திங்கள், 1 நவம்பர், 2010

"நியூயார்க் கிரவ்ண்ட் ஸீரோவில் மசூதி வேண்டாம்" - சவூதி இளவரசர் வலீத் !

அமெரிக்காவின் நியூயார்க் நகரில்  இரட்டை கோபுரம் தகர்க்கப்பட்ட இடத்திற்கு அருகே மசூதியொன்றைக்  கட்டுவதற்கு அங்குள்ள முஸ்லிம் அமைப்பு முனைந்திருந்ததும், ஒபாமா போன்றோர் அது உரிமை என்ற அடிப்படையில் ஆதரித்ததும் அறிந்ததே.

ஆனால் மசூதி கட்டும் திட்டத்தை தவிர்க்கும்படி உலகப்பெரும் செல்வந்தர்களில் ஒருவரும் சவூதி இளவரசருமான வலீத் பின் தலால் பின் அப்துல் அஸீஸ் அல் சவூத் கருத்து தெரிவித்துள்ளார். இச்செய்தியை அரேபியன் பிசினஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.

"நியூயார்க் மசூதி கட்டுமானத் திட்டத்தில் என்னைத் தொடர்புப்படுத்தி ஏராளமான செய்திகள் வெளியானதைப் படித்தேன். ஆனால், அவை அனைத்தும் பொய்யானவை. அந்த மசூதி திட்டத்துக்கு நான் எந்தவித நிதி பங்களிப்பும் செய்யவில்லை. இரட்டை கோபுர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களின் காயங்கள் இன்னும் ஆறவில்லை. அவர்களுக்கு மதிப்பளித்து அங்கு மசூதி கட்டுவதை தவிர்க்க வேண்டும்." என்று  இளவரசர் வலீத் பின் தலால் அல் சவூத் தெரிவித்துள்ளதாக அச்செய்தி கூறுகிறது.

கருத்துகள் இல்லை: