வியாழன், 2 டிசம்பர், 2010

ஊழலுக்கு அப்பாற்பட்ட கட்சி ஆட்சிக்கு வரவேண்டும் : தா.பாண்டியன்!

தமிழகத்தின் மீது அக்கறை கொண்ட, ஊழலுக்கு அப்பாற்பட்ட ஒரு கட்சியே அடுத்து தமிழகத்தில் ஆட்சிக்கு வரவேண்டும் என இந்திய கம்யூனிஸ் கட்சியின் செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார். திருச்சியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி அனைத்து மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் தா.பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. கூட்டம் முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய தா.பாண்டியன் கூறியதாவது:

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணையை காங்கிரஸ் மறுப்பது அதர்மச் செயல். இந்த ஊழலில் பயன்பெற்றவை உயர் வகுப்பு நிறுவனங்கள். இதை தலித் கவசம் காட்டி, மூட முயல்வது அந்த சமூகத்தை அவமானப்படுத்தும் செயல்.

காமன்வெல்த் போட்டியில் ஊழல், மும்பை ஆதர்ஷ் குடியிருப்பு ஒதுக்கீடு ஊழல், வங்கி காப்பீட்டு நிறுவனங்களில் ஊழல் என தொடர்ந்து இப்போது தனியார் நிறுவனங்களுக்கு எரிவாயு வழங்குவது தொடர்பாக ரூ.81 ஆயிரம் கோடி ஊழல் நடந்து உள்ளதாக கூறப்படுகிறது. எனவே மத்தியிலும், மாநிலத்திலும் ஊழல் அதிகரித்து வருவதால் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த டிசம்பர் 6ஆம் தேதி முதல் இந்திய கம்யூனிஸ்டு ஊழல் எதிர்ப்பு இயக்கம் தொடங்குகிறது.


தமிழகத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.15 ஆயிரம் நஷ்டஈடு வழங்க வேண்டும்.

கூட்டணி குறித்து தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபிறகே இறுதி முடிவு எடுப்போம். காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியின் பலத்தை முறியடிப்பதே எங்கள் கடமை. ஊழலுக்கு அப்பாற்பட்டு தமிழகத்தின் மீது அக்கறை கொண்ட ஒரு கட்சி ஆட்சிக்கு வரவேண்டும்.

கருத்துகள் இல்லை: