ஞாயிறு, 7 நவம்பர், 2010

வங்க கடலில் புயல் சின்னம்: புதுவை பகுதியில் கடல் சீற்றம்- அரிப்பு

வங்க கடலில் புயல் சின்னம்:
 
 புதுவை பகுதியில் 
 
 கடல் சீற்றம்- அரிப்புவங்ககடலில் சென்னைக்கு கிழக்கே 900 கி.மீ. தூரத்தில் புதிய புயல் சின்னம் உருவாகி உள்ளது. அது புதுவை- நெல்லூர் இடையே கடற்கரையை கடக்க கூடும் என வானிலை எச்சரித்து உள்ளது.
 
அப்போது காற்று பலமாக வீசக்கூடும் என்பதால் கடற்கரை பகுதி உஷார் படுத்தபப்ட்டு உள்ளது.
 
கடலூர் பகுதியில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படுகிறது. இதனால் கடலூர் துறைமுகத்தில் 3-வது எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு உள்ளது.
 
புயல் சினம் காராணமாக புதுவை கடலோரப்குதியில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
 
சின்னமுதலியார்சாவடி, கோட்டக்குப்பம், பொம்மையார் பாளையம், குயிலாப்பாளையம், கோட்டக்குப்பம் பகுதியில் கடல் சீற்றம் அதிகம் உள்ளது. இதனால் இன்று மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
கடல் சீற்றம் காரணமாக சின்னமுதலியார் சாவடியில் கடல் அரிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் தென்னை மரங்கள் வேரோடு கீழே சாய்ந்து விழுந்தன. பேரலை மேலெழும்பி கடற்கரையை முட்டி மோதுகின்றன. எனவேதங்களது படகுகளை பாதுகாப்பான இடத்துக்கு இழுத்து வைத்து உள்ளனர்.

                                                                            

கருத்துகள் இல்லை: