திங்கள், 1 நவம்பர், 2010

தமிழ்நாட்டு இஸ்லாமிய சமுதாய தலைவர்கள்!

தமிழ்நாட்டு இஸ்லாமிய சமுதாய தலைவர்கள்,அவர்களின் பின்னால் வழி நடக்கும் அணைத்து சகோதரர்கள்,பல்வேறு அமைப்பில் உள்ள உறுப்பினர்கள் மற்றும் மாஜி உறுப்பினர்கள்,சமுதாய  நலன்களில் அக்கறை எடுத்துக்கொண்டு எந்த அமைப்பிலும் சேராமல் சமுதாய பணிகளை செவ்வன செய்துகொண்டு இருக்கும் அணைத்து நண்பர்கள்,வெளி நாடு வாழ் தமிழ் முஸ்லிம்  அனைவருக்கும் எனது அஸ்ஸலாமு அழைக்கும்..
நாம்  கடந்த காலங்களை புரட்டி பார்க்கும் ஒரு சூழ்நிலையிலும் நிகழ் காலம் எப்படி இருக்கின்றது என்ற சூலிலும் நாம் இருந்துக்கொண்டு இருக்கிறோம். கடந்த கால காயிதே மில்லதும், பழனிபாபா போன்றவர்கள் நம்முடைய இஸ்லாம் சமுதாயத்திற்கு எந்த அளவிற்கு பாதுகாப்பான ஒரு தலைவர்களாக இருந்தார்கள் என்பதை நாம் பலவகையில் கேள்வி படும்போது மெய் சிலிர்க்க வைக்கிறது.அப்படி இருந்த ஒரு சமுதாயமா இன்றைக்கு இந்த அளவிற்கு இருக்கின்றது என்பதனை நினைத்தால் வெட்கப்பட வேண்டிய சூழலுக்கு நம்மை கொண்டு சென்று விட்டது..கடந்த 1990 களில் தமிழகத்தின் நிலை என்ன? அதன் பின் 1992  நாம் எப்படி பட்ட ஒரு மோசமான நிகழ்வுகளை சந்தித்தோம் என்பதனையும் நாம் மறந்து  விட கூடாது..அதன் பின் நாம் அடி எடுத்து வைத்த ஒவ்வொரு அடியும் நமக்கு வெற்றிபடிகலாகவே திகழ்ந்தது ..நம்முடைய சமுதாயத்திற்கு கேட்க இனி முஸ்லிம் லீக்கினால் எந்த ஒரு பலனும் கிடைக்காது என்ற சூழல் வந்த நேரத்தில் தான்..அல்லாஹ்வின் கருணையால் பல நற்காரியங்களை செய்துகொண்டு பிற கட்சியில் பொருளாளராக இருந்த குணங்குடி ஹனீபா பதிவு செய்து இருந்த த மு மு க வை புத்துயிர் ஊட்டும் விதமாக 1995 திருவாரூர் மாவட்டம் என நினைக்கிறேன் அங்கே நடந்த சந்திப்பு தான் முதல் சந்திப்பு அந்த சந்திப்பிலே பிஜே, ஜவாஹிருல்லா, ஹைதர் அலி,பாக்கர்,அலாவுதீன்,அப்துல் ஜலீல் ,போன்றவர்கள் ஒன்று கூடி நம்முடைய சமுதாயத்திற்கு ஒரு வழி காட்ட கூடிய இயக்கமாக நாம் த மு மு க வை வழிநடத்தவேண்டும் என்பதோடு பிறகு சென்னையிலே பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து வீதிக்கு வந்து போராட கூடிய ஒரே இயக்கம் த மு மு க என்ற நிலைமையில் அவர்களின் பின்னால் பல ஊர்களில் அண்ணன்,தம்பி,தாய்,தந்தை,ஜமாஅத் நிர்வாகி ஆகியோரின் எதிர்ப்பையும் கடந்து எப்படியும் இந்த இயக்கத்தை வெற்றி அடைய நாமும் உறுதுணையாக இருக்க வேண்டும் என்று தமிழகத்தில் பரவலாக பல வூர்களில் இருந்து செயல்பட்டு ,ஆட்சியாளர்கள்,அடக்கு முறைகள் என்று பல துன்பங்களிலும் போராடி வெற்றி கண்ட இயக்கமாக வளர்ந்தோம்,வளர்த்தோம்  ஆட்சியாளர்கள் வியக்கும் அளவிற்கு அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையால்  இருந்த த மு மு க வை ஒரு சில ஆட்சியாளர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்ந்த ஒரு சிலர்களின் சுயநலத்திற்காக கூறு போட நினைத்து திருச்சியிலே நடந்த மாநில செயற்குழு நம்மை இரண்டாக்கியது ஆளுக்கொரு இயக்கம் கண்டோம் .ஒவ்வொரு ஊரிலும் இருந்த சிலர்களில் பகை உணர்வு கலந்த பிரிவினையை ஏற்படுத்தியது.பின்பு நம்மின் தொப்புள் கொடி உறவுகளான மாற்று மத சகோதரர்கள் நம்மை பாத்து கிண்டல் அடிக்கும் நிலைமைக்கு சில நேரங்களில் தள்ளப்பட்டாலும் நம்முடைய தைரியத்தையும்,தன்னம்பிக்கையும் நாம் இழக்காமல் இன்று வரை அனைத்து இஸ்லாமிய இயக்கமும் அவரவர் தலைவர்களின் ஆணோசனைகளின் படி செயல்பட்டுக்கொண்டு தான் இருக்கிறது ஆனால் நாம் இந்த சமுதாயம் செய்யும் அணைத்து நற்காரியங்களிலும் ஒன்றிணைத்து செயல் பாடவும் அணைத்து அமைப்பும் ஒன்றிணைய வேண்டும் என்பது பலரின் எதிர்பார்ப்பு....................... இது எந்த வகையில் சாத்தியம் என்பது அல்லாஹ்வை தவிர வேற யாரும் அறியாத ஒன்று ..ஒரு காலங்களில் ஒருவரை ஒருவர் சந்திக்கும் பொது நீங்கள் எந்த மதம் எந்த ஊர் என்று கேட்போம் ஆனால் இன்றைக்கு அது எல்லாம் மாறி இஸ்லாமியர்களாகிய நாம் சந்திக்கும் போது நீங்கள் எந்த அமைப்பில் உள்ளவர் என்று கேட்க்கும் அளவிற்கு இன்று நம் சமுதாயம் திகழ்ந்துக்கொண்டு இருக்கிறது...இதற்க்கெல்லாம் ஏதேனும் மாற்று வழிகள் இருக்கிறதா ? அதனை நாம் அனைவரும் கொஞ்சம் சிந்தனை செய்து பார்தொமையானால் இதற்க்கு நிச்சயம் அல்லா ஒரு நல்ல வழியை காட்டுவான்......இனி வரும் காலங்களை வீணாக்காமல் சிந்தித்து செயல் பட உங்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன்....இன்னொரு இயக்கம் காண்பது மிக எளிது அத்தகைய நிலைக்கு சமுதாய தலைவர்கள் எங்களை தள்ளிவிட வேண்டாம்.  

கருத்துகள் இல்லை: