையும், ரித்திக்கையும் வாய்க்காலில் தள்ளி கொலை செய்தனர். வெரைட்டிஹால் ரோடு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். குழந்தைகளின் பாட்டி கமலாபாய் தெரிவித்த தகவலின் அடிப்படையில்  டிரைவர் மோகன்ராஜையும், கூட்டாளி மனோகரனையும் போலீசார் கைது செய்தனர். இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டனர்.

பிரேதப் பரிசோதனையில் சிறுமி முஸ்கான் பலாத்காரம் செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. மோகன்ராஜையும், மனோகரனையும் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கேட்டு, கோவை 5வது ஜுடீசியல் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் போலீசார் நேற்று மனு செய்தனர். 2 பேரும் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை மூன்று நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிபதி கோபிநாத் அனுமதி வழங்கினார். 11ம்தேதி மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். இதையடுத்து மோகன்ராஜும், மனோகரனும் நேற்று இரவு 7 மணிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். இரவு முழுவதும் அவர்களிடம் விசாரணை நடந்தது. உதவி கமிஷனர் குமாரசாமி தலைமையிலான தனிப்படையினர் விசாரணை நடத்தினர்.

குழந்தைகள் கொலை செய்யப்பட்ட உடுமலை சர்க்கார்புதூருக்கு 2 பேரையும் அடையாளம் காட்டச் சொல்வதற்காக அழைத்து செல்ல  போலீசார் முடிவு செய்தனர். அதன்படி இன்று காலை 5 மணிக்கு மோகன்ராஜ் ஒரு வேனிலும், மனோகரன் ஒரு வேனிலும் அழைத்து செல்லப்பட்டனர். மனோகரன் சென்ற வேன் முதலில் சென்றது. பின்னால் சென்ற வேனில் மோகன்ராஜுடன், இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, எஸ்ஐக்கள் முத்துமாலை, ஜோதி ஆகியோர் இருந்தனர். வேனை டிரைவர் ஏட்டு அண்ணாதுரை ஓட்டினார்.
பொள்ளாச்சி ரோட்டில் ஈச்சனாரி ரயில்வே கேட் மூடப்பட்டிருந்தால், மாற்றுப்பாதையாக வெள்ளலூர் வழியாக அழைத்து சென்றனர். காலை 5.30 மணிக்கு வெள்ளலூர் குப்பை கிடங்கு அருகே சென்றபோது, மோகன்ராஜ் திடீரென எஸ்ஐ முத்துமாலை இடுப்பில் வைத்திருந்த ரிவால்வரை சடாரென உருவி, ‘வேனை திருப்புடா’ என டிரைவரிடம் கூறினான். எஸ்ஐ முத்துமாலை துப்பாக்கியை பறிக்க முயன்றபோது அவரை மோகன்ராஜ் துப்பாக்கியால் சுட்டான். அவரது இடுப்பில் குண்டு பாய்ந்தது. தடுத்த எஸ்ஐ ஜோதியையும் சுட்டான். அவருக்கு இடது கையில் குண்டு பாய்ந்தது. இருவரும் மயங்கி கீழே சாய்ந்தனர்.

உடனடியாக சுதாரித்துக் கொண்ட இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை தனது துப்பாக்கியால் மோகன்ராஜை சுட்டார். இதில் தலையில் கண் அருகே 2 குண்டும், மார்பில் ஒரு குண்டும் பாய்ந்தது. அதே இடத்தில் மோகன்ராஜ் சுருண்டு விழுந்து இறந்தார். உடனடியாக உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதே வேனில் மோகன்ராஜ் சடலம் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. காயமடைந்த எஸ்ஐக்கள் முத்துமாலையும், ஜோதியும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு ஆபரேஷன் நடந்தது. பள்ளி குழந்தைகளை கடத்தி கொலை செய்த மோகன்ராஜ், சுட்டுக் கொல்லப்பட்டது கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை: