திங்கள், 1 நவம்பர், 2010

குழந்தைகளின் நாப்கின் அணிந்து பால் பாட்டிலில் இருந்து மது குடிக்க வைக்கப்பட்ட ஆக்ஸ்போர்டு மாணவிகள் !

லண்டன் : லண்டனில் உள்ள புகழ் பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைகழக மாணவிகள் பலர் பல்கலைகழகத்தின் உள்ளே குழந்தைகளின் நாப்கின் அணிந்து கொண்டு ஒன்றுமில்லாததிலிருந்து குடிப்படதை போல் பாவித்து குழந்தைகளின் பால் பாட்டிலில் இருந்து மது குடிக்க நிர்ப்பந்திக்கப்பட்டதாக டெய்லி மெயில் பத்திரிகை தெரிவிக்கிறது.



பொதுவாக முதல் ஆண்டு மாணவிகளை ராகிங் செய்வதற்காக சில நிகழ்ச்சிகளை நடத்துவதை போல் குழந்தைகளும் இளம் வயது தாய்மார்களும் எனும் கருப்பொருளில் ஒரு நிகழ்ச்சியை தயார் செய்த மூத்த மாணவர்கள் முதலாம் ஆண்டு மாணவிகளின் மேல் குழந்தைகளின் நாப்கினை கட்டி தரையில் உருள செய்தனர். பெற்றோராக நடித்த மூத்த மாணவிகள் நகைகளை அணிந்து கொண்டு பிள்ளைகளை திட்டுவது போல் முதலாம் ஆண்டு மாணவிகளை திட்டினர்.

மேலும் புதிய மாணவிகளை தங்கள் மடியில் உட்கார வைத்து குழந்தைக்கு கொடுக்கும் புட்டி பால் பாட்டிலில் மதுவை குடிக்க வைத்தது கேவலமான ரசனையாக இருந்ததாக பார்த்தவர்கள் கூறினர். மேலும் உணவை தட்டில் கொட்டி கைகளை கட்டி புதிய மாணவிகளை வாயால் எடுத்து சாப்பிட நிர்ப்பந்திக்கப்பட்டனர். இது குறித்து பல்கலைகழக நிர்வாகம் கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது.

கருத்துகள் இல்லை: